search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணிப்பூர் தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்
    X
    மணிப்பூர் தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம்

    மணிப்பூர் கொடூர தாக்குதலில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

    மணிப்பூர் மாநிலத்தில் சமீப நாட்களில் மிக கொடூர தாக்குதல் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர்.


    மணிப்பூர் மாநிலத்தின் சூரசந்த்பூர் மாவட்டத்தில் நவம்பர் 13 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய ராணுவத்தின் கர்னல், அவரது மனைவி, மகன் மற்றும் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 

    இந்த தாகுத்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தன. இத்துடன் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இரண்டு புகைப்படங்கள் மணிப்பூர் தாக்குதலில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இந்த புகைப்படங்களை பல்வேறு வெரிபைடு பக்கங்கள், மத்திய அமைச்சர்கள் பகிர்ந்துள்ளனர். இதில் ஒரு புகைப்படத்தில் ராணுவ வாகனம் எரிந்த நிலையில் சாலையின் ஓரத்தில் நிற்கிறது. இரண்டாவது புகைப்படம் உயிரிழந்த ராணுவ கர்னல் குடும்பத்தினருடன் நிற்கிறார். 

    வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில் இரண்டு புகைப்படங்களும் சமீபத்திய தாக்குதலின் போது எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. புகைப்படத்தில் எரிந்த நிலையில் இருக்கும் ராணுவ வாகனத்தின் புகைப்படம் 2015 ஆம் ஆண்டு பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×