என் மலர்
திருவள்ளூர்
- புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து கடந்த வாரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அப்போது குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. பின்னர் மழை இல்லாததால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்நது.
இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இன்று காலையும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 362 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் 2726மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080மி.கனஅடி. இதில் 673மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 186 கனஅடி தண்ணீர் வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645மி.கனஅடி. இதில் 3115 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வரும் 162 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 21.98 அடிக்கு தண்ணீர் உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1862 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 70 கனஅடி தண்ணீர் வருகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 5 ஏரிகளிலும் மொத்தம் 11757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 8811 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்னேரி பகுதியில் பெய்த பலத்த மழை காணமாக ரெயில்வே சாலையில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் காணப்படுகிறது. தடபெரும்பாக்கம் காலனி, துரைசாமி நகர் பகுதியில் தாழ்வான இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. நேற்று இரவு முதல் பொன்னேரி மீஞ்சூர் சோழவரம், திருப்பாலைவனம் பழவேற்காடு மணலி புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
- இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
- 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரிடம் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அவரது மனைவி கவிதா ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டு நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக 6 பவுன் நகையை கடனாக வாங்கி யதாக தெரிகிறது. பின்னர் அந்த நகையை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது. இதுதொர்பாக கடம்பத்தூர் போலீஸ்நிலையம் மற்றும் போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் சிவகாமி புகார் செய்தார். இதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் சிவகாமி தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேற்று புகார் கொடுக்க வந்தார். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த சிவகாமி மற்றும் அவரது உறவினர்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.
மேலும் சிவகாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கைதான இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கிடையே கைதான 7 பேரையும் டிசம்பர்4-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டடார். இதையடுத்து புதுப்பெண் உள்பட 5 பெண்கள் புழல் மகளிர் சிறையிலும் மற்ற 2 பேரும் திருவள்ளூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
- செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் பகுதியில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் நாளை (22-ந்தேதி) நடை பெறுகிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேனாம்பேடு, கள்ளக்குப்பம், ஓரகடம், பானுநகர், புதூர், வெங்கடாபுரம், செங்குன்றம், முரகாம்பேடு பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிந்ததும் மின் வினியோகம் அளிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு அனுப்பம்பட்டு, பழவேற்காடு, வன்னிப்பாக்கம், தேவம்பட்டு, நந்தியம்பாக்கம், அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தடப்பெருக்பாக்கம் ஊராட்சி முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வீடுகளில் பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதித்த கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், கொசு மருந்து தெளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
- மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.
இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.
ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.
வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.
ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-
வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

தியாகராஜன்
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.
ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.
வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.
ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-
தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

ஜோதி விஸ்வநாதன்
இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆவடி:
பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்த்து வரும் பொது மக்கள் தங்களது மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வளர்த்து முறையாகப் பராமரித்து கொள்ள வேண்டும்.
தவறும் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை செய்யவும், மீறுபவர்கள் மீது விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை விதிகள்) சட்டம் 1997-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டத்தை மீறும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 289-ன்படியும் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டம் 11 (எச்)-ன்படியும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூந்த மல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் கால்நடை வளர்ப்பு கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகரசபை தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஸ்ரீதர், ஆணையர் லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை உரிமையாளர்களுக்கு மேற்கண்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் அறிவுரைகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் குழு உறுப்பினர்களான போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், கால்நடை மருத்துவர்கள் கலந்து கொண்டு கால்நடை உரிமையாளர்களுக்கு கால்நடைகளை சாலையில் திரியவிடாமல் முறையாக வளர்ப்பது குறித்தும், கால் நடைகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினர்.
- தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
- குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த கொல்லாச்சேரியில் நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-வது படிக்கும் சந்தோஷ் (16) என்ற மாணவர் மாநகர பஸ்சில் படிக்கெட்டில் தொங்கிச் சென்றபோது தவறி கீழே விழுந்ததில் பஸ்சின் சக்கரம் அவரது காலின் மீது ஏறியது.
பலத்த காயம் அடைந்த மாணவன் சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரின் இரண்டு கால் பாதங்களும் கடுமையாக சேதமடைந்ததால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக பஸ்சை அஜாக்கிரதையாக இயக்கியதாக பஸ் டிரைவர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஸ் மீது குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
- பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
- பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).
மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
- சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 27 வார்டு களில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை விரட்டி செல்வதும், குரைப்பதும் என அச்சுறுத்தி வருகிறது. சில நேரங்களில் திடீரென்று தெருக்களில் செல்லுகின்ற வாகனங்களின் குறுக்கே பாய்வதால் விபத்துகளும் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தெருநாய்கள் கடித்து பலர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லைகளை கட்டுப்ப டுத்த வேண்டும் என்று திருவள்ளூர் நகர மன்ற கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா உத்தரவின் பேரில் திருவள்ளூர் சுகாதார அலுவலகம் கோவிந்தராஜ் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்டமாக நகராட்சி பகுதியில் உள்ள 11-வது வார்டில் இன்று காலை சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடித்து நகராட்சி அலுவலகத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு வளாகத்தில் கருத்தடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவள்ளூர் நகராட்சியில் தெருக்களில் சுற்றித்திரிந்த 32 தெருநாய்களை பிடித்து நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். அவர்களை கண்டதும் தப்பி ஓட முயன்ற நாய்களை விரட்டி சென்று வலை கூண்டை வீசி பிடித்து வாகனத்தில் கொண்டு சென்றனர். தெருக்களில் சுற்றும் நாய்களை பிடிக்கும் பணி இன்னும் வரும் நாட்களிலும் தொடர்நது நடைபெறும் என்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தெரிவித்து உள்ளார்.
- 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்கும் போது 3 பேர் பலியானார்கள்.
இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது
- நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த சித்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்வா. இவர் தனது வீட்டில் லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டில் வைத்து ஆசையாக வளர்த்து வந்தார்.அந்த கூண்டை வீட்டு முன்பு உள்ள சுவற்றில் வைத்து இருந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை வீட்டின் முன்புறம் இருந்த லவ் பேர்ட்ஸ் பறவைகளின் கூண்டிற்குள் குறுகிய இரும்பு கம்பிகளுக்கு இடையே புகுந்து நல்லபாம்பு ஒன்று நுழைந்தது.
அந்த பாம்பு லவ் பேர்ட்ஸ் பறவையை உயிருடன் விழுங்கியது. ஒருபறவையை விழுங்கிய பின்னர் அந்த பாம்பு மற்றொரு பறவையை பிடிக்க முயன்றபோது கத்தத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்த ஜோஸ்வா வெளியே வந்து பார்த்த போது லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் நல்லபாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உயிருடன் இருந்த மற்றொரு லவ் பேர்ட்ஸ் பறவயை பத்திரமாக மீட்டார். லவ் பேர்ட்சை விழுங்கியதால் பாம்பின் உடல் பெருத்து விட்டது.
இதனால் கூண்டின் சிறியகம்பிகளுக்கு இடையே புகுந்து நல்ல பாம்பால் வெளியேவர முடியாமல் சிக்கி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த பாம்பையும் மீட்டு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இதனால் லவ் பேர்ட்சை ருசித்த மகிழ்ச்சியில் நல்ல பாம்பு தப்பித்தோம் என்று அங்கிருந்து பாய்ந்து சென்றது. ஆனால் தனது ஜோடியை பறிகொடுத்த மற்றொரு லவ்பேர்ட்ஸ் கத்தியபடி பயத்தில் காணப்பட்டது.
- கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
- குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.
பொன்னேரி:
பழவேற்காட்டில் முகத்து வாரம் மணல் சேர்ந்து அடைபட்டத்தால் அப்பகுதியை சுற்று உள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமமக்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
கடற்கரை அருகில் உள்ள கோரை குப்பம் பகுதி மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதனால் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன. இதனால் ஏரி பகுதியில் பிடிபடும் நண்டு, இறால்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளன. ஒரு கிலோ நண்டு ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் இறால் கிலோ ரூ.500 முதல் 800 வரையும், மடவை மீன் ரூ.300 முதல் 500 வரையும் விற்பனை செய்யபடுகிறது.






