search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே  கார்த்திகை தீப சங்காபிஷேக விழா
    X

    விக்கிரவாண்டி அருகே கார்த்திகை தீப சங்காபிஷேக விழா

    விழுப்புரம்:

    கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி மகா தன்வந்திரி ஹோமம் நடந்து பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்து மலர்களால் அலங்கரித்து மகா தீப ஆராதனை நடந்தது.

    பூஜை மற்றும் வேள்விகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் பாபு அய்யர் செய்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மாவட்ட பொருளாளர் கருணாகரன், ஜோதிடர் கமலக்கண்ணன் மற்றும் கிராமமுக்கிய பிரமுகர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனர்

    Next Story
    ×