என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • அம்பேத்கர் 66-வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.
    • அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் 66- வது நினைவு நாள் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இந்நிக ழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சந்திரராமன், நகர செயலாளர் சுந்தர், ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், முன்னாள் நகர செயலாளர் முருகேசன், முத்துக்குமார், பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்க நகர செயலாளர் வாசுதேவன் , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க உத்தரவிட்டார்.
    • விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுத மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் கள ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நாகூர்-நன்னிலம்-நாச்சியார் கோவில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிகார்பாளையம் வளைவு சாலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சாலை தடுப்பாண்கள், பிரதிபலிப்பான் விளக்குகள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.

    இவ்ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, நன்னிலம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நன்னிலம்
    காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர்.
    • முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி கடைத்தெருவில் 10 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சரிவர உடை அணியாமல் சுற்றி திரிந்து கொண்டும் பொதுமக்களுக்கும் இடையூறாகவும் தொந்தரவு செய்து கொண்டு இருந்தார்.

    இதனை அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் நம்பிக்கை மீட்பு குழுவினர் சமூகப் பணியாளர் சக்தி பிரியா, ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணைமீட்டு நம்பிக்கை மனநல காப்பகத்திற்கு உரிய பாதுகாப்பிற்காகவும் மனநல சிகிச்சை, மறுவாழ்விற்காக கொண்டு வந்து சேர்த்தனர் .

    இது பற்றி நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் கூறும்போது, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குளிக்க வைத்து முடி சுத்தம் செய்து நல்ல உடைகள் அணிந்து உணவுகள் சரியாக கொடுத்து அவருடன் நன்கு அன்புடன் பேசிக்கொண்டு சிகிச்சை தொடர்ந்து செய்து வந்தால் முகவரியை கண்டறிந்து இவரது குடும்பத்தினரை வர வைத்து விரைவில் குடும்பத்துடன் சேர்த்து விடுவோம் என்றார்.

    • மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.
    • எதிர்பாராத விதமாக மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பலி

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம்-மன்னார்குடி அருகே செருகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 36). இவரது மனைவி வனிதா.

    இவர் பிரசவத்திற்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிபட்டுள்ளார்.

    இந்நிலையில் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக முருகானந்தம் வீட்டிற்கு தனது ேமாட்டார் சைக்கிளில் சென்றார்.

    பின்னர் உடைகளை எடுத்து கொண்டு சித்தமல்லி கடை தெருவில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளிலில் நின்றிருந்த ஜெயபிரகாஷ் (40) என்பவர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

    இதுகுறித்து பெருக வாழ்ந்தான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    நகரக் செயலாளர் டி. ஜி. சண்முகசுந்தர் தலைமையில், சிங்காரவேலு தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஜி .எம். பாலகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர், சுரேஷ் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சுரேந்தர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், அன்பரசன் நகர அவைத் தலைவர், முருகதாஸ் மாவட்ட பிரதிநிதி, சிதம்பரம் நகர துணை செயலாளர், எம் முருகதாஸ் நகர பாசறை செயலாளர், டி பிரதீப் குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கே ஜகபர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர், மரியதாஸ் நகர இளைஞரணி செயலாளர், தினேஷ்குமார் நகர மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நீச்சல் குளத்தை கண்டதும் குதூகலம் அடைந்த செங்கமலம் யானை அதன் உள்ளே இறங்கி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தனது உடல் மேல் பீய்ச்சியடித்து உற்சாகமாக குளித்தது.
    • குளத்தில் யானை விளையாடி மகிழ்ந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள யானை செங்கமலம் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் காணப்படும்.

    இதனால் இந்த யானை பக்தர்களால் 'பாப்கட்டிங்' செங்கமலம் என அன்புடன் அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யானை செங்கமலத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் யானை செங்கமலத்தை காண கோவிலுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பக்தா்களின் செல்லப்பிள்ளையாக திகழும் யானை செங்கமலத்தின் தலையில் உள் முடிகளின் அமைப்பு மற்ற யானைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.

    தலையில் வளர்ந்த முடிகள் முன்பக்க நெற்றியை மறைக்கும் வகையில் கீழ்நோக்கி வரிசையாக இருக்கும். யானை செங்கமலத்தை குளிக்க வைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை அதன் தலைமுடிக்கு ஷாம்பு போடப்படும். பின்னர் யானையின் தலைமுடியை அதற்கென வடிவமைக்கப்பட்ட பெரிய சீப்பு மூலம் சீவி அலங்கரித்து நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யானையை கண்டால் பக்தர்கள் மனதில் தனி குதூகலம் பிறக்கும்.

    இந்த யானைக்கு வெப்பம் தாக்காதவாறு இருக்க யானை இருக்கும் ஷெட்டின் மேற்புறம் மூங்கில் தட்டியால் பந்தல் அமைக்கப்பட்டு மின்விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் கால்நடை டாக்டர் மூலம் யானையின் உடல் நலன் பரிசோதிக்கப்படுகிறது.

    யானையை குளிக்க வைக்க என தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் யானை மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு யானை குளிப்பாட்டப்பட்டு வந்தது. இதில் போதிய அளவில் யானையின் உடலை குளிர்விப்பது சிரமமாக இருந்தது. எனவே யானைக்கு நீச்சல் குளம் கட்ட வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கோவில் வளாகத்தில் யானைக்கு தனியாக நீச்சல் குளம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. நீச்சல் குளம் 25 அடி நீளம், 25 அடி அகலம், 9 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் நிரப்பும் பணி நிறைவடைந்து.

    நேற்று காலை நீச்சல் குளம் திறப்பு விழா நடந்தது. நீச்சல் குளத்தை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் செங்கமலம் யானை பக்தர்கள் புடை சூழ நீச்சல் குளத்துக்கு அழைத்து வரப்பட்டது.

    நீச்சல் குளத்தை கண்டதும் குதூகலம் அடைந்த செங்கமலம் யானை அதன் உள்ளே இறங்கி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தனது உடல் மேல் பீய்ச்சியடித்து உற்சாகமாக குளித்தது. அப்போது குளத்தில் யானை விளையாடி மகிழ்ந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் பாகன் ராஜா யானையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், ஆணையர் சென்னு கிருஷ்ணன், துணைத் தலைவர் கைலாசம், நகர தி.மு.க செயலாளர் வீரா.கணேசன், கோவில் செயல் அதிகாரி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு சந்தனம் பூசப்பட்டது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹாவில் 721-ம் ஆண்டு சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலை இரண்டு முப்பது மணிக்கு புனித அம்மா பள்ளிவாசல் சென்று வலம் வந்து, பின் 40 அடி உயரமுள்ள சந்தனக்கூடு ஜருக கண்ணாடியால் ஜோடிக்கப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு முதன்மை தர்கா பாரம்பரிய அறங்கா வலர் பாக்கர் அலி தலைமை யில்தர்காவை சுற்றி வலம் வந்தது.

    தொடர்ந்து, இன்று சந்தனக்கூடு தர்காவலம் சுற்றி அதிகாலை 5 மணிக்கு புனித ரவுலா ஷாரிப்புக்கு புனித சந்தனம் பூசப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டபல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ஒன்றி யத்துக்கு உட்பட்ட அனைத்து டாஸ்மார்க்களுக்கும் நேற்று அடைக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் திருவாரூர் மாவட்ட போலீசார் சிறப்பாக ஈடுபட்டுள்ளனர்.

    விழாவையொட்டி, வருகிற 8-ந் தேதி இரவு மகரிபு தொழுகைக்கு பின் புனித திருக்குர்ஆன் ஷரீஃப் ஓதி துவா செய்து இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.

    • 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள்.
    • காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு நம்பிக்கை மனநல காப்பகத்தில் பில்லியன் ஆர்ட்ஸ் பீட்டிங் பவுண்டேஷன் இணைந்து பொது மருத்துவ முகாம் நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடைபெற்றது

    திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான எழிலரசன் தலைமை வகித்தார். நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன், அப்போலோ மருத்துவமனை குழுமம் சார்பில் மூத்த அலுவலர் ஆனந்தபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பக திட்ட மேலாளர் விஜயா அனைவரையும் வரவேற்று பேசினார் .மூத்த டாக்டர் வர்கீஸ், உதவி பேராசிரியர் டாக்டர் சருண், தசை இயக்க டாக்டர் கருணாநிதி மற்றும் செவிலியர்கள் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சுகர் நிலை, உடல் இயக்கங்கள், கை நடுக்கம், ரத்த சோகை, தலைவலி, போன்ற பல்வகை வியாதிகளுக்கு உண்டான பரிசோதனைகள் செய்து நம்பிக்கை மனநல காப்பகத்தில் உள்ள 41 பயனாளிகளுக்கு அதற்குரிய மருந்து மாத்திரைகள் பரிந்துரைத்து மருத்துவ அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்கள் .

    காப்பகத்தில் உள்ள வேற்று மொழி பயனாளிகளிடம் டாக்டர்கள் அவரவரது மொழியில் பேசி கேட்டறிந்தார்கள். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் டாக்டர்களிடம் நன்றாக சாப்பிடுகின்றோம் சந்தோஷமாக இருக்கிறோம். என்று சொன்னதை கேட்டு டாக்டர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் இவர்களை சந்தோஷமாக மகிழ்விக்க பணியாளர்கள் அனைவருக்கும் உதவி பேராசிரியர் டாக்டர் சருண் ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கினார்.

    காப்பக பணியாளர்கள் சரவணன், கோகிலா, சக்தி பிரியா, வள்ளி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆனந்த் பாபு நன்றி கூறினார்.

    • ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.
    • சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாமை கல்லூரியில் நடத்தியது. ஏ.ஆர்.ஜெ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் மற்றும் தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி நீதித்துறை நடுவர் எண்:1 மன்னார்குடி அமிர்தீன் கலந்து கொண்டு இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை ஒவ்வொரு மாணவரும் படிக்க வேண்டும். சட்டத்தில் இருக்கும் சில ஆர்டிக்கிள் மற்றும் செக்சன்களை வரிசைபடுத்தி விளக்கி கூறினார். சதி 'உடன்கட்டை ஏறுதல்' என்பது சட்டத்தால் உடைக்கப்பட்டது. குழந்தை திருமண ஒழிப்பு, ஆண், பெண் சொத்தில் சமபங்கு, சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் போன்றவற்றை விரிவாக எடுத்துக் கூறினார்.

    அனைத்து மாணவர்களும் போதை ஒழிப்பு உறுதி மொழியை நீதிபதி முன்பு எடுத்துக் கொண்டனர். முடிவில் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கத்தை அளித்தார். இதில் மேலாண்மை கல்லூரி இயக்குநர் செல்வராஜ், அட்மிஷன் அலுவலர் துரை முருகன், என்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சந்துரு, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக முதல்வர் முனைவர் வெங்கடேசன் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    • தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் நடைபெற்றது.
    • மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார்.

    நன்னிலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஸ்துரை, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.

    இதில் நன்னிலம் வட்டாரத்தை சேர்ந்த 7 உயர்நிலை பள்ளிகள், 16 நடுநிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது கவின் கலை, நுண் கலை, இசைப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் ஆகிய ஆறு தலைப்புகளின் கீழ் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு நினைவுகளை போற்றி பாதுகாக்க கூடிய வகையில், தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் புத்துணர்வு ஊட்டக்கூடிய வகையில் நடைபெற்றது.

    இதில் மாணவ- மாணவிகள் ஏராள–மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கலைக்குழு மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    • அப்துல் காதர் அவர்களை நேரில் பேச அழைத்துள்ளார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பணமோசடியில் ஈடுபட்ட வீரசேகரன், முகேஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கடைதெரு செருபனையூர் சாலையில் மருத்துவமனை நடத்தி வருபவர் அப்துல் காதர். இவரின் மகன் டாக்டர் இம்ரான்கான் என்பவர் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வருகிறார்.

    இந்த மருத்துவமனைக்கு கடந்த 29ந்தேதி முத்துப்பேட்டை தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்த பாலசுந்தரி காய்ச்சல் இருப்பதாக கூறி மருத்துவம் பார்த்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் ௩௦-ந்தேதி மருத்துவரின் தந்தை அப்துல் காதருக்கு செல்போனில் தொடர்புக்கொண்டு பேசிய ஒருவர் நேற்று அங்குவந்து மருத்துவம் பார்த்த பால சுந்தரி திடீரென இறந்து விட்டார்.

    இதனால் உங்களை சும்மா விடமாட்டோம் என்று மிரட்டி உள்ளார். இதை நம்பிய அப்துல் காதர் அவர்களை நேரில் பேச அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த வீரசேகரன்(34), முகேஷ் குமார்(26) ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அப்துல் காதரிடம் ரூ. 5லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்துல் காதர் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்டு திரும்பிய இருவரும் இறுதி சடங்கு செய்துவிட்டு வந்து மீதி தொகை வாங்கி கொள்கிறோம் என்று கூறி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் 11ந்தேதி மீண்டும் இருவரும் மருத்துவமனைக்கு வந்து மீதி 3 லட்சம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி ரூ.50ஆயிரம் அவரிடம் பெற்று சென்றனர்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த அப்துல் காதர் தில்லைவிளாகத்தில் உள்ள நண்பரை தொடர்புக்கொண்டு இதுகுறித்து கூறி விசாரித்த போது பாலசுந்தரி இறந்து போகவில்லை என்று தெரிய வந்தது.

    இது குறித்து அபதுல்காதர் முத்துபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணமோசடியில் ஈடுப்பட்ட வீரசேகரன், முகேஷ் குமார் ஆகியோரை கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய பால சுந்தரியை போலீசார் தேடி வருகிறனர்.

    • மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக போட்டிகள்.
    • முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் கலை திருவிழாவின் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், உதவி தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், நடராஜன், மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சிவராமன் அனைவரையும் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசுகையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறன், குழு திறன் ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் கலை திருவிழா நடத்தப்பட்டு தற்போது வட்டார அளவிலும் நடைபெற்று வருகிறது.

    இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் நாட்டுப்புறப்பாட்டு, செவ்வியல் இசை, சங்கு முழங்குதல், கீபோர்டு வாசித்தல், பிற மாநில நாட்டியம், ஒயிலாட்டம், கரகாட்டம், நாட்டுப்புற நடனம் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    இதில், முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் பாஸ்கர், கங்கா, மரகதம், ஆசிரியர்கள் அலோசியஸ், ரமேஷ், தமிழரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியின் நடுவர்களாக அம்மனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை விமலா, சாத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வெற்றி அழகன், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தியாகராஜன், லாவண்யா இசைக்கலைஞர் ஷ்யாமளா தேவி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆடின் மெடோனா, நெடும்பலம் மேல்நிலைப்பள்ளி சுமதி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.

    முடிவில் சிறப்பாசிரியர் தேசிகாமணி நன்றி கூறினர்.

    ×