என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train derailed"
- விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
- இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டத்தில் இன்று பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், வேகமாக வந்த ரெயில் தடம்புரண்டது.
இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. மேலும், ரெயில் பயணிகள் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு, விபத்து குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலுக்கு பிராந்திய பிரிவினைவாதக் குழுவான பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
- பணிமனையில் இருந்து ரெயில் நிலையத்திற்கு சென்றபோது பெட்டிகள் தடம் புரண்டன.
- ரெயிலில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை.
திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரெயில், பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது திடீரென ரெயிலின் நடுவில் இருந்த இரு பெட்டிகளில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன.
இதனை அறிந்த ரெயில் ஓட்டுனர் உடனடியாக அந்த ரெயிலை நிறுத்தினார். அந்த பகுதிக்கு விரைந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தடம் புரண்ட பெட்டிகள் மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தப்பட்டு மீண்டும் அந்த ரெயிலுடன் இணைக்கப்பட்டன.
இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அந்த ரெயில் வந்தடைந்தது. பெட்டிகள் தடம் புரண்ட போது அதில் பயணிகள் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்