search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tambaram-Ernakulam train"

    • சபரிமலை சீசனுக்காக இயக்கப்படும் தாம்பரம்-எர்ணாகுளம் ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் தை மாதம் நடைபெறும் மகரஜோதி வரை நடை திறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று வருவார்கள்.

    பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரம் முதல் கேரளா மாநிலம் எர்ணாகுளம் இடையே நவம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, புனலூர் வழியாக எர்ணாகுளம் வரை இயக்கப்படுகிறது.

    அய்யப்பன் கோவில் சீசனுக்காக இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயிலுக்கு தமிழகத்தின் முக்கிய ஆன்மீக நகரங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூரில் நிறுத்தம் இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    ஏற்கனவே எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சபரி மலை சிறப்பு ரெயிலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் நிற்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய கோவில்களில் தரிசிக்கவும், சதுரகிரி மலையில் சித்தர்கள் வாழும் மலையாக செல்லும் நிலையில் ஆன்மீக விழாவுக்காக இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களும், பயணிகளும் தெற்கு ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×