என் மலர்
விருதுநகர்
- காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
- காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதி.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு 4-ந்தேதி (நாளை) முதல் 7-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது.
அதேபோல், காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழை அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம் நடந்தது.
- 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் நியூ ஐடோலா இலக்கியமன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ''தற்கால இலக்கிய கோட்பாடுகள்'' என்ற தலைப்பில் நடந்தது.
துறைத்தலைவர் பெமினா வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான் சேகரை, உதவிப்பேராசிரியர் சாந்தி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஆய்வு கட்டுரையை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் சமர்பித்துள்ளார்.
சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் இலக்கிய கோட்பாடு என்றால் என்ன? என்பதை தகுந்த இலக்கிய ஆய்வுகள் மூலமாக எடுத்துக்கூறினார்.
இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அறிவு சார்ந்ததாகவும் அமைந்தது. உதவிப் பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.
- இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என டி.எஸ்.பி. பிரீத்தி கூறியுள்ளார்.
- நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.
ராஜபாளையம்
மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிசா மால்வியா (வயது24) உடற்கல்வி ஆசிரியரான இவர் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை பறைசாற்றவும், பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார்.
இதற்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மத்தியபிரதேசத்தில் இருந்து தன்னந்தனியாக சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு தமிழகம் வழியாக வடமாநிலங்கள் நோக்கி செல்லும் அவர் ராஜபாளையம் வந்தடைந்தார்.
அவருக்கு ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள காவல்துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிசா மால்வியா நிருபர்களிடம் கூறியதாவது:-
நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
வழியில் எந்த விதமான அச்சுறுத்தலோ, இடையூறோ ஏற்பட்டதில்லை. இந்தியா வில் நடு இரவில் பெண்கள் அச்சமின்றி எப்போது நடமாட முடிகிறதோ? அப்போது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற முழு பயனை அடைய முடியும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கனவு நனவாகி விட்டது.
நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக சைக்கிள் பயணத்தை தொடங்கினேனோ அதில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாத்தூர் அருகே வடமலாபுரத்தில் உள்ளது சாமுண்டீஸ்வரி, சக்தி விநாயகர் கோவில்ல உள்ளது.
- இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அருகே வடமலாபுரத்தில் உள்ளது சாமுண்டீஸ்வரி, சக்தி விநாயகர் கோவில். இந்தக் கோவிலில் நேற்று வழக்கம் போல பூஜைகள் நடந்து முடிந்த பின்னர் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டுச் சென்றார். இன்று அதிகாலை மீண்டும் கோவிலை திறப்பதற்காக பூசாரி வந்தார்.
அப்போது முன்கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கீழே தனியாகக் கிடந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும் பெரிய குத்துவிளக்கு, தீபாரானை தட்டு, மின் மோட்டார் ஆகியவை திருடு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கோவிலில் இருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர்.
- பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் ரேசன் கடைக்கு வர கலெக்டர் அறிவுறுத்தினார்.
விருதுநகர்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன் கார்டு தாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கம், ஒரு முழுக்கரும்பு வழங்கப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற் கான டோக்கன் இன்று மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 99 ஆயிரத்து 224 ரேசன் கார்டுதாரர்கள் மற்றும் 1018 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 6 லட்சத்து 242 பயனாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கு வதற்கான டோக்கன் இன்று முதல் வினியோகிக்கப் பட்டது.
ரேசன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுக ளுக்கே சென்று டோக்கனை விநியோகம் செய்தனர். பொங்கல் பரிசு தொகுப்பு பெற நாள் ஒன்றுக்கு 250 ரேசன் கார்டுதாரர்கள் வீதம் டோக்கன் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி வருகிற 8-ந் தேதி வரை இப்பணி நடக்கும். வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
அனைத்து அரிசிபெறும் குடும்ப அட்டை தாரர் களுக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே தகுதியுள்ள ரேசன் கார்டுதாரர்கள் டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள நாட்கள் மற்றும் நேரம் விபரத்தின்படி ரேசன் கடைகளுக்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடித்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வலியுறுத்தி உள்ளார்.
- விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர்.
- ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.
விருதுநகர்:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ராஜபாளையத்தில் இருந்து தனியாருக்கு சொந்தமான யானை வரவழைக்கப்பட்டது.
விருதுநகருக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட அந்த யானையை கீழே இறக்க முயற்சித்தனர். இறக்கிய பின்னர் அந்த யானை, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு தரையில் படுத்துக்கொண்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் கால்நடை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் கோவில் ராஜா மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து யானைக்கு சிகிச்சை அளித்தனர்.
இதுபற்றி கால்நடைத்துறை அதிகாரி கூறியதாவது:-
ஏற்கனவே இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தபோது கடந்த மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போதே யானைக்கு மூன்று மாதம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனாலும் யானையின் உரிமையாளர்கள் தொடர்ந்து இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு யானையை அழைத்து வரும் நிலை உள்ளது. தற்போதும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யானைக்கு 56 வயதாகிறது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது.
- பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் இணைக்கப்பட்டு வருகின்றன.
ராஜபாளையம் டி.பி.மில்ஸ் பகுதியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும் மூடப்படாமல் உள்ளது. அந்தப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்காமல் எச்சரிக்கை டேப் மட்டும் கட்டப்பட்டிருந்தது.
மேலும் அந்தப்பகுதியில் விளக்கு வெளிச்சம் குறைவாக இருப்பதாலும், நள்ளிரவு மற்றும் தற்போது அதிகாலையில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும், மோட்டார் சைக்கிளில் செல்லும்போது எதிரே உள்ள மேடு, பள்ளங்களை பார்த்து வாகனங்களை இயக்க முடிவதில்லை.
இந்நிலையில் அங்கிருந்த பள்ளத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் விழுந்து இறந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர் அம்பலப்புளி பஜார் பகுதியை சேர்ந்த பொன் இருளப்பன்(வயது32) என்பதும் ஜவுளிக்கடையில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகாசியில் கிடப்பில் போடப்பட்ட பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனே அமைக்க வேண்டும்.
- பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, திருத்தங்கல், வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பட்டாசு ஆலைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
நாட்டில் 90 சதவீத பட்டாசு உற்பத்தி சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
பட்டாசு தொழிலை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் பேரில் கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி கழக விஞ்ஞானிகளின் ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை விஞ்ஞானி சாதனா ராயலு, விஞ்ஞானி சரவணன் உள்பட ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சிவகாசியில் பட்டாசு ஆலை வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணி கிராமத்தில் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அறிவிப்பு செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகியும் பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைவதற்கான எவ்வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.
பட்டாசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டால் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றுகளை பயன்படுத்தி வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதும் உள்ள கெமிக்கல் ஆலை மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுப்பி வைக்கலாம்.
மேலும் இந்த மையத்தின் மூலம் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத, தரமான வேதிப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க முடியும். எனவே சிவகாசியில் பட்டாசு ஆராய்ச்சி மையத்தை உடனடியாக தொடங்குவதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விருதுநகர் அருகே இளம்பெண்கள் உள்பட 3 பேர் மாயமாகினர்.
- திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பட்டம்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் பாண்டிச்செல்வி (வயது 22). நர்சிங் படிப்பு முடித்து விட்டு மில்லில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வெளியே சென்றுவருவதாக கூறி சென்றவர் வீடு திரும்ப வில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் ஸ்ரீரெங்க நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துகணேசன். இவரது மகள் சித்ராதேவி (25). என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். சம்ப வத்தன்று அருகில் உள்ள சகோதரி வீட்டுக்கு செல்வ தாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து முத்து கணேசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜீஸ் (34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது சம்பளம் குறை வாக உள்ளதாக கூறி அவரது மனைவி ரஞ்சிதா (25) அடிக்கடி தகராறு செய்வாராம்.
இந்த நிலை யில் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஞ்சிதா போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழக இ.சி.இ. துறைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்தது.
- டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
தேசிய அங்கீகார வாரியம் (என்.பி.ஏ) அடுக்கு-1, வாஷிங்டன், அக்கார்டு அமைப்பின் கீழ் 2-வது முறையாக, மறு அங்கீகார ஆய்விற்கு, உயர்கல்வி நிறுவனங்களின் மூத்த பேராசிரியர் குழு கடந்த மாதம் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்தது. 3 நாள் நடத்திய ஆய்வு அடிப்படையில் பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ் துறைக்கு மிக உயர்ந்த 6 ஆண்டுகள் அங்கீகார அந்தஸ்தையும், பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் துறைக்கு 3 ஆண்டு அங்கீகார அந்தஸ்தையும் வழங்கி பாராட்டியது.
இதனால் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச அளவில் உயர்படிப்பும், வேலை வாய்ப்பும் எளிதாக கிடைக்கும். பல்கலைக்கழக வேந்தர், கே.ஸ்ரீதரன், இணை வேந்தர் எஸ்.அறிவழகி, துணை தலைவர்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன்கலசலிங்கம், பதிவாளர் வி.வாசுதேவன் ஆகியோர் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்று சாதனை புரிந்த பேராசிரியர்கள், துறை தலைவர்கள், இயக்குநர்கள், டீன்கள், மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள், டெக்னீசியன்ஸ் ஆகியோரின் செயல்பாடுகளை் பாராட்டினர்.
- ராஜபாளையம் அருகே கூட்டுறவு விவசாய பண்ணை சங்கம் சார்பில் சிமெண்டு களம்-குடோன் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் கூட்டுறவு விவசாய குத்தகைதாரர் பண்ணை சங்கம் சார்பில் சிமெண்ட் களம் மற்றும் குடோன் திறப்பு விழா நடந்தது.
பெருந்தலைவர் காமராஜர் நினைவு நெல் களஞ்சியம் என்ற பெயரில் சிமெண்டு களத்தை தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கல்வெட்டை ராஜபாளையம் யூனியன் தலைவர் சிங்கராஜ் திறந்து வைத்தார்.
கூட்டுறவு விவசாய பண்ணை சங்க தலைவர் மிசாநடராஜன் வரவேற்றார். பெரியகுளம் கண்மாய் தலைவர் கலைச்செல்வன், வாண்டையார்குளம் கண்மாய் தலைவர் கண்ணன் உள்பட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், தேவதானத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள் முதல் நிலையத்தை இந்த சிமெண்டு களத்திற்கு மாற்றுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றார். கூட்டுறவு சங்க துணை தலைவர் காசி நன்றி கூறினார்.
இயற்கை ஆர்வலர் தலைமலை, சேகர், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாசானக் காளை, கிருஷ்ணாபுரம் கவுன்சிலர் காமராஜ், நக்கனேரி கவுன்சிலர் அம்பிகா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- 40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் கார்த்திகா (வயது 25). இவருக்கும், ராமர்பாண்டி ராஜா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.
40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகாவிடம் மேலும் ரூ.10லட்சம் ரொக்கம் வாங்கிவர வேண்டும் என்று கூறி கொடுமைபடுத்தி உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகை பெற்றோர் வீட்டில் ராமர்பாண்டி ராஜா விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கார்த்திகா, ராமர்பாண்டி ராஜாவை சந்தித்து பேச சென்றுள்ளார்.அப்போது ராமர்பாண்டி ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன், ராஜாத்தி, ராஜேஸ்வரி, மீனாட்சி உள்பட 6 பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கார்த்திகா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






