என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாகர பிரபு (வயது33). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தன்னை மறு வாழ்வு மையத்தில் சேர்க்குமாறு தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தாயும், மனைவியும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி கதவைத் தட்டியபோது திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரபிரபு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • அருப்புக்கோட்டை டவுன் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்ைட அருகே உள்ள தேவடெக்ஸ் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது38). இவர் அதே பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துப்பாண்டி(33). இவர் காந்தி நகரில் உள்ள அட்டை கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை 2 பேர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இதை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த னர். பின்னர் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    மாலையில் வே லை முடிந்து வீடு திரும்பிய கணவன்-மனைவி கதவு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அருப்புக் கோட்டை டவுன் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது.
    • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி அங்குள்ள சிலைக்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து அன்ன தானத்தை தொடங்கி வைத்த அவர் நரிக்குடி அருகே உள்ள என்.முக்குளம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மருது பாண்டியர்கள் படத்துக்கு மாலை அணிவித்தார். அப்போது கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறுகையில், எடப் பாடி பழனிசாமி ஆட்சியில் தான் தியாகிகளுக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    அவர் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் தியாகிகள் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறை வேற்றப்படும். மேலும் மருதுசகோதரர்கள் பிறந்த என்.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதேபோல் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. ரவிச்சந்திரன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனுமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன ஆகியோர் தலைமையில் மருதுபாண்டி யர்கள் சிலைக ளுக்கு மாலையணிவித்து மரியா தை செலுத்தப்பட்டது. அப்போது வாரிசு தாரர்க ளின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்படு மென அவர்கள் தெரி வித்தனர்.

    இந்த குருபூஜை விழாவில் முன்னாள் நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து பிரிவு துணை செயலாளர் பி.வி.வீரேசன்,நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் சரளா தேவி போஸ்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பள்ளப் பட்டி முருகன்,கூட்டுறவு சங்க தலைவர்களான நாயனேந்தல் மனோகரன், பனைக்குடி ராஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இந்த விழாவில் திரளாக கலந்து கொண்டனர்.

    • ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு விருதுநகர் கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    • பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பில் தேசிய தன்னார்வ ரத்ததான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் 140 ரத்ததான முகாம் அமைப்பா ளர்கள், அரசு ரத்த வங்கி ஊழியர்கள் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கங்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    பின்னர் அவர் கூறிய தாவது:-

    ரத்தம் உயிரின் நாடி என்பதால், ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரை காப்பாற்றும் புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ரத்த தானத்தின் அவசியத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து, தமிழ்நாட்டில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

    சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில், இருந்து வெறும் 300 முதல் 350 மில்லிலிட்டர் (ஒரு யூனிட்) ரத்தம் மட்டுமே தானத்தின் போது பெறப்படும். அவ்வாறு கொடுத்த ரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி ரத்த தானம் செய்யலாம்.எனவே, பொதுமக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) யசோதாமணி, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு, மாவட்ட திட்ட மேலாளர் வேலய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    விருதுநகர்:

    மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசுவரன் (வயது59). விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைப்பதிவாளராக உள்ளார். இவர் நேற்று பணி முடிந்து அங்கு கேமரா ஆபரேட்டராக வேலை பார்க்கும் தனது உதவியாளர் முத்துகாசியுடன் மதுரைக்கு காரில் புறப்பட்டார்.

    சத்திரரெட்டியப்பட்டி போலீஸ் சோதனை சாவடி அருகே லஞ்ச ஒழிப்புத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சுந்தரேசுவரனின் காரை நிறுத்தி அவர்கள் சோதனையிட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.25 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பத்திரப்பதிவு அலுவலகத்தில் 2 நாட்கள் வசூலித்த பணம் என கூறி உள்ளார். ஆனால் சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது அலுவலகத்தில் சோதனையிட முடிவு செய்தனர். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன்துரை, பூமிநாதன் ஆகியோரின் தலைமையில் விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரவு 8 மணியளவில் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்கு பணம் எதுவும் சிக்கவில்லை. இதனை தொடர்ந்து சுந்தேரசுவரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் பணம் வைத்திருப்பதாக அவர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.11 லட்சம் பணம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்தபோது பத்திரப்பதிவு செய்ய வருபவர்களிடம் தலா ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்று வந்ததும், தினமும் ரூ.1,200 வாடகை கொடுத்து காரில் மதுரையில் இருந்து விருதுநகருக்கு வந்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சுந்தரேசுவரன், முத்துகாசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆலோசனைபடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த வாரம் ராமநாதபுரம் சார்பதிவாளர் பெத்துலட்சுமி பஸ் நிலையத்தில் லஞ்ச பணம் வாங்கும்போது கையும், களவுமாக சிக்கினார். அவர் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூ.12 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் விருதுநகர் இணைப்பதிவாளர் கார், வீட்டில் இருந்து ரூ.12¼ லட்சம் சிக்கி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பத்திரப்பதிவு அலுவலங்களில் இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொள்ளும்போது கட்டு கட்டாக பணம், ஆவணங்கள் சிக்குவது வாடிக்கையாக உள்ளது.

    லஞ்சம் பெறும் அதிகாரிகளும் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். ஆனாலும் லஞ்சம் பெறுவதும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகளவில் முறைகேடாக பணம் புழங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    பத்திரப்பதிவு அலுவலங்களில் முறைகேடாக பண பரிமாற்றம் நடப்பதை முழுமையாக தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பாராமுகமாக இருப்பதால் குடிமகன்களின் ‘பாராக’ மாறிவரும் ராஜபாளையம் ஜவகர் மைதான மேடை.
    • இரவில் வெளியே வர குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.

    ராஜபாளையம்

    'காட்டன் சிட்டி' என்று பெருமையுடன் அழைக்கப்ப டும் விருதுநகர் மாவட்டத் தின் முக்கிய தொழில்நகர மாக திகழும் ராஜபாளையம் பல்வேறு வரலாற்று சான்று களையும் தாங்கியுள்ளது.

    அதிலும் குறிப்பாக தேசத் தந்தை மகாத்மா காந்தியடி கள், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஜவஹர்லால் நேரு, பசும்பான் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தேசத்தலை வர்களும் அண்ணா, பெரி யார், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர் களும் பொதுக்கூட்டத்தில் பேசி வரலாறு கண்ட ஜவ கர் மைதானம் ராஜபாளை யம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

    இதனாலேயே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிக ளுமே பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுப்பது ராஜபாளையம் ஜவகர் மைதானத்தை மட்டுமே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் பொதுக்கூட்ட மேடை ஜவஹர் மைதானத் தின் கிழக்குப் பகுதியில் மேற்கு பார்த்து அமைக்கப் பட்டது.

    இது சற்று உயரமாக இருப்பதால் மேடையில் இருப்பவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு சரியாக தெரிவ தில்லை என்று கருதிஅதன் எதிர்புறம் மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து தற்காலிக மேடை அமைத்து பொதுக் கூட்டம் நடத்துவதை அனைத்து கட்சிகளும் வழக் கமாகக் கொண்டுள் ளது. இதனால் உபயோகப்படுத் தாமல் இருக்கும் கிழக்கு புறம் அமைந்துள்ள மேடை யினை குடிமகன்கள் பாராக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    காவல் துறை அதிகாரி களும் பாராமுகமாக இருப்ப தால் தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் குடிமகன்கள் மேடை முழுவதும் ஆக்கிர மித்து விடிய, விடிய மது அருந்துகிறார்கள். வார சம்பளம் பெறும் தொழிலா ளிகள் சனிக்கிழமை இரவு வாங்கும் சம்பளத்தை இந்த மேடையில் அமர்ந்து மது அருந்தி சம்பள பணத்தை கரைத்து விட்டு வீட்டில் பெயில் மார்க் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

    இவர்களை மகிழ்ச்சியூட் டூம் விதமாக திருநங்கைகள் சிலர் அழகு மங்கைகளை போல அலங்காரம் செய்து கொண்டு மேடையில் இருப் பவர்களுக்கு ஜாடை காட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனால் விடிய, விடிய இவர்கள் அட்டகாசம் தாங் காமல் அருகில் உள்ள குடி யிருப்புவாசிகள் இரவு ஆகி விட்டால் வெளியே வரு வதே இல்லை.

    பாதுகாப்பில்லாத சூழ் நிலை ஏற்படுவதால் இது குறித்து காவல்துறை உடன டியாக நடவடிக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்கூட்ட மேடை மது கூட மேடையாக மாறியிருப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு இரவும் மதுப் பிரியர்கள் அருந்தும் மது பாட்டில்களை அருகில் வீசி விட்டு செல்வதும் வாடிக் கையாகி விட்டது.

    ஞாயிற்றுக்கிழமை வந்து–விட்டால் சண்டேனா இரண்டுடங்கிற மாதிரி அந்த பகுதியில் சேகரிக்கப்ப டும் மது பாட்டில்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங் குகிறது. இது போதா தென்று பற்றாக்குறைக்கு குடிமகன்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு அடிதடி என்றும், சில சமயம் பாட் டில் வீச்சும் நடக்கிறது. அந்த மேடையை டெண்டர் விட்டு பார் வைக்க முறைப்படி அனுமதி கொடுத்து விட லாம் என்று சமூக ஆர்வலர் கள் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.

    குறைகளை நாங்கள் தெரிவித்து விட்டோம், நிறை களை காண சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாட் டையை கையில் எடுப்பார் களா? என்பதை பொருத்தி ருந்துதான் பார்க்க வேண் டும்.

    • விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய 976 தொழிலாளர்களுக்கு பரிசு-சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் டிவிசன் தி ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ், சுதர்சனம் பேப்ரிக்ஸ், மற்றும் தரம் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலா ளர்களுக்கான 42-வது ஆண்டு விஜயதசமி விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் ஆலையின் வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை தாங்கினார்.

    மில்களின் மேனேஜிங் டைரக்டர்கள் என்.ஆர்.கே.ராம்குமார் ராஜா, நளினா ராமலட்சுமி, ஸ்ரீகண்டன் ராஜா, பி.ஜே. ராம்குமார் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மை நிதிநிலை அதிகாரி விஜய்கோபால் வரவேற்றார். விழாவில் ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் பல்வேறு நீண்ட கால சலுகைகள் பற்றி பேசினர்.

    விழாவில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா பேசுகையில், தொழி லாளர்கள் அர்ப்பணிப்பு கலந்த உணர்வோடு பணிபுரிந்து வருவதால் இந்த நிறுவனம் 83 வருடம் இளமையா னதாகவும் மற்றும். உத்வேகம் கலந்த நிறுவனமாகவும் திகழ்கிறது என கூறினார்.

    பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    கடந்த ஆண்டில் ஆலையில் சிறந்த முறையில் பணியாற்றி 15 முதல் 35 வருடம் சர்வீஸ் பூர்த்தி செய்த தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய தொழிலாளர்கள், தொடர்ந்து விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய தொழிலாளர்கள், சென்ற ஆண்டில் 295 நாட்களுக்கு மேல் பணியாற்றிய தொழிலாளர்கள் என சுமார் 976 தொழி லாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் பிரசிடெண்ட் மோகன் ரங்கன், மூத்த பொது மேலாளர் சந்தோஷ், பொது மேலாளர் சுந்தர்ராஜ், நிர்வாகஅதிகாரிகள், அலுவலர்கள் ஊழியர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மனித வள மேம்பாட்டு துறை துணை பொது மேலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.

    • மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச் சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

    இந்த கூட்டத்தில், விருது நகர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது தீர்வு வழங்குதல், தீர்வு வழங்க எடுத்துக்கொள்ளும் சராசரி கால அளவு, பட்டா மாறுதலுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள், அதன் நிலவரங்கள், இசேவை மையங்கள் வட்டார அளவில் தற்போது வரை பெறப்பட்டுள்ள விண்ணப் பங்கள்,

    நிலுவை விவரங்கள், பாலின விகிதம், ஊரக, நகர்ப்புறப் பகுதி களில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள், அரசு மருத்துவ மனைகளில் நோய் வாய்ப்பட்டு பிறந்த குழந்தைகள் சேர்க்கை மற்றும் அதற்கான காரணங்கள், கருவுற்ற வளர் இளம் பெண்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ உதவி, தாய்மார்கள் இறப்பு,

    அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் மேற்கொள்ளப் படும் பரிசோதனைகள், RBSK திட்டத்தின் கீழ் 7 முக்கிய அறுவை சிகிச்சை யின் செயல்திறன், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் நோய் கண்டறியப்படு வதின் செயல்பாடுகள், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காந் பீட்டு திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும்-48,

    உழவர் சந்தைகளின் செயல்பாடு கள், ஆவின் கூட்டுறவுச் சங்கங்களின் செயல்திறன், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை புதிய தொழில்முனைவோர் மற்றும் நடுத்தர மேம்பாட்டுத் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்க ளின் மூலம் செயல் படுத்தப் பட்டுள்ள பணிகள் மற்றும் மேற்கொள்ள உள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவை யில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற் கொண்டு, நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணி களை தரமாக விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தி னர்.

    நிகழ்ச்சியில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அரசு செயலர் தாரேஸ் அகமது, தனுஷ் எம்.குமார் எம்.பி., ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்,

    எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கபாணடியன், ரகு ராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் , விருதுநகர் நகர் மன்றத்தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுமதி ராஜசேகர், வாழ்ந்து காட்டுவோம், தாட்கோ அலுவலர்கள் உட்பட உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்,

    • காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அச்சம்தவிர்த்தான் பகுதியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 24).

    இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அகாடமியில் சில ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினீயரிங் படித்தார்.

    அப்போது அவருடன் படித்த ஒரு பெண்ணை சதீஷ்குமார் காதலித்து வந்ததாக தெரிகிறது. படித்த பின்பும் 2 பேரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் சதீஷ்குமார் பெண்ணின் வீட்டுக்கு சென்று காதல் விவ காரத்தை கூறி திரு மணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார். ஆனால் பெண் வீட்டார் சில காரணங்களை கூறி திரும ணத்துக்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் கடந்த சில வாரங்களாக விரக்தியுடன் காணப் பட்டார்.

    காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்ற கவலையோடு இருந்து சதீஷ்குமார் சம்பவத்தன்று வீட்டின் மாடி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதல் தோல்வியில் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வத்திராயிருப்பு அருகே விவசாய தொழிலாளி மோட்டார் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
    • மகளுக்கு திருமண நிச்சயம் செய்திருந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி ராமசாமியாபுரத்தை அடுத்துள்ள ஆத்தங்கரை பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 47). இவருக்கு கிருஷ்ணம்மாள் (39) என்ற மனைவியும், மகன் மகள்களும் உள்ளனர்.

    ராஜா மற்றும் அவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து விவசாயம் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜா தனது மகளுக்கு திருமண நிச்சயம் செய்தி ருந்தார். இதற்காக உறவினர் வீடுகளுக்கு சென்று அழைப்பிதழை கொடுத்து வந்தனர்.

    சம்பவத்தன்று கிருஷ் ணம்மாள் மட்டும் திரும ணத்திற்கு அழைப்பிதழை கொடுக்க வெளியூர் சென்று விட்டார். 2 நாட்களுக்கு பின்பு ஊர் திரும்பிய கிருஷ்ணம்மாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்தார். அப்போது தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையில் ராஜா மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணம்மாள் உடனே கூமாபட்டி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜா எப்படி இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மகளுக்கு திருமணம் நடக்க உள்ள நிலையில் தந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகரில் நடந்த விழாவில் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க.மற்றும் அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். மாவட்ட எல்லையில் அவருக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள விடுதியில் தங்கினார். இன்று காலை விருதுநகர் ராமமூர்த்தி ரோடு நகராட்சி மைதானத்தில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. இதில் மாநில இளைஞரணி செயலா ளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து 11.30 மணிக்கு கல்லூரி சாலையில் அமைக்கப் பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்க பாண்டியன், சீனிவாசன், முக்கிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் உதய நிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திரளான தொண்டர்கள் பொதுக் கூட்ட மேடை முன்பு குவிந்த னர். மதியம் விருதுநகரில் போட்டி தேர்வுக்கான பயிற்சி பூங்காவை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து மருத் துவ கல்லூரி கலைய ரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் ரூ.88 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார்.

    • சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் ஆய்வு செய்தார். லட்சுமி நாராயண புரம் ஊராட்சி பாறைப் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டுள்ள சமை யலறை கூடம், கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.80.90 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சாலை, ரூ.8.44 லட்சம் மதிப்பில் மயானத்தில் காத்திருப்போர் கூடம் கட்டிடப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி யில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், ரூ.3.49 லட்சம் மதிப்பில் கிருஷ்ணாபுரம் ஊரணி தூர்வரப்பட்டு குளியல் தொட்டி அமைக்கும் பணி, ரங்க பாளையம் ஊராட்சியில் ரூ.29.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், ரூ.33.24 லட்சம் மதிப்பில் நாகரத்தினம்மாள் நகர் தெருவில் அமைக்கப் பட்டுள்ள சிமெண்ட் தளம்,

    மங்கலம் ஊராட்சி கோபாலன்பட்டி கிரா மத்தில் ரூ.5.58 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள சிமெண்ட் தளம் ஆகிய வற்றை கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், உதவி பொறியா ளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×