என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.

    இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-

    போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

    • பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார்.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நகர் என்கிற ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இருபாலரும் பயிலும் இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.

    அதன்படி நகர் கிராமத்தை சேர்ந்த பவித்திரன் (வயது 13), அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொணடான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பிரம்மதேசம் போலீசார் பவித்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தற்கொலை செய்து கொண்ட மாணவன் பவித்திரன், பள்ளியில் பயிலும் மாணவியை கேலி செய்துள்ளார். இதனை ஆசிரியர்கள் கண்டித்ததுடன், பவித்திரனை முட்டி போட வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
    • பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆலப்பாக்கத்தில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதிலும் ஒரு ஆசிரியை பயிற்சிக்காக அனுப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஒரு ஆசிரியர் மட்டுமே 120 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் பள்ளியின் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்து நீர் கசிந்து சுவர் வழியாக வகுப்பறையில் தேங்கி நிற்கிறது. இதனால் லேசான கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை அமரவைத்துள்ளனர்.

    பள்ளி நேரத்தில் மழை பெய்யும் போது அந்த வகுப்பறையிலும் நீர் தேங்கி நிற்கிறது. இதனை அங்குள்ள துப்புரவு பெண் ஊழியர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அகற்றி வருகிறார். இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழை நேரங்களில் மாணவர்களுக்கு விடுமுறை தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும், இப்பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால், பணியில் இருக்கும் ஒரு ஆசிரியரால் முடிவு செய்யமுடியவில்லை. எனவே, விழுப்புரம் மாவட்ட கலெக்டரும், தொடக்க கல்வி அலுவலரும் இப்பள்ளி மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டித்த தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை பள்ளி இயங்கும் வகையில் பழைய கட்டிடத்தினை சீரமைத்து தரவேண்டுமென மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    6 மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு சென்றனர்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வாக்கூர் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் கருணாகரனை விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், ஆசிரியர் கருணாகரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு நேற்று சென்றனர். ஆசிரியர் கருணாகரன் மிகவும் நல்லவர். ஆசிரியர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டினால் அவர் மீது பொய்ப்புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    அவர் மீதான வழக்கை நீக்க வேண்டும். அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவரை மீண்டும் இதே பள்ளியில் ஆசிரியராக நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இதனை செய்யவில்லை என்றால், எங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் அவர்களை சேர்த்துக் கொள்கிறோம் என வலியுறுத்தினர்.இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்ததின் பேரில் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில் வாக்கூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் அதே பள்ளியில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும் வந்திருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர்.அங்கு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேசினார்கள். இதனைத் தொடர்ந்து 10 பெற்றோர், 5 மாணவிகளை கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். மற்றவர்களை வெளியில் இருக்கும்படி போலீசார் கூறினர்.அதன்படி 10 பெற்றோர், 5 மாணவிகளையும் உள்ளே அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வழக்கத்தை விட கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கூர் பள்ளியில் பயிலும் 157 மாணவர்களில் 6 பேர் மட்டுமே இன்று பள்ளிக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • மதுபானங்களை வாங்கி குடிப்பது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
    • 3 மாணவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குடித்து விட்டு பள்ளிக்கு வருவது, மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி சீருடையுடன் டாஸ்மாக்கிற்கு சென்று மதுபானங்களை வாங்கி குடிப்பது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு பள்ளிக்குள் ரகளை செய்தனர். அவர்கள் மீது வழக்கு போன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை.

    தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் காமராஜ் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சீருடையுடன் மது அருந்தியது தொடர்பாக சமூக வளைதலங்களில் வீடியோ வைரலாக பரவியது. அந்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படாததால் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக சமூக ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் அருகே நேற்று நண்பகலில் மதுபானம் குடித்த 4 மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடமும், ஊழியர்களிடமும் ரகளை செய்தனர். அவர்களை கைது செய்யப்பட்டு ஒரு மாணவனை சிறையில் அடைத்த போலீசார், 3 மாணவர்களை கடலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த 4 மாணவர்களை யும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து நீக்க வேண்டும். அவர்கள் செய்த தவறுகளை உணரும் வகையில் தண்டனை வழங்க வேண்டும். இதனைப் பார்க்கும் பிற மாணவர்கள் மது குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே வளர் இளம் தலைமுறையினர் மதுபான பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க முடியும். மேலும், குடிப்பதால் ஏற்படும் உடல் நலக்கோ ளாறு, சமூக சீர்கேடு போன்ற வைகளை மாண வர்களுக்கு ஆசிரியர்கள் போதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு விதமான கருத்துக்களை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது போன்ற நடவடிக்கைகளை விழுப்புரம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்வார்களா? என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    விழுப்புரம்:

    மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை மாதந்தோ றும் எண்ணுவது வழக்கம். அதன்படி அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர ஜீவானந்தம், விழுப்புரம் துணை ஆணையர் சிவலி ங்கம், செஞ்சி ஆய்வர் சங்கீதா, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தி ல்குமார் பூசாரி, ஆகியோ ர் முன்னிலையில் உ ண்டியல்கள் திறந்து எண்ண ப்பட்டன.

    இதில் 27 லட்சத்து ஆயிரத்து 917 ரூபாய் ரொக்கமும், 70 கிராம் தங்க நகைகளும், 240 கிராம் வெள்ளிப் பொருட்களும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், இந்தியன் வங்கி ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர். வளத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    விழுப்புரம்:

    கம்பத்திலிருந்து அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த பஸ்சை தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் ஓட்டி வந்தார். பஸ்சில் 35 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி கிராமம் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி டிரைவர் திடீரென பிரேக் போட்டதால் அரசு சொகுசு பஸ் லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல நொறுக்கியது.பஸ் கண்டக்டர் சென்னையைச் சேர்ந்த செல்வம் சிறுகாயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பஸ்சில் பயணம் செய்த அனைவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்தால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மற்றொரு விபத்து : சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன்( வயது 47) ஓட்டி சென்றார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பாதிரி தனியார் ஓட்டல் அருகே வரும்போது முன்னாள் சென்ற லாரியானது திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது இதனால் அரசு பேருந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 3 பேர் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்பஸ்சில் பயணம் செய்த பயணிகள் கூச்சலிட்டதை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் .இந்த விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த பாவாடை மனைவி கனகாம்பரம் (வயது 55).இவர் 20-க்கும் மேற்பட்ட மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திருவெண்ணைநல்லூர் மலட்டாற்று பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.இதைத் தொடர்ந்து அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்திற்கு போய் தேடி பார்த்தனர். ஆற்று பகுதியில் பழமையான உரை கிணறு அருகே கனகாம்பரம் வைத்திருந்த வெற்றிலை பாக்கு வைக்கும் சுருக்கு பை, குடை மற்றும் காலனி கிடந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவி னர்கள், அவர் கிணற்றில் விழுந்திருக்காலம் என கறுதி திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிணற்றில் இறங்கி தேடினர். அங்கு அவர் விழுந்ததற்கான எந்த தடயமும் இல்லை. கனகாம்பரமும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இன்று காலை மலட்டாறு வா ய்க்காலில் கனகாம்பரத்தின் உடல் பிணமாக மிதந்தது. அதனை கண்ட பொதுமக்கள் இது குறித்து அவரது மகனுக்கும் திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.அப்போது அங்கு திரண்ட கனகாம்பரத்தின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, கனகாம்பரத்தின் உடலை விழுப்புரம் - திருவெண்ணைநல்லூர் - அரசூர் கூட்டுச்சாலையில் வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, அதன் அறிக்கை வந்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்க ப்படுமென கூறினர். இதனையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இறந்த கனகாம்பரத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு சென்ற கனகாம்பரத்தில் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கனகாம்பரத்தின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
    • குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் பள்ளியில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தகவல் வந்தது.

    இதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், குழந்தைகள் அரசர உதவி அலகின் பணியாளர் ஸ்டேல்லா மேரி ஆகியோர் பள்ளிக்கு நேரடியாக சென்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். அப்போதும் 3, 4-ம் வகுப்புகளில் பயிலும் 2 மாணவிகள் தங்களுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள்.

    அவர்களை தனியாக அழைத்து சம்பவம் குறித்து கேட்டுக்கொண்டிருந்த போது, 3-ம் வகுப்பில் பயிலும் மேலும் 7 மாணவிகளும், 4-ம் வகுப்பில் பயிலும் மேலும் 4 மாணவிகளும் தங்களிடமும் ஆசிரியர் கருணாகரன் தீய தொடுதலில் ஈடுபட்டதாக கூறினார்கள். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை நடத்தியபோது பள்ளி மாணவிகளுக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக நன்னடத்தை அலுவலர் நெப்போலியன், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி அருகேயுள்ள தொரவிராமன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் கருணாகரன் (வயது 32) என்ற ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோவில் கைதான ஆசிரியர் கருணாகரனை, விழுப்புரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கவுசர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் விக்கிரவாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம்:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகா தன்வந்திரி ஹோமம் நடந்து பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.

    பூஜை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு அய்யர் செய்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராமமுக்கிய பிரமுகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனர்

    • உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பதை உணர்ந்து, பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாக செயல்படும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற் றினை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குடும்பத் திற்கு ஆதார மாகவும், உற்ற துணையாகவும், பாதுகாப்பாகவும் விளங்கும் குடும்பத் தலைவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மகளிரின் நலனை கருத்களை பெருமைப்ப டுத்திடும் பொருட்டு, மற்றொரு வரலாற்று சிறப்பு மிக்கத் திட்ட மான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங் கும் உரி மைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தி ன் மூலம், தமிழ்நாட்டில் 1,06,49,242 பயனாளிகள் பயன்பெற்று வருகின்ற னர். விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில், 4,97,708 விண்ணப்பிங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, தகுத தகுதி வாய்ந்த 3,25,514 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட குடும்பத் தலைவிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட் டத்தில் மேல்முறையீடு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதற்கட்ட மாக 3,25.514 மகளிர்களுக் கும், 2ம் கட்ட மாக 22,096 மகளிர் என மொத்தம் 3.47,610 மகளிர்களுக்கு. மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வங் கிக்கணக்கில் செலுத் தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தனது செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

    • பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
    • ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே நல்லாப்பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வரும் 28 வயது இளம் பெண்ணின் கணவர் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அந்த இளம் பெண் 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ், விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை அப்பெண் அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கரராஜ், அப் பெண்ணிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    பாதிக்கப்பட்ட அப்பெண் கடந்த 23-ந் தேதி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் போலீசார் பெண்களுக்கு பாலியல்எதிரான வன்கொடுமை மற்றும் சாதியை பற்றி பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை கைது செய்து கோர்ட்டு உத்தரவின் பேரில் வேடம் பட்டு சிறையில் அடைத்தனர்.

    ×