என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "warning sign"
- இந்த சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
- பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த ஓரசோலை பகுதியில் நடந்த சாலை விபத்தில் கிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து இறந்தவரின் உறவினரான மற்றொருவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட ஒரசோலை சாலை பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து கூறியதாவது:- இந்த சாலையில் மட்டும் வருடத்திற்கு 10-க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுவதாகவும், விபத்தில் சிக்கியவர்களில் 5 முதல் 6 பேராவது இறந்து விடுகின்றனர். பலர் பெரும் காயங்களுடன் கை, கால்களை இழந்து தவிக்கின்றனர். மேலும் இந்த சாலையில் 300 மீட்டர் அளவிற்கு வேகத்தடை இல்லாததும் ஒரு காரணம் என தெரிவித்தனர். இதனால் சாலையில் அதிக அளவு விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் இந்த சாலையை விபத்து பகுதியாக அறிவித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க உத்தரவிட்டார்.
- விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், அச்சுத மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிகார்பாளையம் வளைவு சாலையில் எதிர்பாராத சாலை விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அப்பகுதியில் கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நாகூர்-நன்னிலம்-நாச்சியார் கோவில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிகார்பாளையம் வளைவு சாலையில், வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் சாலை தடுப்பாண்கள், பிரதிபலிப்பான் விளக்குகள், சாலை விபத்து தொடர்பான எச்சரிக்கை பதாகைகள் உள்ளிட்டவைகளை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
இவ்ஆய்வில், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்திகா, நன்னிலம் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நன்னிலம்
காவல் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்