search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம் சார்பில் 2-ம் கட்டமாக ரூ.27 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்
    X

    வேலூர் மாவட்டம் சார்பில் 2-ம் கட்டமாக ரூ.27 லட்சம் வெள்ள நிவாரண பொருட்கள்

    கேரள மாநிலத்துக்கு 2-ம் கட்டமாக ரூ.27 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    வேலூர்:

    கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகள், உடைமைகளை இழந்தனர். வீடுகளை இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மழை, வெள்ளத்தால் கேரள மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு சிறிது, சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

    கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதற்கட்டமாக கடந்த 20-ந் தேதி ரூ.1 கோடியே 69 லட்சம் மதிப்பில் அரிசி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், சேலைகள், வேட்டிகள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் கொடுத்த நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் வைக்கப்பட்டிருந்தன. பருப்பு, மளிகை சாமான்கள், சமையல் பாத்திரங்கள், போர்வைகள் உள்ளிட்டவை மொத்தம் ரூ.27 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

    அவை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து லாரி ஒன்றில் நேற்று கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு அனுப்பப்பட்டது. வேலூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை தாசில்தார் சச்சிதானந்தம் லாரியை அனுப்பி வைத்தார். இதில் வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×