search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம்
    X

    சதுரகிரி கோவிலுக்கு மலையேறி சென்ற பக்தர்கள்.

    சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம்

    • சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் மேக மலை புலிகள் காப்பகத்தில் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர மகா லிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில்கள் உள்ளது. ஒவ் வொரு மாதம் அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமியை வழிபட அனுமதி வழங்கப்படும்.

    ஐப்பசி பவுர்ணமி

    அந்த வகையில், ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல் வதற்கு அக்டோபர் 26 முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் வனத்துறை சார் பில் அனுமதி வழங்கப்பட் டது.

    பிரதோஷத்தையொட்டி, 259 பேரும், வெள்ளிக்கிழமை 252 பேரும், சதுரகிரி மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். சனிக்கி ழமை பவுர்ணமியையொட்டி அதிகாலை முதலே தாணிப் பாறை அடிவாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். காலை 6 மணி தாணிப்பாறை அடி வாரத்தில் உள்ள வனத் துறை நுழைவு வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதி பவுர்ணமியையொட்டி சந் தன மகாலிங்கம் சுவா மிக்கு அன்னாபிஷேகம் நடைபெற் றது. இதில் 4,300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வா கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×