என் மலர்
வேலூர்
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். வீடுகளை இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு சிறிது, சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதி ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், சேலைகள், வேட்டிகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. பருப்பு, மளிகை சாமான்கள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள் உள்ளிட்டவை மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.
அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி ஒன்றில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு அனுப்பப்பட்டது. வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் சச்சிதானந்தம் லாரியை அனுப்பி வைத்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
நாட்டறம்பள்ளியை அடுத்த சுண்ணாம்புகுட்டை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி ஐஸ்வர்யா (வயது 23). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். திருப்பதி, வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இளம்பெண் இந்த நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த ஐஸ்வர்யாவிடம், மாமனார் கோவிந்தன் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா அவரிடம் இருந்து தப்பி ஓடி, அருகே உள்ள கிணற்றில் குதித்தார். இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஐஸ்வர்யாவை உயிருடன் மீட்டனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கோவிந்தன் மீது நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர்அடுத்த விரிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் கோகிலம் (வயது 22). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு ரெயிலில் சென்று கொண்டிருந்தார்.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது தான் வைத்திருந்த 2 பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து அவர் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில்நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில்கூறினார். அதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சிங்காரப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவராஜ் (22) என்பதும், கோகிலத்திடம் நகையை திருடியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். #tamilnews
வாணியம்பாடி தாலுகா கலந்திரா கிராமம் அருந்ததியர் காலனியை சேர்ந்த பாபு மனைவி ராஜாத்தி என்பவர் தனது குடும்பத்துடன் மனு கொடுப்பதற்காக வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் சோதனை செய்த போது, அவரிடம் 1 லிட்டர் பாட்டிலில் மண்எண்ணை இருந்தது. மண்எண்ணையை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதில், எங்களது மகன், பாலாணங்குப்பத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து, ஊரை விட்டு இழுத்துக் கொண்டு ஓடி விட்டார். மகன் காதலித்த விவகாரத்தில் ஜோலார் பேட்டை போலீசார் எங்கள் குடும்பத்தை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்து துன்புறுத்துகின்றனர்.எங்களை கொடுமைப்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தனர்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கொடுத்த மனுவில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகில் தரை கடை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, போலீசாருடன் சேர்ந்து தரைக்கடைகளை அகற்றினர்.
மீண்டும் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். #tamilnews
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வீரமணி (21) இவர் நேற்று இரவு சவாரி முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரை வழி மறித்து மிரட்டி பையிலிருந்த ஆயிரம் ரூபாய் பனத்தை பிடுங்கியதாக கொடுத்த புகாரின்பேரில் டவுன் போலீசார் மாவு(எ) மோகன்பாபு (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பணத்தை திருடியவர் இவர்தான் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். #tamilnews
வாலாஜா அனந்தலை பள்ளத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் அனு (வயது 10), மகன் ஆகாஷ் (8). இவர்களில் ஆகாஷ், அதே பகுதியில் உள்ள நிதியுதவிப் பெறும் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்துவந்தான்.
இன்று காலையில் அக்காளுடன் ஆகாஷ், வீட்டருகே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றான். அப்போது, அங்குள்ள கிணற்றை எட்டி பார்த்த ஆகாஷ், தவறி கிணற்றுக்குள் விழுந்தான்.
இதில் தண்ணீரில் மூழ்கிய ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தான். ராணிப்பேட்டை தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இருந்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வாலாஜா போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர்:
வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.
இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.
நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.
இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.
பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.
பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன மூக்கனூரில் அரசு நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்திய நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் அமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவர் மதுபானம் குடித்து விட்டு போதையில் தள்ளாடிய படி வந்து ரகளையில் ஈடுபட்டார்.
அவரை போலீசார் அப்புறப்படுத்தி வெளியேற்ற முயன்றனர். போதையில் இருந்த முதியவரை விடுமாறு போலீசாருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசியபோது ‘‘டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என்னுடைய துறைக்குத்தான் வருகிறது.

அதில் இருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுகிறது. பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகிறது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால், இந்த பணிகள் எல்லாம் கெட்டுப் போய்விடும்’’ என்றார்.
அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சு கூட்டத்தில் இருந்தவர்களிடம் முதலில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு சலசலப்பை உண்டாக்கியது.
ஆசிரியர்கள், மாணவர்கள் முன்னிலையில் மதுகுடிக்க ஊக்குவிப்பதை போல் அமைச்சர் வீரமணி பேச்சு அமைந்திருந்தாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
டாஸ்மாக் வருமானத்தில் சம்பளமா? என்று நினைக்கும் போது வேதனையளிப்பதாக ஆசிரியர்களும், அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சு விவாத பொருளாகவும் மாறியுள்ளது.
வேலூர் அடுத்த அரப்பாக்கத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 28). இவர் புதுவசூர் பகுதியில் உள்ள ஒரு கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் வாணாபாடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வேணுகோபாலிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் வேணுகோபாலிடம், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. வேணுகோபால் மீண்டும் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணின் தரப்பை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் நேற்று வேணுகோபால் வேலை செய்யும் கம்பெனிக்கு வந்தனர். அங்கு வேணுகோபாலை சந்தித்து திருமணம் குறித்து பேசினர். கம்பெனிக்கு வெளியே வேணுகோபாலிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கும்பல் திடீரென அவரை காரில் தூக்கிப்போட்டு கடத்திச் சென்றனர். இதைப்பார்த்த அக்கம்பெனியின் மேலாளர் உடனடியாக சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்திக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனடியாக மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். மேலும் வேணுகோபாலை கடத்திச் சென்ற கார் எண் குறித்தும் அக்கம்பெனியின் மேலாளர் போலீசாரிடம் தெரிவித்திருந்தார். அந்த எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
கடத்தப்பட்ட வேணுகோபாலை, அக்கும்பல் காவேரிப்பாக்கம் அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாற்றுப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அக்கும்பலில் 3 பேர் வேலூரில் உள்ள ஒரு மோட்டார்சைக்கிளை எடுப்பதற்காக வேலூருக்கு அதே காரில் சென்றனர். வேணுகோபால் மீதம் உள்ள 3 பேரின் பிடியில் இருந்தார்.
கார் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வந்தபோது அங்கிருந்த போலீசார் அந்த காரை பார்த்தனர். அதில் வேணுகோபால் இல்லை. இதுகுறித்து வாலாஜா போலீசார் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அந்த காரை வாலாஜா போலீசார் பின்தொடர்ந்து வந்தனர். சத்துவாச்சாரி அருகே கார் வந்தபோது சத்துவாச்சாரி போலீசாரும், வாலாஜா போலீசாரும் அக்காரை மடக்கி காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் ராணிப்பேட்டை சீனிவாசபேட்டை தெருவை சேர்ந்த உமாமகேஸ்வரன் (29), காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பூவரசன் (30), ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த புத்தன் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் வேணுகோபாலை அவர்களின் கூட்டாளிகள் 3 பேர் பிடித்து வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
பின்னர் போலீசார், பிடிபட்ட 3 பேரிடம் உங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து வேணுகோபாலை விடுவிக்குமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் தங்களது கூட்டாளிகளுக்கு போன் செய்து அவரை விடுவிக்குமாறு கூறினர். அதைத்தொடர்ந்து வேணுகோபாலை அவர்கள் விடுவித்தனர். பின்னர் அவர், தனது உறவினர் பாஸ்கர் என்பவர் மூலம் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். வேணுகோபாலை விடுவித்த 3 பேரும், தலைமறைவாகி விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர். சினிமா பாணியில் வாலிபர் மீட்கப்பட்ட சம்பவம் வேலூர், காவேரிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். பா.ம.க.வும் மரண தண்டனையை ஒருபோதும் ஆதரிக்காது.

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வந்தது போல் முக்கொம்பு அணை மதகுகள் திடீரென உடைந்துவிட்டதாக கூறி மருத்துவம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும். முக்கொம்பு அணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளை முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார்.
இந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று காலை மேலும் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அதன்படி, இதுவரை மொத்தம் 47 பேர் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.
இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 15 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
சென்னையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி அயூப்கான் கூறுகையில்:-
தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் சுமார் 1500 பேர் உள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி இருவரை 500 பேர் விடுதலை செய்துள்ளனர். மீதமுள்ள ஆயிரம் பேர் தங்களை எப்போது விடுதலை செய்வார்களோ என்ற மனஉளைச்சலில் கைதிகளும் அவர்களது குடும்பத்தாரும் தினமும் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களையும் விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு பிறகு இப்போது தான் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துள்ளனர்.
ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளின் எண்ணிக்கை கூடியுள்ளது.
ஆண்டுதோறும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த பிப்ரவரி மாதம் கைதிகள் விடுதலையை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் 8 மாதம் கழித்து தான் தாமதமாக நாங்கள் விடுதலையாகி உள்ளோம் என்றார். #MGRCentenary
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பொம்மிகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் சொந்தமாக பொக்லைன் எந்திரம் வைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிகொட்டாய், ஆண்டியூரை சேர்ந்த திருப்பதி (வயது 23) என்பவர் கோவிந்தசாமியிடம் கடந்த 6 மாதமாக பொக்லைன் எந்திரத்தின் டிரைவராக வேலை செய்து வந்தார்.
ஆந்திர மாநிலத்துக்கு பொக்லைன் எந்திரத்தை திருப்பதி எடுத்து செல்லும்போது அங்கிருந்த செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து திருப்பதி நாமும் செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தினால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் 13 பேரை செம்மரக்கட்டை வெட்டி கடத்துவதற்காக பொம்மிகுப்பத்துக்கு அழைத்து வந்தார். அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் பொம்மிகுப்பத்துக்கு நேற்று இரவு சென்று அவர்களை சுற்றி வளைத்தனர்.
அதைத்தொடர்ந்து திருப்பதி, ஆண்டியூரை சேர்ந்த முருகன் (42), விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையை சேர்ந்த குமார் (25), மாதவன் (35), மாது (30), செந்தில்குமார் (30), அய்யாசாமி (28), ஈஸ்வரன் (35), ராஜேந்திரன் (40), சந்திரசேகரன் (31), மற்றொரு குமார் (26), வெள்ளையன் (30), தீர்த்தகிரி (30) ஆகிய 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் திருப்பதிக்கு செம்மரம் வெட்ட செல்வதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து ஒரு கோடரி, ஒரு கார், 5 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #RedSandalwood






