search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விருதுநகர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் மகன்-வாலிபர் வெட்டிக்கொலை
    X

    விருதுநகர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரின் மகன்-வாலிபர் வெட்டிக்கொலை

    • இரட்டைக்கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கண்ணனுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுபபிரமணியன் திருமணமாகி தனது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். 2-வது மகன் ஆறுமுகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது 3-வது மகன் கே.சந்தனக்குமார் (வயது23) கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார்.

    சந்தனக்குமாருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொத்தையன் என்பவரின் மகன் பி.மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தடங்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு ஆடுகள் திருட்டு போயுள்ளன. அதற்கு காரணம் சந்தனக்குமார் என ஊர்க்காரர்களிடம் பி.மணிகண்டன் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு சந்தனக்குமார் மற்றும் அவரது நண்பர் கே.மணிகண்டன் ஆகிய இருவரும் தங்களின் கிராமத்தில் உள்ள கோவில் கொடிமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அங்கு பி.மணிகண்டன் வந்துள்ளார். அப்போது ஏற்கனவே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒருவரை ஒருவரை தாக்கி கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அவர்களுக்குள் மேலும் விரோதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த சந்தனக்குமார் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கே.மணிகண்டன் (19) என்பவருடன் சுற்றித்திரிந்துள்ளார்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அங்குள்ள கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

    இந்த இரட்டைக் கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனை வெட்டி படுகொைல செயதவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன் விரோதம் காரணமாக தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இருவரையும் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடினர். ஆனால் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×