என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளராக சரவணமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
    • தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளராக சங்கரபாண்டியபுரத்தை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலரான எம்.ஏ.பி. சரவணமுருகன் போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுக்க ப்பட்டுள்ளார்.

    விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன் முன்னிலையில் தேர்தல் ஆணையாளர் சீனிவாசன், சரவணமுருகனிடம் சான்றிதழை வழங்கினார்.

    கிழக்கு ஒன்றிய அவைத்தலைவராக குருசாமி, பொருளாளராக விவேகானந்தன், துணை செயலாளராக ராஜா விக்னேஷ் ராமேஸ்வரி, மாவட்ட பிரதிநிதியாக முத்து, மாமுண்டி, வேல்முருகன், லட்சுமணன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

    • கந்துவட்டி குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தியுள்ளது.
    • ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    சிவகாசி

    விருதுநகர் மத்திய மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல், விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் சிவகாசி பகுதியில் கந்து வட்டிக்காரர்கள் தரும் தொல்லை அதிகளவில் உள்ளது. இது குறித்து புகார் கொடுக்க பாதிக்கப்பட்டவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் கந்துவட்டி கும்பல் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வருவதில்லை.

    அதனால் மாவட்ட போலீஸ் நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார்கள் வாங்க மாவட்ட அளவில் அல்லது தாலுகா அளவில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இதில் கொடுக்கப்படும் மனுக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரடி பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் கந்து வட்டிக் காரர்களின் பிடியில் இருந்து ஏழை அப்பாவி தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

    துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் ஏ.டி.எம். கார்டுகளை கந்துவட்டி கும்பல் பறித்து கொண்டு வட்டி வசூல் செய்வதாக தகவல் வருகிறது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடையாளம் தெரியாத வாகனம் வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
    • அப்பநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் அருகே உள்ள சிறுகுளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி மீனாட்சி (65). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மீனாட்சி மீது மோதி விட்டு சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து அப்பநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டையில் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் நகராட்சி ஊழியர் தூக்கில் தொங்கினார்.

    விருதுநகர்

    மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது47). இவருக்கும் அருப்புக் கோட்டையைச் சேர்ந்த இந்திரா தேவி (45) என்பவருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்க ளுக்கு குழந்தை இல்லை.

    இதனால் மனவே தனையில் இருந்த இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக மன மாற்றத்திற்காக அருப்புக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த இந்திராதேவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள செட்டி பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (வயது 26). இவர் தனியாக வசித்து வந்தார். சில மாதங்களாக மன நிலை பாதிக்கப்பட்ட லட்சுமி அம்மாள் சம்பவத்தன்று அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து பந்தல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சத்யசாய் நகரை சேர்ந்தவர் இன்னாசி முத்து (55). இவர் விருதுநகர் நகராட்சியில் குடிநீர் வினியோக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் மீண்டும் அவருக்கு இருதய வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த இன்னாசிமுத்து சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பள்ளி மாணவி-இளம்பெண்கள் மாயமானார்கள்.
    • இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள அம்பனேரி பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து பூங்கொடி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் மில்லில் டிரைவராக வேலை பார்க்கும் தேனூரை ஊரைச் சேர்ந்த பிச்சைமணி எனது மகளை கடத்திச் சென்றிருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள உச்சனேந்தலை சேர்ந்தவர் பெத்தம்மாள். சம்பவத்தன்று இவர் இலங்கிபட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இவரது மகள் திடீரென மாயமானார்.

    பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து கட்டனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்த 14 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மாய மான மாணவியை தேடி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்து மணி கண்டன். திருமணமான இவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது. இதனை ஊர் பெரியவர்கள் கண்டித்துள்ளனர். இதில் விரக்தி அடைந்த முத்து மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியேறி மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.
    • சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். மாதத்தில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்று வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்ட ங்களில் திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மலை அடிவாரமான குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர். விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால்,பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்களுக்கு தேவை யான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ராஜபாளையம் அருகே மதுபோதையில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்தவர் பலியானார்.
    • சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரில் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் உள்ளது.

    இந்தத் தெப்பக்குளம் அருகில் பாலம் உள்ளது. அதில் நேற்று மாலை 45 வயது மதிக்கத்தக்க நபர் மது போதையில் படுத்து இருந்தார். அவர் திடீரென தவறி தெப்பக்குளத்தில் விழுந்து விட்டார்.

    இதனை கண்ட துப்புரவுத்தொழிலாளர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தெப்பக்குளத்தில் தவறி விழுந்து பலியானவர் யார்? என்று தெரியவில்லை. இது குறித்து சேத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜகணபதி கொடுத்த புகாரின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மணி மண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆடி,தை, பங்குனி மாதங்களில் அதிக ளவிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து அலகு குத்தி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகிறார்கள். கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அந்த ஆடுகள் பலியிட்டு சமைத்து சாப்பிட்டு செல்வது வழக்கம்.

    கோவிலில் நேர்த்தி கடன்களை செலுத்த வசதிகள் அமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கோவில் வளாகத்தில் 20 விருந்து மண்டபங்கள் கட்டுவதற்கு 2020-21-ம் ஆண்டு சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

    அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 50 லட்சம் தொகையில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மதிப்பீடு மற்றும் ஒப்பந்தப்புள்ளி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனைத்தொடர்ந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி, இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், சாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான வேலைக்கான பணி ஆணை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது.
    • மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் வரவேற்று பேசினார். துணை முதல்வர் பாலமுருகன் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, தற்காலத்தில் மிதிவண்டியின் உபயோகத்தை அதி கரிப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார்.இந்த மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாகவும் கூறப்படுகிறது.
    • இதுபற்றி அந்த மாணவி தெரிவித்ததால் உடன்படிக்கும் மாணவிகள் இன்று மதியம் கல்லூரி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் ஒரு தனியார் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளராக டாஸ்வின் (45) என்பவர் இருந்து வருகிறார்.

    இவர் அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாகவும், வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தெரிவித்ததால் உடன்படிக்கும் மாணவிகள் இன்று மதியம் கல்லூரி முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாசில்தார் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி தாளாளரிடம் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருந்த போதிலும் மாணவிகள் கலைந்து செல்லாமல் கல்லூரி தாளாளரை உடனடியாக அழைத்து வந்து எங்கள் முன்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

    • பெரியகுளம் கண்மாயில் வேகமாக குறையும் நீர்மட்டத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    • கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் பெரியகுளம் கண்மாய், வீராக சமுத்திரம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த இரு கண்மாயை நம்பி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயிகள் தென்னை, நெல் ஆகியவற்றை விவசாயம் செய்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக இந்த கண்மாய் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கோடை கால நெல் அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கி்றது. அறுவடை முடித்தவர்கள் முதல் போக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய பணியினை தொடங்கு வதற்கு வயல்களை தயார் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள சூழ்நிலையில் கண்மாயில் உள்ள தண்ணீர் குறைந்து வருகிறது. கடும் வெயிலின் காரணமாக நீர்மட்டம் வெகுவாக குைறந்து வருகிறது. தற்போது முதல் போக நெல் நடவு செய்வதற்காக நெல் நாற்றங்கால் பாவ போதுமான தண்ணீர் கிணறுகளில் இருப்பதால் நாற்றங்கால் பணியை தொடங்கி உள்ளோம்.

    மேலும் கண்மாயில் தற்போது 20 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளது. இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டால் நீர்மட்டம் வெகு வாக பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை யுடன் கூறினர்.

    • இரட்டைக்கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கண்ணனுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுபபிரமணியன் திருமணமாகி தனது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். 2-வது மகன் ஆறுமுகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது 3-வது மகன் கே.சந்தனக்குமார் (வயது23) கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார்.

    சந்தனக்குமாருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொத்தையன் என்பவரின் மகன் பி.மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தடங்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு ஆடுகள் திருட்டு போயுள்ளன. அதற்கு காரணம் சந்தனக்குமார் என ஊர்க்காரர்களிடம் பி.மணிகண்டன் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு சந்தனக்குமார் மற்றும் அவரது நண்பர் கே.மணிகண்டன் ஆகிய இருவரும் தங்களின் கிராமத்தில் உள்ள கோவில் கொடிமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அங்கு பி.மணிகண்டன் வந்துள்ளார். அப்போது ஏற்கனவே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒருவரை ஒருவரை தாக்கி கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அவர்களுக்குள் மேலும் விரோதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த சந்தனக்குமார் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கே.மணிகண்டன் (19) என்பவருடன் சுற்றித்திரிந்துள்ளார்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அங்குள்ள கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

    இந்த இரட்டைக் கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனை வெட்டி படுகொைல செயதவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன் விரோதம் காரணமாக தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இருவரையும் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடினர். ஆனால் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×