என் மலர்
திருநெல்வேலி
- கவிதாவிற்கு சர்க்கரை நோயால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- வாழ்க்கையில் வெறுப்படைந்த கவிதா தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளம், நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (வயது43). இவரது மனைவி கவிதா (41). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவிற்கு சர்க்கரை நோயால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோய் தீரவில்லை. இதையடுத்து வாழ்க்கையில் வெறுப்படைந்த கவிதா கடந்த 25-ந் தேதி வீட்டில் தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- செல்வம் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
- சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், பலவேசத்திற்கும் முன் விரோதம் இருந்து வருகிறது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கீழக்காடுவெட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வம் (வயது25). இவர் மும்பையில் இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழக்காடுவெட்டி அம்மன் கோவில் கொடை விழாவில் சப்பரம் தூக்குவதில் செல்வத்திற்கும், அதே ஊரை சேர்ந்த பலவேசத்திற்கும் (35) தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் செல்வம் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அங்குள்ள வீட்டு திண்ணையில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பலவேசம், செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த செல்வம் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பலவேசத்தை தேடி வருகின்றனர்.
- ‘லார்வா’ புழுக்களை ஒழிக்க எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
- தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவு படி, துணை கமிஷனர் தானுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைபடி மாநகர பகுதிகளில் உள்ள காலி மனைகள், குடியிருப்புகளை சுற்றி தேங்கிய மழைநீரால் உற்பத்தியாகும் 'லார்வா' புழுக்களை ஒழிக்கும் வகையில், எண்ணை பந்துகளை வீச உத்தரவிடப்பட்டது.
அதன் படி மேலப்பாளையம் உதவி கமிஷனர் (பொறுப்பு ) காளிமுத்து, சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாள நடராஜன் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் இன்று காலை முதல் மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை தடுக்க ஆயில் பந்துகளை வீசினர்.
மேலும் வீடுகள், பள்ளிகள் அருகில் கொசுப்புழுக்கள் உருவாகும் வாய்ப்புள்ள இடங்களான பிளாஸ்டிக் பொருள்கள், டயர்கள், உடைந்த குடங்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருள்கள் உள்ள இடங்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதபோல் டெங்கு தடுப்பு பணியாளர் மூலமாக கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து கொசு புழுக்களை அழிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
- இன்று பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
- சிறப்பு பஸ்கள் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
நெல்லை:
புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
நெல்லை மாவட்டத்திலும் இந்த ஆண்டு புரட்டாசி 2-வது சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களுக்கும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்க ளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஆண்டுதோறும் இயக்கப்படு கிறது.
அதன்படி கடந்த வாரம் புரட்டாசி முதல் சனிக்கிழமை அன்று இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களுக்கு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. அதன்படி 2-வது வாரமான இன்று காலையும் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த பஸ்களில் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி காணப்பட்டது. இந்த ஆன்மிக பயணத்திற்கு கட்டண தொகை யாக ரூ.500 வசூலிக்கப்பட்டது.
இந்த சிறப்பு பஸ்கள் காலை 7 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. பஸ்சில் சென்ற பக்தர்களுக்கு பிரசாத பை மற்றும் கோவில்கள் வரலாறு குறித்த விளக்க கையேடு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இந்த பஸ் நவ திருப்பதி கோவில்களுக்கும் சென்றது. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்னர் மீண்டும் இரவு புதிய பஸ் நிலையம் வந்து சேர்கிறது. இதேபோல் வருகிற 7-ந்தேதி, 14-ந்தேதிகளிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இனிவரும் வாரங்களில் செல்வதற்கு விருப்பமுள்ளவர்கள் புதிய பஸ் நிலையத்தில் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதபோல் இன்று பேட்டையை அடுத்துள்ள திருவேங்கடநாதபுரம் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவில், அருகன்குளம் எட்டெ ழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில், அத்தாளநல்லூர் பெருமாள் கோவில், பாளை ராஜகோபால சுவாமி, தச்சநல்லூர் நவநீத கிருஷ்ணன் கோவில், தள வாய்புரம் பெருமாள் கோவில், வரம்தரும் பெருமாள் கோவில் உள்ளிட்ட ஏராளமான பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், கருட சேவை நடக்கிறது.
- நெல்லை மாவட்ட ஆசிரியர்களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
- பயிற்சியில் சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நெல்லை:
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பமன்றம் மற்றும் டெல்லி தேசிய அறிவியல் தொழில்நுட்ப மன்றம் இணைந்து நெல்லை மாவட்ட ஆசிரியர் களுக்கான 2 நாட்கள் கணினி பயிற்சி முகாம் பாளை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோல்டன் எபநேசர் ஜெபமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சின்னராசு தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சவுந்திரபாண்டியன், முதல்வர் உஷா காட்வின் மற்றும் துணை முதல்வர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாம் குறித்து விளக்கினர். இப்பயிற்சி முகாமை கல்லூரியின் விலங்கியல் துறைத்தலைவர் ஜெயபிரபா ஒருங்கிணைந்து நடத்தினார்.
இப்பயிற்சியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த சுமார் 30 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வேதியியல்துறை உதவி பேராசிரியை ஷகினா நன்றி கூறினார். மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், 2 நாட்கள் பயிற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என தெரிவித்தனர்.
- நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
நெல்லை:
தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைத் துறை செயல் படுகிறது. இந்த துறையில் போதைக்கு அடிமையான நோயாளிகள் உள்நோயாளி களாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வார்டில் உள்ள நோயாளிகளை கவனிக்க தற்காலி கமாக தொகுப்பூதி யத்தில் செவிலியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப் பட்டனர். அதன்படி செவிலியர், மன நல ஆலோ சகர், தரவு உள்ளீட்டாளர், இரவு காவலர், இதர பணியா ளர்கள் என சுமார் 13 பேர் வரை நியமனம் செய்ய ப்பட்டு இருந்தனர். அவர்க ளுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் செயல்பட்டு வந்தது.
நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை பழைய கட்டிடத்தில் போதைக்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 13 பேரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. மேலும் அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 22-ந்தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற செவிலியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனி பணிக்கு வரவேண்டாம். தங்களுக்கு ஊதியம் வழங்க டாஸ்மாக் நிறுவனம் இனி நிதி ஒதுக்காது என தெரிவித்து விட்டதால் இந்த மையத்தை கவனிக்க இனி ஊழியர்களை நியமிக்க முடியாது என்று அவர்க ளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பாதிக்க ப்பட்ட செவிலி யர்கள் கூறுகையில், குடிப் பழக்க த்தால் பலரும் அடிமை யாகி இளம் தலைமுறை யினரும் சீரழிந்து வரும் நிலையில் மக்களிடம் வரவேற்பு பெற்ற இந்த மறுவாழ்வு மையம் நிதி ஒதுக்கப்படா ததால் முடக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் நிறு வனம் மூலம் உரிய நிதியை பெற்று தந்து எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.
மாவட்டத்தில் குறைந்த பட்சம் மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அரசின் முடிவால் எங்களது வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கவனத்தில் எடுத்து எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்,
- மனித சங்கிலி நிகழ்ச்சி அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
- மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நெல்லை:
உலக இருதய தினத்தை முன்னிட்டு நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை சார்பில் இதயம் காப்போம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவப்பிரகாச சத்திய ஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ சிகிச்சையாக ஆம்புலன்ஸ் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ரோட்டரி கவர்னர் முத்தையா, ஐ.டபிள்யூ.டி. முன்னாள் மாவட்ட சேர்மன் அமுதா ராஜேந்திரன், டாக்டர் சொர்ண லதா, டாக்டர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத்தொடர்ந்து அருணா கார்டியாக் கேர் சார்பில் மருத்துவமனை வளாகத்தில் இதயம் காப்போம் என்ற பெயரில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சேரா, குமரேசன், இன்னர் வீல் கிளப் ஆப் திருநெல்வேலி தலைவர் மீனா சுரேஷ், செயலாளர் சுனிதி பாலகிருஷ்ணன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமன் ஜெயபிரகாஷ் மற்றும் பொருநை ரோட்டரி கிளப் தலைவர் கோமதி மாரியப்பன், செயலாளர் பவித்ரா கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித சங்கிலி நிகழ்ச்சியில் எச்.டி.எப்.சி. வங்கி மேலாளர் லெட்சுமணன், வங்கி ஊழியர்கள், அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் இதய நலனுக்கான உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
- ஒரு சில பள்ளி, கல்லூரிகளில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது.
- கவுன்சிலிங் குழுவானது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஒரு சில பள்ளி, கல்லூரி களில் சாதி ரீதியிலான மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற பிரச்சனைகள், பள்ளி பருவத்திலேயே மாணவர்க ளின் மனதில் ஆழமாக பதியும் சாதி குறித்த தவறான எண்ணங்கள், உள்ளிட்ட வற்றை கலையும் வண்ணமாக அரசு துரித நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளி களில் மாணவர்களிடையே அனைவரும் சமம் என்ற உணர்வை தோற்றுவிக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு மாவட்டந்தோறும் ஒரு வேன் வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்ட இந்த வேனில் சென்று ஒவ்வொரு அரசு பள்ளி யிலும் படிக்கும் மாணவர்கள் இடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வழிவகைகள் செய்யப்பட்டி ருந்தது.
இதற்காக அந்த வேனில் ஒரு யோகா ஆசிரியர், ஒரு ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு கவுன்சிலிங் வழங்குவதற்கு ஒரு கவுன்சிலிங் ஆசிரியர் என 3 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலிங் குழுவானது ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அவ்வப்போது மாணவர்களுக்கு சமத்துவம் குறித்த போதனையை வழங்கி வந்தது.
மேலும் தற்கொலை குறித்த எண்ணங்களை கைவிடுவதற்கு மாணவர்க ளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. மிகச்சிறந்த ஆலோசனை மையமாக இந்த திட்டம் விளங்கி வந்தது.
ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. அதற்காக பயன்படுத்தப்பட்ட வேன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு காலமாக முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் பராமரிப்பின்றி காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாங்குநேரியில் சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மாணவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் கடந்த வாரம் டவுனில் டியூசனுக்கு சென்று வந்த ஒரு சமுதாய மாணவன் மீது மற்றொரு சமுதாய மாணவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் தென் மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்படி ப்பட்ட சூழ்நிலையில் காட்சி பொருளாக மாறி உள்ள இந்த வேனை பள்ளிக்கல்வி த்துறை அதிகாரி கள் மீண்டும் பயன்படுத்தி அதற்கென ஒரு தனி குழுவையும் ஆரம்பித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று மாண வர்களிடையே விழிப்பு ணர்வை ஏற்படுத்த நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மரைக்காயர் இன்று அதிகாலை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு நடந்து சென்றுள்ளார்.
- வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் துடிதுடித்து இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள தென்கலம் புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மரைக்காயர்(வயது 45). தொழிலாளி.
இவர் இன்று அதிகாலை கங்கைகொண்டான் சிப்காட் நான்கு வழிச்சாலை அருகே உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக நடந்து சென்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மரைக்காயர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மரைக்காயர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரைக்காயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
- தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 2 மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை விட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்ததால் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் 700 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று பெய்த கனமழையால் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2906 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 70.75 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 73.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 82 அடியாக இருந்த நிலையில், மேலும் 5 அடி உயர்ந்து இன்று 87.20 அடியாக நீர் இருப்பு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 954.75 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாபநாசம் அணை பகுதியில் அதிகபட்சமாக 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 9.6 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணையில் 45.50 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணைக்கு 63 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் கொடுமுடியாறு அணை பகுதியில் நேற்று பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்தது. 52.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 19 அடியாக உள்ளது. அணை பகுதியில் 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் 22 அடி கொள்ளளவு கொண்ட நம்பியாறு அணையில் 12.50 அடி நீர் இருப்பு உள்ளது.
மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டுகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி ஊத்து எஸ்டேட்டில் 48 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 41 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 30 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 25 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. புறநகர் பகுதிகளை பொறுத்தவரை களக்காடு, ராதாபுரம், சேரன்மகாதேவி, அம்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ராதாபுரத்தில் 9.60 மில்லிமீட்டரும், அம்பையில் 7 மில்லிமீட்டரும், களக்காட்டில் 2.80 மில்லிமீட்டரும், சேரன்மகாதேவியில் 2.20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அங்கு வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் இதமான சூழல் நிலவி வருகிறது. தென்காசியில் அதிகபட்சமாக 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
அணைகளை பொறுத்தவரை ராமநதி அணை பகுதியில் 8.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. குண்டாறு அணை பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. அணை நிரம்பி 2 வாரம் ஆகும் நிலையில், அணைக்கு வரும் 18 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 98 அடியாக இருந்த நிலையில், தொடர்மழையால் நீர் இருப்பு மேலும் 1 அடி உயர்ந்து 99 அடியானது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. குறிப்பாக குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் அவ்வப்போது தண்ணீர் அதிகரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பின்னர் தண்ணீர் ஆர்ப்பரிப்பு குறைந்தவுடன் மீண்டும் அவர்களுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
தொடர் விடுமுறையையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. விட்டு விட்டு சாரல் மழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால், அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.56 கோடிக்கு கடன் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், பெண்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என ஏராளமானவர்கள் பயன் பெறுகின்றனர். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.
தமிழ்நாட்டில் ஏழை-எளிய மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ரூ.3½ லட்சம் கோடி பட்ஜெட் போடும் நம் மாநிலத்தில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்குவது என்பது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்சியை எட்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 6,500 பயனாளிகளுக்கு ரூ.156 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
உலக அளவில் இதய நோய்களால் பாதிக்கப்படு வதையும், மாரடைப்பால் மரணமடைவதையும் தடுக்கும் வகையில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29-ந் தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு பேரணி
அதன்படி இந்த ஆண்டு இன்று இருதய தினத்தை யொட்டி நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு மருத்துவமனை வரை பேரணியாக விழிப்புணர்வு கோஷ மிட்டு பதாகைகள் ஏந்திய படி நடந்து சென்றனர். பின்னர் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் மாணவ-மாணவிகள் கைகளால் இருதய வடிவில் நின்று விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
இந்த பேரணியில் மருத்துவமனை கண்கா ணிப் பாளர் பால சுப்பிர மணியம், உதவி முதல்வர் சுரேஷ் துரை, இதயவியல் மருத்துவத்துறை தலைவர் ரவிச்சந்திரன் எட்வின், செவிலியர் ஆசிரியர் செல்வம் மற்றும் மருத்துவ கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு இருதயம் வடிவில் நின்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.






