என் மலர்
விழுப்புரம்
- விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி புறப்பட்ட ரெயிலில் தரம் புரண்டது.
- சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பயணிகள் ரெயில் இன்று காலை சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் ரெயில் நிலையத்தை தாண்டும்போது இந்த ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட பெட்டிகள் அப்படியே தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், சத்தம் கேட்டு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால், ரெயில் மிகப்பெரிய விபத்தில் இருந்து தப்பியது. ரெயிலில் இருந்து பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்படடனர்.
ரெயில்வே ஸ்டாஃப்கள் மற்றும் இன்ஜினீயர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயிலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக செல்லும் மற்ற ரெயில்களுக்கான வழி உடனடியாக சரி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கோளாரா? அல்லது சதி வேலையா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
- திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
- மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
விழுப்புரம்:
விழுப்புரத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழக காவல்துறை, திமுகவின் ஏவல் துறையாக மாறியுள்ளது. நாங்கள் மக்கள் பிரச்சனைக்காகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்கிறோம். ஆனால் திமுகவினர் தேசியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
கவர்னர் நிகழ்ச்சி நடக்கும் போது தேசிய கீதம் பாட வேண்டும் என்பது நாடு முழுவதும் உள்ள மரபு. இதை செய்யத்தவறிய அப்பாவு போன்றோர் கண்டனத்திற்குரியவர்கள். கவர்னர் நிகழ்ச்சியில் தேசியத்தையும், தேசத்தையும் அவமானப்படுத்துவதுபோல் நடந்துள்ளனர். மாநில அரசு, சட்டத்தை தெரிந்து நடந்துகொள்ள வேண்டும். தேசியம் வருவதை எதிர்ப்பதால் பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கிறேன்.
திமுக அரசு மிக மோசமாக செயல்படுகிறது. இதற்கு காவல்துறை, துணைபோகாமல் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திமுக அரசு, கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடன் வாங்கியது தவிர வேறு ஏதும் செய்யவில்லை. தமிழக அரசின் மொத்த கடன் ரூ.9 லட்சத்து 95 ஆயிரம் கோடி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தமிழக முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்த அரசை தூக்கி எறியாமல் தமிழகத்திற்கு விடிவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சிபிஐஎம் புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு.
- வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
இந்நிலையில், மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்று சிபிஎம் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பதில் அவர் மேலும் கூறியதாவது:-
மதவெறி, சாதிவெறிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். மதவெறி சக்திகளை எதிர்க்கும் திமுகவுடன் தொடர்ந்து பயணிப்போம்.
போராட்டம், ஆர்ப்பாட்டம் எல்லாம் அரசியல் சாசனத்தில் உள்ளவை, எந்த அரசும் அதை நிறுத்த முடியாது. திமுக வெளிச்சத்தில் தான் நாங்கள் இருக்கிறோம் என்று முரசொலியில் சொல்வது பொருத்தமானதல்ல.
வேலை வழங்குவதற்கு பதிலாக பாஜக வேலையை பறிக்கிறது. அரசுத்துறையில் நிரந்தர பணி இருக்காது என்ற நிலையை பாஜக அரசு ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியனது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்தார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில புதிய செயலாளராக தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும், கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாட்டில், 80 உறுப்பினர்கள் சண்முகத்தை தேர்வு செய்துள்ளனர்.
- மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
- கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலக கே.பாலகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால், தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
விழுப்புரத்தில் கட்சியின் மாநில மாநாட்டில், தன்னை பதவிகளில் இருந்து விடுவிக்குமாறு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளின்படி 72 வயதுக்கு மேல் கட்சியில் எந்த பொறுப்புகளிலும் நீடிக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
அதன்படி, விழுப்புரம் மாநில மாநாட்டில் இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த மாநில செயலாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
- மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பனிர் வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
- தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் மாணவி லியா லட்சுமியின் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கழிவு நீர் தொட்டியில் விழுந்ததன் காரணமாகவே சிறுமி உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை காவல் துறைக்கு மருத்துவக் கல்லூரியில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
- தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
- தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3½ வயது சிறுமி லியோ லட்சுமி பலியானதாக கூறப்படுகிறது. இறந்த சிறுமியின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சிறுமியின் உடலுக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சம் நிவாரண நிதியை சிறுமியின் பெற்றோரிடம் அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
சிறுமி பலியான சம்பவம் மனவருத்ததை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் பள்ளி நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமியின் குடும்பத்திற்கு யாருக்காவது அரசு வேலை வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
- பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சிறுமியின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் தனியார் பள்ளியில் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளியில் இருக்கக்கூடிய அலுவலர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல.
- சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா?
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 24-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தலைமை வகித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் தொழிற்சங்க பிரிவு செளந்தரராஜன், மதுரை எம்.பி வெங்கடேசன், வாசுகி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய கே.பாலகிருஷ்ணன், பா.ஜ.க. மற்றும் பா.ம.க. குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் தாங்கள் கூட்டணி அமைத்துள்ள ஆளுங்கட்சியான தி.மு.க.-வையும் அவர் தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக கொதிக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க. ஆட்சியின் போது பொள்ளாச்சியில் பெண்களுக்கு வன்கொடுமை நடந்ததே அப்போது அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்தாரா?. அ.தி.மு.க.-வோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். அன்றைக்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கோரவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களை பற்றி உங்களுக்கு கவலையில்லை, அரசியல் தான் முக்கியமாக இருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.-வின் முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.-வின் முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்த போது அந்த கட்சியின் நிறுவனர், இது நான் உருவாக்கிய கட்சி. இங்கே நான் சொல்வதை தான் எல்லோரும் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர்கள் இந்த அரங்கத்தை விட்டு வெளியே போய்விடலாம் என்று பேசுகிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி என்பது யாரோ ஒருவருக்கு சொந்தமான கட்சி அல்ல. லட்சக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்திருக்கிற கட்சி.
ஆளும் தி.மு.க. உடன் கூட்டணி வைத்துள்ளோம் என்ற அடிப்படையில் பா.ஜ.க., பா.ம.க.-வை கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார் என்று பார்த்தால், முதலமைச்சரையும் கேள்வி எழுப்பினார்.
ஒரு ஆர்ப்பாட்டம், ஊர்வலம், போராட்டம் என்று சொன்னால் காவல்துறை வழக்கு போடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் கேட்க விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்ன அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டீர்களா நீங்கள்? எப்படி காவல்துறை இப்படி கட்டுப்பாடில்லாமல் செயல்படுகிறது. போராட்டத்தை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியம் என்ன? ஒரு ஆர்ப்பாட்டம் நடந்தால் அதற்கு அனுமதியை ரத்து செய்து, கைது செய்துவிட்டால் முடக்கிவிட முடியுமா? சீப்பை ஒளித்துவிடுவதனால் கல்யாணத்தை நிறுத்திவிட முடியுமா? எனவே, இப்படிப்பட்ட போக்கை காவல்துறை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.
அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமாவளவனும் கேள்வியை முன்வைக்க, தற்போது மற்றொரு கூட்டணி கட்சியான சி.பி.எம். கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் முதலமைச்சரை கேள்வி கணைககளால் துளைத்திருப்பது தி.மு.க. கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு நிறைவடைந்த நிலையில் சிறுமி லியாவின் உடல் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து நேற்று சிறுமி லியா லட்சுமி உயிரிழந்தார்.
இதையடுத்து பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குற்றம்சாட்டிய பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தனியார் பள்ளி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளி ஆட்கள் பள்ளிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் உள்ளது. 4 காவல் துறை வாகனங்களும் பள்ளியின் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி லியா லட்சுமியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறுகிறது.
சிறுமி உயிரிழந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






