search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை
    X

    வேலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை

    வேலூரில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூரில் கோடை காலத்தில் தான் எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அப்போது 110 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகும்.

    இந்தாண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் 100 டிகிரியை தொட்டது. அதைத்தொடர்ந்து இந்த மாதத்தின் முதல்வாரம் முதல் தொடர்ந்து சில நாட்கள் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு பதிவானது.

    நேற்று காலை 10 மணிக்கேவெயில் வாட்டி எடுத்தது. மதியம் 2 மணியளவில் 99.9 டிகிரி வெயில் அளவு பதிவானது.

    இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் வேலூர் பகுதியில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமாக பெய்த மழை சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் பெய்தது. இவ்வாறாக சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதைத்தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டிருந்தது.

    பலத்த மழை காரணமாக புதிய, பழைய பஸ் நிலையங்கள், ஆரணி சாலை, காமராஜர் சிலை அருகே மற்றும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். அதேபோன்று அலுவலக வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்களும் அவதி அடைந்தனர்.

    பலத்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது. அதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×