என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் அருகே அரசு பள்ளிக்கு ரூ.50 லட்சத்தில் வகுப்பு அறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான பூமி பூஜை நடந்தது.

    தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி.முன்னிலை வகித்தார்.

    இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு சொந்த செலவில் நூலக வசதி ஏற்படுத்தி தர தயாராக இருக்கிறேன். அதேபோல அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் ஆண்டு விழா நடத்த மாவட்ட கல்வி அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆண்டுவிழா போட்டி களில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்க உள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக வழிநடத்திச்செல்வேன்.

    கல்விக்கு பெருந்தலைவர் காமராஜர் எவ்வளவு முக்கியத்துவம் அளித்தாரோ, அதுபோல அண்ணா, கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்றார்.

    இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் கற்பகம்மாள் தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, அமுதரசன், தங்கப்பான், சீதாராமன், வைரவன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து சபரியின் செல்போன் சிக்னல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • செல்போன் சிக்னல் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே பி.தொட்டியாங்குளம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது சகோதரர் சபரி (வயது 34), உறவினர் ரத்தினவேல் பாண்டியன் (32).

    இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. செல்போன் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் பதட்டம் அடைந்த அவரது குடும்பத்தினர் அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து சபரியின் செல்போன் சிக்னல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது செல்போன் சிக்னல் அருப்புக்கோட்டை புறவழிச்சாலை அருகே பி.தொட்டியாங்குளம் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடினர். அப்போது சர்வீஸ் சாலை கிழக்கு பகுதியில் உள்ள முனியப்பசுவாமி கோவில் அருகே சபரி, ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களில் சரமாரி வெட்டுக்காயங்கள் இருந்தன.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன், அருப்புக்கோட்டை நகர் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், சோபியா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அருப்புக்கோட்டையில் நடந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    திருச்சுழி அருகே உள்ள உடையனம்பட்டியை சேர்ந்தவர் ராக்கம்மாள். தி.மு.க மகளிர் அணி துணை செயலாளராக இருந்த இவர் தனது அக்காள் மகள் சோலைமணி என்பவரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.

    சோலைமணிக்கும், அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் திருமணம் நடந்தது. ஆனால் சில மாதங்களிலேயே சோலைமணி கணவரை பிரிந்து ராக்கம்மாள் வீட்டுக்கு வந்து விட்டார். மூர்த்தி பலமுறை மனைவியை சமரசம் செய்ய முயன்றும் பலனில்லை. மனைவி பிரிந்து சென்றதற்கு ராக்கம்மாள் தான் காரணம் என கருதிய மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கடந்த மார்ச் மாதம் ராக்கம்மாள் படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக அருப்புக்கோட்டை நகர் போலீசார் விசாரணை நடத்தி சோலைமணியின் கணவர் மூர்த்தி, அவரது பெற்றோர், சகோதரர் சபரி, உறவினர் ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மூர்த்தி, சபரி, ரத்தினவேல் பாண்டியன் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். இந்த நிலையில் நேற்று சபரியும், ரத்தினவேல் பாண்டியனும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    தி.மு.க. பெண் நிர்வாகி கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த இரட்டை கொலைகள் நடந்திருக்கலாம் என தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    கொலையான சபரிக்கு மனைவியும், 1 குழந்தையும், ரத்தினவேல் பாண்டியனுக்கு மனைவியும் மற்றும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

    • திருமணம் செய்து வாலிபரை ஏமாற்றிய பெண் முதல் நாளிலேயே மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஈரோடு மாவட்டம் ஆய்வுக்கூடல் சக்தி நகரை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (35). இவர் சிவகாசியில் மீனம்பட்டியை சேர்ந்த திருமண புரோக்கர் ராணி என்பவர் மூலம் வரன் பார்த்தார்.

    இவர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகள் ஜெயலட்சுமி (28) என்பவரை திருமணத்திற்காக நவநீத கிருஷ்ணன் பெண் பார்த்தார்.

    இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிவகாசி மீனம்பட்டியில் உள்ள கோவிலில் நவநீத கிருஷ்ணன்-ஜெயல ட்சுமிக்கு திருமணம் நடந்தது. அதன்பின் இருவரும் ஈரோட்டிற்கு சென்றனர்.

    திருமணமான மறுநாள் ஜெயலட்சுமி தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து நவநீத கிருஷ்ணன் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது ஜெயலட்சுமி அங்கிருந்து திடீரென மாயமானார்.

    சிவகாசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. திருமணம் செய்து தன்னை ஏமாற்றியதாக நவநீத கிருஷ்ணன் சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடரும் குளறுபடியால் தட்டச்சு தேர்வு நாளை நடக்குமா என தேர்வர்கள் தவிக்கின்றனர்.
    • தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 24, 25 ஆகிய நாட்களில் நடக்கும் என தொழில்நுட்ப கல்வி த்துறை அறிவித்திருந்தது. ஆனால் பழைய நடைமுறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடப்பட்டதால் தேர்வுகள் அப்போது ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது பெய்த தொடர் மழை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டு நாளை (26-ந் தேதி) மற்றும் 27-ந் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் கிடைக்க வில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பொதுவாக ஹால்டிக்கெட்டுகள் தட்டச்சு பயிற்சி மையம் மூலம் வழங்கப்படும். ஆனால் தற்போது வரை ஹால் டிக்கெட்டுகள் வராததால் நாளை தேர்வு நடக்குமா? என்று தேர்வர்கள் பரிதவிப்புக்கு ள்ளாகின்றனர்.

    • குறுவள மைய ஏதுவாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
    • இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நாளை (26-ந் தேதி) நடைபெற உள்ள குறுவளமையக் கூட்டத்தில் மாவட்ட ஏதுவாளர்களாக செயல்பட உள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் நடந்தது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்த பயிற்சியை நடத்தியது. பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளத்துரை தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் முன்னிலை வகித்தார். பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் மகாலிங்கம் வரவேற்றார்.

    இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தின் கீழ் உள்ள சிவகாசி, வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் ஒன்றியங்களைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 237 பேர் கலந்து கொண்டனர். உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் செல்வலட்சுமி, மலர்கொடி, சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மருதக்காளை, கணேசுவரி, மெர்சி ஆகியோர் பேசினர். இ்ல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ், ஆசிரியப் பயிற்றுநர்கள் முத்துராஜ், மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளராக இளங்கோ, இணை ஒருங்கிணைப்பாளர்களாக மகாலிங்கம், சரவணகுமாரி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரியின் உத்தரவுப்படி, வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

    • சபரிமலை சீசனுக்காக இயக்கப்படும் தாம்பரம்-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் இடையே நவம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்படுகிறது.

    அய்யப்பன் கோவில் சீசனுக்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தமிழகத்தின் முக்கிய ஆன்மீக நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஏற்கனவே எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரி மலை சிறப்பு ரெயிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிற்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோவில்களில் தரிசிக்கவும், சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழும் மலையாக செல்லும் நிலையில் ஆன்மீக விழாவுக்காக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பயணிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • விருதுநகர் புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும்.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் முதலாவது புத்தகத் திருவிழா கே.வி.எஸ். பொருட்காட்சி மைதானத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இன்று (24-ந் தேதி) முதல் ரூ.200-க்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு தினசரி குலுக்கல் முறையில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.4 ஆயிரம், அன்றைய இரவே சிறப்பு விருந்தினர்களால் பரிசு வழங்கி கவுரவிக்கப்படும்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் விஸ்வ இந்து பரிசத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வெங்கிடசாமி தலைமை வகித்தார். திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை தென் பாரத அமைப்பாளர் பாலு சரவண கார்த்திக் பேசினார். இதில் ஜல்லிக்கட்டு மற்றும் கோவில் யானை உள்ளிட்ட விவகாரங்களில் தொடர்ந்து இந்து கலாச்சாரத்தை அளிக்கும் முயற்சியில் ஈடுபடும் பீட்டா அமைப்பை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெயகணேஷ், விஎச்பி ஒன்றிய தலைவர் கிருஷ்ண மூர்த்தி, நகர தலைவர் அருண், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர்‌ சரவண துரை‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் சொத்து பிரச்சினையில் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மேல ஆவாரம்பட்டி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கோபால் (வயது 60). இவரது மனைவி அழகம்மாள் (57). கோபால் வீட்டின் அருகே அவரது சகோதரர் கிருஷ்ணன் (58) வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் தனது அண்ணியின் உறவினருக்கு சொந்தமான வீட்டை வாங்கியதாக தெரிகிறது. அதை ஏமாற்றி வாங்கி விட்டதாக கோபாலும், அவரது மனைவியும் கருதினர். இதனால் சகோதரர்களுக்கு இடையே முன் விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி 2 குடும்பத்தினரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் நேற்று கிருஷ்ணன், தனது மனைவி பொன்னுத்தாயுடன் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் வந்த அண்ணி அழகம்மாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென 2 பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் கிருஷ்ணன், அவரது மனைவிக்கு தலை, கைகளில் வெட்டு விழுந்தது.

    அப்போது கிருஷ்ணன் அங்கிருந்த மண்வெட்டியால் அழகம்மாளை தாக்கினார். இதில் அவரும் படுகாயமடைந்தார். 3 பேரும் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
    • கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுவதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருத்தரங்கில் பேசினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி கலையரங்கத்தில் எம்.பி.ஏ. மாணவ-மாணவிகளுக்கான சைபர் கிரைம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியை சுமதி தலைமை தாங்கினார். முதல்வர் வெங்கடேசுவரன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் (சைபர் கிரைம்) கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ஏமாறுவதில் படித்தவர்களே அதிகமாக உள்ளனர். இதற்காகவே காவல்துறையில் சைபர் கிரைம் என்ற என்ற ஒரு துறையே உள்ளது. முன்பின் தெரியாதவர்களின் அழைப்பு மற்றும் சம்பந்தம் இல்லாத லிங், பரிசு விழுந்துள்ளது, கடன் தருகிறேன் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளில் பேசி ஏமாறுகிறவர்களின் பணம் திருடப்படுகிறது. இதில் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதிக்கப்படுபவர்கள் உடனே சைபர் கிரைம் மற்றும் அருகில் உள்ள காவல்நிலையங்களின் மெயில் ஐ.டி. தொலைபேசி எண் ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நிவாரணம் பெற முடியும்.

    "காவல் உதவி" என்ற ஆப்சை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். அதில் 60 விதமான உதவிகள் உள்ளன. பெண்கள் பாதுகாப்புக்கு இது மிகவும் முக்கியமானதாகும். பெண்கள் தங்களது புகைப்படங்களை வலைதளத்தில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார். இதில 200- க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • சாத்தூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் எல்லப்பராஜ் (வயது 76). இவர் சாத்தூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தாலுகா குழு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களாக அவருக்கு அடிக்கடி கால் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த எல்லப்பராஜ் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷ மாத்திரைகளை சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பராஜ் பரிதாபமாக இருந்தார்.

    இது குறித்து பெத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×