என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.

    வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வெடி சத்தம் போல் பயங்கர சத்தத்துடன் வங்கி தீப்பற்றி எரிந்தது.
    • அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் மேலாளர் உயிரிழந்தார்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புதுக்குடி சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீதரன் (வயது 52) இந்த வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

    இவருக்கு உதவியாக தற்கால பணியாளராக பெண் ஒருவர் வேலை செய்து வருகிறார். இந்த வங்கியுடன் இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையத்தில் ஒரு பெண் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று மதியம் இ-சேவை மையத்தில் உள்ள பெண், ஸ்ரீதரனின் உதவியாளரும் மதியம் உணவுக்கு வெளியே சென்று உள்ளனர். ஸ்ரீதரன் மட்டும் வங்கியில் தனியாக இருந்துயுள்ளார்.

    அந்நேரத்தில் திடீரென வங்கியின் உள் வெடி சத்தம் போல் பயங்கர சத்தம் கேட்டது. அத்துடன் வங்கி தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீ பரவி வங்கி முழுவதும் தீ பரவியது. அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் தீ முழுமையாக பரவி புகை மூட்டமாக மாறியது. அருகில் உள்ளவர்கள் கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர்.

    உள்ளே சென்றவர்கள் ஸ்ரீதரனை மீட்க முயன்றனர். அதற்குள் மூச்சுதிணறல் ஏற்பட்டு ஸ்ரீதரன் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கம்ப்யூட்டர் பேட்டரி வெடித்து வங்கியில் தீப்பிடித்ததாக கூறப்பட்டது.

    பின்னர் போலீசார் விசாரணையின்போது வங்கியில் பெட்ரோல் மற்றும் தீப்பெட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீதரன் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
    • மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப்பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி-சென்னை இடையே முத்துநகர் விரைவு ரெயில் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது.

    21 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் ஏற்கனவே 4 பொதுப்பெட்டிகள் இரு ந்தன. ஆனால் இடையில் 3 பெட்டிகளாக குறைக்கப்பட்டு, 3-ம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டி எண்ணிக்கை 4ஆக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் பொதுப்பெட்டிகளில் பயணிகள் அமர்ந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நெரிசல் காணப்படுவதால், பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து முத்துநகர் விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை தெற்கு ரெயில்வே நிர்வாகம் மீண்டும் 4 ஆக அதிகரித்துள்ளது.

    மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதி பெட்டிகளில் ஒன்று குறைக்கப்பட்டு, முன்பதிவு இல்லாத ஒரு பொதுப்பெட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி-சென்னை முத்துநகர் ரெயிலில் இந்த மாற்றம் வருகிற 20-ந்தேதியில் இருந்தும், சென்னை-முத்துநகர் ரெயிலில் வருகிற 21-ந்தேதியில் இருந்தும் நடைமுறைக்கு வரும். பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரெயில்வேயின் இந்த முடிவுக்கு பல்வேறு ரெயில் பயணிகள் நலச்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

    • கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.
    • கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    இந்நிலையில் கோவில் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதாரபதி வரை கடல் அலையின் சீற்றம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. கடல் அலை கரையை தாண்டி தொட்டு சென்றது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அச்சமின்றி வழக்கம் போல் புனித நீராடினர். இந்நிலையில் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சேலத்தை சேர்ந்த தங்கம் (52), புதுக்கோட்டையை சேர்ந்த பாகாம்பிரியா (39), கோயம்புத்தூரை சேர்ந்த வெங்கடேசன் (56) ஆகியோர் கடலில் நீராடிய போது அலையின் சீற்றத்தில் சிக்கினர்.

    இதில் அவர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களை, கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்த சிவராஜா, சுதாகர், ஆறுமுக நயினார், இசக்கிமுத்து, ராமர் ஆகியோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில் முதல் உதவி சிகிச்சை மையத்தில் முதல் சிகிச்சை அளித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • கடற்கரையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.
    • பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகியது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிச னம் செய்து செல்கின்றனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதன்படி இன்று கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் ஆகியது.

    வழக்கம் போல் கோவிலில் அதிகாலை 4மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

    பக்தர்கள் வந்த வாகனங்களை போக்கு வரத்து போலிசார் திருச்செந்தூர் நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

    • 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.
    • முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    நெல்லை:

    தமிழகத்தில் கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளிட்ட மாற்றங்களை முன்கூட்டியே உடனுக்குடன் கண்டறியும் வகையில் 450 இடங்களில் இ.டபிள்யூ.எஸ். எனும் ஆரம்ப எச்சரிக்கை நவீன கருவிகளை அமைக்கும் பணிகளை பேரிடர் மேலாண்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

    நெல்லை மாநகராட்சி மூலமாக கேபாசிட்டிஸ் என்னும் திட்டத்தின் கீழ் ரூ.88 லட்சம் மதிப்பில் தாமிரபரணி, ராமநதி மற்றும் கடனா நதிகளில் வெள்ளப்பெருக்கினை முன்கூட்டியே கண்காணித்து எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அனுப்பும் வகையில் 10 இடங்களில் கருவிகள் பொருத்தப்பட்டு வருகிற்து.

    தனியார் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்படும் இந்த கருவிகள் விரைவில் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கருவிகள் தாமிரபரணி, கடனா, ராமநதி வழித்தடங்களான கோபாலசமுத்திரம், கோவில்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆலடியூர், பொட்டல்புதூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல், முறப்பநாடு, சேரன்மகாதேவி, கொக்கிரகுளம் ஆகிய இடங்களில் அமைகிறது.

    இதன் மூலம் ஆறுகளில் எவ்வளவு வெள்ளம் வரும்? எப்போது வரும்? என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அந்தந்த பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும். இதன் மூலம் வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறிந்து எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.

    இந்த தகவல்கள் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை, முக்கிய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இதில் சேரன்மகாதேவி மற்றும் கொக்கிரகுளத்தை தவிர மற்ற இடங்களில் கருவி அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    இந்த கருவியில் காமிரா, சென்சார் வசதி, சோலார் பேனல் உள்ளிட்ட நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கருவிகள் அமைப்பது குறித்து கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆகியோர் மற்ற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.
    • 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணி மகாராஜா (வயது 45). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அந்தோணி மகாராஜா உள்பட 12 மீனவர்கள் கடந்த மாதம் 21-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

    அதேபோன்று அதே பகுதியை சேர்ந்த அந்தோணி தென் டேனிலா (வயது 23) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் கடந்த மாதம் 23-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று உள்ளனர்.

    இந்த 2 படகு மீனவர்களும் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தருவைகுளத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளையும் மடக்கி பிடித்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட தருவைகுளம் மீனவர்கள் 22 பேரும் இலங்கை கடற்படையில் தளத்தில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே சிறை பிடிக்கப்பட்ட 22 பேரை விடுதலை செய்யக்கோரியும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கக்கோரியும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மற்றும் தருவைகுளம் ஊராட்சி கூட்டமைப்பினர் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    • இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதற்கு தகுந்த தீர்வு காண கோரி மீனவர்கள் மற்றும் அரசியல் தலைவர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்கள் இலங்கை மன்னார் தென்கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தூத்துக்குடி மீனவர்கள் கைது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கைதானவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    • இன்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி யும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரி களுக்காக நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

    இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர்.
    • கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும்.

    இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கால சந்தி பூஜையாகி தீர்த்தவாரி நடைபெற்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையில் இருந்து ஏராளமானோர் கடலில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அதன்பின் சுவாமி தரிசனம் செய்தும் வழிபட்டனர். இதனால் கோவிலில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
    • விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    இன்று ஆடி 18, ஆடி பெருக்கை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    ஆடி மாதம் 18ம் தேதி ஆடி பெருக்கு என்று நம் முன்னோர்கள் கருதி இந்த நாளை புனித நாளாக கருதி விவசாய பணிகள் தொடங்குவது, வீடுகள் கட்டுமான பணிக்கு நாள் செய்வது என செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆடி பெருக்கை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30க்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

    ×