என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.
    • பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றச்சாட்டு.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் செயின்ட் மேரீஸ் பள்ளி முதல்வர் டொமினிக் மேரி, யுகேஜி வகுப்பு ஆசிரியை ஏஞ்சல், தாளாளர் எமால்டா ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    இவ்வாறு பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவிப்பதாக உறவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தனியார் பள்ளிகள் இயக்குனர் முத்து பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    • குழந்தை மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது.
    • ஆனால் சிறுமியை தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் UKG படித்து வந்த சிறுமி லியா லெட்சுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குழந்தை கழிவுர் நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பான தங்களிடம் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை. 3 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிவித்ததாக பெற்றோர் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

    லஞ்ச் முடிந்து 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. சிறுமி மதியம் 2 மணிக்கு ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் எனக் கூறி வக்குப்பறையில் இருந்த வெளியேறினார். 2.05 வரை சிறுமி திரும்பாததால் ஆசிரியர் ரெஸ்ட் ரூம் சென்று பார்த்தபோது சிறுமி அங்கு இல்லாததால் தேட ஆரம்பித்தார்கள்.

    எல்லா வகுப்பறையிலும் பார்த்தோம். எங்கேயும் இல்லை. பின்னர் கழிவுநீர் தொட்டி அருகே சென்று பார்க்கும்போது, கம்பி வலை எடுக்கப்பட்டிருந்தது. உடனே கழிவுநீர் தொட்டியை பார்க்கும்போது உள்ளே சிறுமியின் செருப்பு கிடந்தது. இதனைத் தொடர்ந்து கழிவுநீர் தொட்டியில் பார்க்கும்போது குழந்தை உள்ளே விழுந்தது தெரியவந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.

    மதியம் 2 மணிக்குப் பிறகே ரெஸ்ட் ரூம் செல்வதற்காக வகுப்பறையை விட்டு வெளியே சென்றதாக தலைமை ஆசிரியர் கூறிய நிலையில், சிறுமியை ஒருவர் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் செல்லும் சிசிடிவி காட்சியில் 1.50 எனக் காட்டுகிறது.

    ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி-யில் 2.40 மணி எனக் காட்டுகிறது. குழந்தையை கழிவுநீர் தொட்டியில் இருந்து தூக்கிய பிறகு சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏன்? என்ற கேள்வி எழும்புகிறது.

    மேலும், கழிவு நீர் மேடான பகுதியில் உள்ளது. UKG சிறுமியால் மேடான பகுதியில் ஏற முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது?

    அத்துடன் சிறுமியின் ஆடை நணையாமல் இருந்துள்ளது. கழிவுநீர் தொட்டியில் விழுந்தால் எப்படி ஆடை நணையாமல் இருக்கும். மேலும், கழிவுகள் ஆடையில் ஒட்டாமல் இருக்குமா?. ஆடையில் கழிவு ஒட்டியதற்கான அடையாளம் இல்லை.

    குழந்தையை தூக்கிச் செல்லும் நபர் எந்தவித பதற்றமின்றி சாதாரணமாக தூக்கிச் செல்கிறார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சி மட்டுமே சிசிடிவி காட்சியில் இடம் பெற்றுள்ளது.

    தலைமை ஆசியர் கூறியதற்கும் சிசிடிவி காட்சியில் தெரியும் நேரத்திற்கும் மாறுபாடு உள்ளது. சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பள்ளி நிர்வாகம் முன்னுக்கு பின் முரண் தகவலை தெரிவிப்பதாகவும், சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    • பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர்
    • அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி UKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியாகினார்.

    குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது.
    • முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம் புதுவை அருகே உள்ள பட்டானூர் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் கடந்த 28-ந் தேதி நடைபெற்றது.

    பொதுக்குழுவில் பா.மக. இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பா.ம.க. பொதுக்குழுவில் மோதல் உருவானது. இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பா.மக. இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் என திட்டவட்டமாக அறிவித்தார்.

    முகுந்தனை இளைஞர் அணி தலைவராக பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தது தொடரும். அவர் இளைஞரணி தலைவராகவே இருப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழுவில் அறிவித்தபடி முகுந்தனிடம் நியமன கடிதத்தை வழங்கி விட்டேன்.

    அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை. இது பேசி சரியாகி விட்டது. பா.ம.க. பொதுக்குழுவில் நடந்தது உட்கட்சி விவகாரம்.

    தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது. மக்களை கேட்டால் முதலமைச்சரின் திறமையின்மையையே சொல்வார்கள். புலனாய்வு அதிகாரிகள் முதலமைச்சருக்கு சொல்வார்கள். இதற்கு முதலமைச்சர் திறமை இன்மையாக இருக்குமோ. இவரும் இவரது மகனை துணை முதலமைச்சராக்கி உள்ளார்.

    தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக போற்றப்பட்டது. இப்போது முற்றிலுமாக முடங்கி விட்டது. திறமையான அதிகாரிகள் பலரும் இருக்கிறார்கள்.

    வேங்கை வயலில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வில்லை. அரசு மது கடையில் அருந்திய மதுவில் சயனைடு கலந்துள்ளது என சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டும் 1½ ஆண்டும் கண்டுபிடிக்கவில்லை. காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் கொலை வழக்கில் 9 மாதம் ஆகியும் குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை.

    திருப்பூர் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும், 14 தனி படைகள் அமைத்தும் கண்டுபிடிக்கவில்லை. தமிழக போலீசார் திறமையற்று இருக்கிறார்கள்.

    கள்ளக்குறிச்சி அருகே ஒரு பெண், பால் விற்பனை செய்துவிட்டு திரும்பும்போது, கொலை செய்யப்பட்ட நிலையில் இதுவரை குற்றவாளி கண்டு பிடிக்கவில்லை. காவல்துறை பல குழுக்கள் கொண்டுள்ளன. அதிராக மையங்களை வைத்து கொண்டு தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

    முதலமைச்சர் 2 மாதங்களுக்கு ஒரு முறை கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். டாஸ்மாக் சந்து, பொந்து கடைகளை மூட வேண்டும் 4,829 அதிகார கடைகள் உள்ளது. சந்து கடைகள் எங்கு உள்ளது என்று காவல்துறைக்கு நன்றாக தெரியும். இந்த கடைகளை மூட வேண்டும். அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    கட்சி நிர்வாகிகள் மற்றும் காவல்துறைக்கும் மாமூல் தருகின்றனர். மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

    மகளிர் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும், மாணவர்கள், சிறுவர்கள் பாதிக்காத வகையில் சந்து கடைகளை மூட வேண்டும். இல்லையெனில் பா.ம.க. முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

    மெத்த பெட்டமைன், கஞ்சா, அபின், போதைப்பொருள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை மது இல்லா மாநிலமாக மாற்றப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது அரசு. இளைஞர்கள் சீரழிவதை வேடிக்கை பார்க்க முடியாது. தவறுகளும், தோல்விகளையும் மறைக்க தங்களது தோல்விகளை மறைக்க போராட்டம் நடத்தப்படும் கட்சிகள் மீது அடக்குமுறை கையில் எடுத்து வருகிறது. போராட்டம் செய்யக்கூடாது என்று கைது செய்யப்படுகின்றனர்.

    தி.மு.க. ஆட்சியின் இந்த அடக்குமுறை இந்த ஆட்சியின் தோல்வியை ஒப்புக்கொள்கிறது. எதிர்க்கட்சியை அடக்குவது மூலம் தங்களது தோல்வியை ஒப்புக்கொள்கிறது. தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. சட்ட பேரவை தேர்தல் எப்போது நடந்தாலும் தோல்வியை சந்திக்கும். அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகளிடம் உதவி பெறும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

    அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தனி ஆணையம் அமைத்து, நிதி பெறுவது தவறில்லை. கட்டாய கல்வி, கண்டனமில்லா கல்வி, தரமான கல்வி-கட்டணத்தை அரசே கட்டவேண்டும்.

    நகர்புற உள்ளாட்சிகளுடன் கிராமப்புற உள்ளாட்சிகள் இணைக்கப்படக்கூடாது. 400 மேற்பட்ட கிராம ஊராட்சிகள் கலைக்கப்பட உள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.

    சொத்து வரி, குடிநீர் வரி உயரும். 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். அரசு இதனை கைவிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த வேண்டும். 10.5 இட ஒதுக்கீட்டிற்கு பா.ம.க. தொடர்ந்து போராடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
    • ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு மார்கழி மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட வாசனை பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து தங்ககவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ஜகத் ஜனனி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு பம்பை மேள தாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக் கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி, அங்காளம்மா! என்று பக்தி கோஷத்துடன அம்மனை வழிபட்டனர்.

    தொடர்ந்து இரவு 12.30 மணியளவில் ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு பூக்காளால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து உற்சவர் அம்மன் கோவில் மண்டபத்திற்கு சென்றனர்.

    ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    விழாவில் செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன. 

    • டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
    • கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.

    இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

     

    உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.

    தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.

    அவருடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.

    கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.

    சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது.
    • இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

    விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    கூட்டம் முடியும் தருவாயில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.

    இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அவர் கூறும்போது 'கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது. அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம்' என்றார்.

    உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.

    தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறி அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ராமதாசும் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.

    கூட்டத்தில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் சிலர், டாக்டர் அன்புமணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி வெளியேறினார்கள். டாக்டர் ராமதாஸ் வெளியில் வந்து காரில் ஏறியபோது, அவர் கார் முன்பு சிலர் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பா.ம.க.வினரும் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள்.

    பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

    திண்டிவனம்:

    சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரெயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து பாண்டிச்சேரி ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

    ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.

    தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருக்கிறது. என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

    • வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
    • வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திண்டிவனம்:

    சென்னை பொன்னேரியில் இருந்து 28 பக்தர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த வேன் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற அரசு பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று வேன் டிரைவர் எதிர்பாராத விதமாக பிரேக் அடித்ததால் தனியார் பஸ் மீது வேன் மோதியதாக கூறப்படுகிறது.

    இந்த விபத்தில் வேன் சென்டர் மீடியனில் மோதியதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
    • மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.

    அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.

    மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

    அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    மழை நிவாரணம் கேட்டு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சி.வி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அர்ச்சுனன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல்,தொழில் நுட்ப பிரிவு தலைவர் வக்கீல் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், பன்னீர், சுரேஷ் பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோதண்டனர், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழை நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    ×