என் மலர்
உண்மை எது
குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியின் நிலை என கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சேதமற்ற கட்டிடம் ஒன்றினுள் சிறுவர்கள் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் இருப்பது குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
புகைப்படத்தில் உள்ள பள்ளி கட்டிடம் அபாயகரமான சூழலில் மேற்கூரை இடிந்த நிலையில் காட்சியளிக்கிறது. சூரிய சக்தி பள்ளியை குஜராத் அரசாங்கம் திறந்துள்ளது எனும் தலைப்பில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் இது உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆகும். இந்த புகைப்படத்தை மார்ச் 9, 2018 ஆம் ஆண்டு ஜோகிந்தர் ராவத் என்ற நபர் பேஸ்புக்கில் பதிவேற்றி இருக்கிறார்.
அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் இருப்பது குஜராத் அரசு பள்ளி இல்லை என உறுதியாகிவிட்டது. இந்த பள்ளி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சரி செய்யப்படாத நிலையில் இருப்பதாக ஆகஸ்ட் 2019 வாக்கில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த பள்ளி இன்றும் சரி செய்யப்படாத நிலையிலேயே இருப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார்.
கொரோனாவைரஸ் தொற்றின் புதிய ஒமிக்ரான் வேரியண்ட் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கொரோனாவைரஸ் தொற்றின் புது வேரியண்ட் ஒமிக்ரான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. நவம்பர் 24 ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் ஏற்கனவே உலகின் சில நாடுகளில் பரவி விட்டது. கொரோனா வைரசின் புது வேரியண்ட் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முழுவீச்சில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு தற்போது நடைமுறையில் உள்ள ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளில் கண்டறிய முடியாது என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்துடன் ஒமிக்ரான் பற்றி நெடிய விவரங்களும் வைரல் பதிவுகளில் இடம்பெற்று இருக்கிறது.

வைரல் தகவல் பற்றிய இணைய தேடல்களில், 'ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்பு மிகத்தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது. எனினும், இது எந்தளவு தீவிரமாக இருக்கும், எவ்வளவு வேகமாக மற்றவர்களுக்கு பரவும், எப்படி இதனை கண்டறிவது என்பது பற்றியோ எந்த தகவலும் இதுவரை கண்டறியப்படவில்லை,' என தெரியவந்துள்ளது.
மேலும் ஒமிக்ரான் பாதிப்பு அடைந்து இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என்றும், இந்த பாதிப்பை கண்டறிய இதுவரை ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருகிறது.
நெடுந்தூரம் பயணத்து வந்த தேர்வர்கள் அசதி காரணமாக சாலையில் படுத்து உறங்கினர் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
பொது மக்கள் வீதியில் படுத்து உறங்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தில் உறங்கி கொண்டிருப்பவர்கள் நீண்ட தூரம் பயணித்து உத்திர பிரதேச மாநிலத்தின் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் கசிந்ததாக செய்தி வெளியானதை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் உறங்கி கொண்டிருப்பவர்கள் ராஜஸ்தான் எகிக்ராட் மகாசங் உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் உத்திர பிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் உள்ள இகோ பூங்காவின் வெளியில் உறங்கி கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்பூரில் இருந்து லக்னோவிற்கு பயணம் செய்து பிரியண்கா காந்தி வத்ராவை சந்திக்க வந்துள்ளனர். அந்த வகையில் வைரல் புகைப்படத்தில் உறங்கி கொண்டிருப்பவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்க வந்தவர்கள் இல்லை என உறுதியாகிவிட்டது.
நொய்டாவில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையம் இப்படி தான் காட்சியளிக்கும் என கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.
நவம்பர் 25 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். உத்திர பிரதேச மாநிலத்தின் ஜெவார் பகுதியில் இந்த விமான நிலையத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விமான நிலையம் ஆசியாவில் மிகப்பெரிய ஏரோ-டிரோம்களில் ஒன்றாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
இந்த விமான நிலையத்திற்கான முதற்கட்ட பணிகள் 2024 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றன. இந்த நிலையில், விமான நிலையம் ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் படத்தில் இருப்பது நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் மாதிரி என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதே புகைப்படத்தை செய்தி நிறுவனங்கள், பா.ஜ.க. சமூக வலைதள பக்கங்கள் பகிர்ந்து வருகின்றன.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது தென் கொரியாவில் உள்ள இன்சியான் சர்வதேச விமான நிலைய புகைப்படம் என தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றிய செய்தி குறிப்புகளும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. செய்தி குறிப்புகளின்படி இந்த புகைப்படம் நவம்பர் 5, 2017 ஆம் ஆண்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னுரை வாசிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னுரையை வாசிப்பது போன்று காட்சியளிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமித் ஷா வாசிப்பது போன்று காட்சியளிக்கும் முன்னுரையின் மற்றொரு பக்கத்தில் எதுவும் அச்சிடப்படவில்லை என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதே புகைப்படத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோக்கலே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே பதிவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது நவம்பர் 26 ஆம் தேதி பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்ட போது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. கொண்டாட்டத்தின் போது வழங்கப்பட்ட முன்னுரை ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் அச்சிடப்பட்டு இருந்தது.
அந்த வகையில், அமித் ஷா வாசித்து கொண்டிருந்த முன்னுரையில் எழுத்துக்கள் இடம்பெறவில்லை என வைரலான தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் சமீப நாட்களில் மிக கொடூர தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.
மணிப்பூர் மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நவம்பர் 13 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாகுத்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன. இத்துடன் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இரண்டு புகைப்படங்கள் மணிப்பூர் தாக்குதலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்களை பல்வேறு வெரிபைடு பக்கங்கள், மத்திய அமைச்சர்கள் பகிர்ந்துள்ளனர். இதில் ஒரு புகைப்படத்தில் ராணுவ வாகனம் எரிந்த நிலையில் சாலையின் ஓரத்தில் நிற்கிறது. இரண்டாவது புகைப்படம் உயிரிழந்த ராணுவ கர்னல் குடும்பத்தினருடன் நிற்கிறார்.
வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இரண்டு புகைப்படங்களும் சமீபத்திய தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் எரிந்த நிலையில் இருக்கும் ராணுவ வாகனத்தின் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் போது ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவு தலைப்பில் பிரதமர் மோடியின் பாதுகாவலர் சிவராஜ் சிங் சவுகானை தடுத்து நிறுத்தினார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவு குறித்த இணைய தேடல்களில், வீடியோவில் சிவராஜ் சிங் சவுகானுடன் பேசிய போபால் மாவட்ட கலெக்டர் அவினாஷ் லாவினா வைரல் பதிவுகளில் உண்மையில்லை என தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கலெக்டர் அவினாஷை பிரதமரின் பாதுகாவலர் என வைரல் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 15 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தார். அங்கு பிர்சா முண்டா பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பழங்குடியினர் வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவே தவறான தலைப்பில் வைரலாகி வருகிறது.
நீட்டா அம்பானி குடிக்கும் குடிநீரின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி பார்ப்போம்.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் தலைவர் நீட்டா அம்பானியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஜூலை 6, 2021 ஆம் ஆண்டு வெளியான ஜி.கியூ. இந்தியா அறிக்கையின் படி 'அக்வா டி க்ரிஸ்டாலோ டிரிபியூடோ அ மோடிகிலானி' என்ற பெயர் கொண்ட குடிநீர் பாட்டில் ஒன்றின் விலை ரூ. 44.5 லட்சம் ஆகும். இது 2010 ஆம் ஆண்டு உலகின் விலை உயர்ந்த குடிநீர் என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது.

நீட்டா அம்பானி உலகின் விலை உயர்ந்த குடிநீரை குடிக்கிறார். இதன் விலை ஒரு பாட்டிலுக்கு ரூ. 40 லட்சம் ஆகும். தன்னை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள நீட்டா அம்பானி குடிக்கும் நீர் 750 மில்லி லிட்டர் விலை ரூ. 40 லட்சம் ஆகும். என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது. உண்மையில் நீட்டா அம்பானி பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரையே குடிக்கிறார். இதன் அசல் புகைப்படம் இணையத்தில் கிடைக்கிறது. உண்மையில் உலகின் விலை உயர்ந்த குடிநீர் இந்திய மதிப்பில் ரூ. 39.40 லட்சம் விலைக்கு 2010 ஆம் ஆண்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வற்புறுத்தியதால் தான் நாட்டை விட்டு ஓடியதாக லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு நிரவ் மோடி ரூ. 456 கோடி கமிஷனாக வழங்கியதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்ததார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், நிரவ் மோடி கூறியதாக வலம்வரும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முன்னதாக நிரவ் மோடி ஊழலில் பா.ஜ.க. கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் தகவலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் சிக்கிய நிரவ் மோடி 2018 ஜனவரி மாத வாக்கில் நாட்டை விட்டு தப்பி சென்றார். பின் மார்ச் 16, 2019 ஆம் ஆண்டு இவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். இவரது கைதை தொடர்ந்து இவர் கூறியதாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் நிரவ் மோடி காங்கிரஸ் கட்சிக்கு கமிஷன் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார் என கூறி வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்டதாக கூறி அசத்தலான புகைப்படம் வைரலாகி வருகிறது.
விண்வெளியில் இருந்தபடி நாசா எடுத்ததாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூமியில் சூரிய மறைவு விண்வெளியில் இப்படித் தான் காட்சியளிக்கும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் புகைப்படம் குறித்த இணைய தேடல்களில் அது விண்வெளியில் இருந்து பூமியில் ஏற்படும் சூரிய மறைவின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் இது விண்வெளியில் இருந்தபடி பூமியில் ஏற்படும் சூரிய உதயத்தின் காட்சி ஆகும். மேலும் இது புகைப்படம் அல்ல. கணினியில் உருவாக்கப்பட்ட படம் ஆகும்.

இதே படம் 2021, செப்டம்பர் 22 ஆம் தேதி ரெடிட் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட் ஆகும். இந்த வீடியோவின் இணைய முகவரியும் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் புகைப்படம் விண்வெளியில் இருந்து எடுக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலி வீடு தாக்கப்பட்டதாக கூறி தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தோல்விக்கு அந்நாட்டு வீரர் ஹசன் அலி தவற விட்ட கேட்ச் தான் காரணம் என கடும் விமர்சனம் எழுந்தது.
இந்த நிலையில், உடைந்த கண்ணாடி கொண்ட வீடு ஒன்றின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் ஹசன் அலியின் வீடு என்றும், அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்றும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் தாக்குதலை தொடர்ந்து வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. ஹசன் அலி குடும்பத்தார் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர்கள் தரப்பில் இருந்து ஹசன் அலி வீட்டின் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உண்மையில் புகைப்படத்தில் உள்ள வீடு கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இவர் விளம்பரதாரர் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் இரு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் நமீபியா அணிகளை வீழ்த்தியதன் மூலம் ஆப்கானிஸ்தான் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரர் ஆக தலிபான் மறுத்துவிட்டதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணியின் விளம்பரதாரர் பொறுப்பை அந்த அணியின் கேப்டன் மொகமது நபி ஏற்று இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், செடிகி க்ருப் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கான விளம்பரதாரர் என தெரியவந்துள்ளது. ஆப்கன் அணி விளம்பரதாரர் பற்றிய கேள்விக்கு வைரல் தகவல்களில் உண்மையில்லை என மொகமது நபி தெரிவித்தார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி விளம்பரதாரர் பற்றி வைரலான தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.






