என் மலர்tooltip icon

    சேலம்

    • கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    சேலம்:

    நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), கடந்த மே மாதம் முதல் தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.

    கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ. 4.30-ல் இருந்து ரூ.4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 490, பர்வாலா 472, பெங்களூரு 450, டெல்லி 490, ஐதராபாத் 450, மும்பை 505, மைசூரு 450, விஜயவாடா 475, ஹொஸ்பேட் 410, கொல்கத்தா 550.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.120 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 83 ஆக தென்னிந்திய கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
    • தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடா கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது வழக்கம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் தேவகவுடா போட்டியிடவில்லை. இதையடுத்து அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெற்றி பெற்றதை ரத்து செய்யக்கோரி மஞ்சு எம்.எல்.ஏ., மற்றும் தேவராஜ்கவுடா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். மேலும் அதில் தேர்தலின்போது பிரமாண பத்திரத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ரூ. 23 கோடிக்கும் அதிகமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறியிருந்தனர்.

    இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அதில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான புகார் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்றும், எனவே அவரது எம்.பி. பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா நிருபர்களிடம் கூறும்போது, கோர்ட்டு உத்தரவை மதிக்கிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப்படி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வேன் என்றார். தேவகவுடாவின் பேரன் எம்.பி. பதவி ரத்து செய்யப்பட்டு இருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து கடந்த 3 மாதத்துக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் அணையில் மூழ்கி இருந்த ஜல கண்டேஸ்வரர் கோவில் நந்திசிலை, கிறிஸ்துவ ஆலய கோபுரம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகிறது.

    மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. அணையின் பல இடங்களில் தண்ணீர் இல்லாததால் நிலம் பாளம், பாளமாக வெடித்து காணப்படுகிறது.

    தண்ணீர் குறைந்து மேட்டூர் அணை குட்டை போல் மாறியது. இதனால் நீர்த்தேக்க பகுதிகள் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியது.

    மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி முழுமைபெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து கடந்த 3 நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 16.86 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது. இதில் இன்னும் 10.86 டி.எம்.சி.தண்ணீரே பாசனத்துக்கு திறக்கப்படும்.

    கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 99.86 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2870 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7078 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 73.78 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1979 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து மொத்தம் 9 ஆயிரத்து 78 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது.
    • இதையொட்டி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    சேலம்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தயாராகி வருகிறார்கள்.

    விநாயகர் சதுர்த்தி விழா

    விநாயகர் சதுர்த்தி விழா வில், விநாயகருக்கு கொழுக் கட்டை, அவல், சுண்டல், சர்க்கரை ெபாங்கல், கரும்பு, பழங்களை வைத்து பக்தர்கள் படையலிடு வார்கள். தொடர்ந்து 2 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்து விநாயகர் சதுர்த்திவிழா கோலா கலமாக கொண்டாடப்படும். 3-வது நாளில் விநாயகர் சிலைகள் ஊர்வ லமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்படும். இந்த நாட்க ளில் விநாயகர் ஊர்வலம் சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக அளவில் நடைபெறும். இதையொட்டி கூடுதல் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடு வார்கள்.

    சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், சேலம் நெய்க்காரப்பட்டி உள்பட பல பகுதிகளில் விநா யகர் சிலைகள் அதிக அளவில் தயார் செய்யப்படு கிறது. இந்த சிலைகள் சேலம் 2-வது அக்ரஹாரம், அஸ்தம்பட்டி, அடிவாரம், குரங்குச்சாவடி, கடை வீதி, தேர்நிலையம், குைக, கொண்டலாம்பட்டி, ஓமலூர், வாழப்பாடி, ஆத்தூர், மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளி லும் சாலையோரம் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள் ளன. தற்போது விநாயகர் சிலைகள் விற்பனை தொடங்கி உள்ளது. கடைசி 2 நாட்களில் விநாயகர் சிலைகள் விற்பனை சூடுபிடிக்கும் என்பதால் அதிக அளவில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    10 ஆயிரம் வரை

    அரை அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை உள்ள இந்த சிலைகள் 100 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதில் லட்சுமி நாராயண விநாயகர், லிங்கம் ராஜ அலங்கா ரம், நாகலிங்கம், கஜமுகம், ருத்ரமூர்த்தி, சிவ நர்த்தனம், மான், அன்னம், மயில், சிங்க வாகனம், அனுமன், நரசிம்மர், சித்தி, புத்தி ராஜ கணபதி உள்பட பல வடி வங்களில் சிலைகள் விற்ப னைக்கு வைக்கப்பட் டுள்ளன.

    • மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.
    • போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் நூலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சேலம் மத்திய சிறை சார்பில் அஸ்தம்பட்டி சிறை முனியப்பன் கோவில் வளாகத்தில் புதிதாக நூலகம் அமைக்கப்பட்டது.

    இந்த நூலகத்தை இன்று சிறைத்துறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் திறந்து வைத்தார்.

    இங்கு சிறைத்துறை காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் போலீஸ் போட்டி தேர்வுகள் மற்றும் பொது அறிவு புத்தகங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.

    குறிப்பாக சிறைத்துறை காவலர்கள் அடுத்து போலீஸ் தேர்வுகள் எழுதுவதற்கான புத்தகங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களை சிறைத்துறை காவலர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வினோத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது.
    • அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டியை சேர்ந்தவர் கலா (வயது 32). இவர் தனது பல்லை சுத்தம் செய்வதற்காக ஊக்கை பயன்படுத்தியுள்ளார். அப்போது ஊக்கை தவறுதலாக விழுங்கி விட்டார். உணவு குழாயில் ஊக்கு சிக்கி எச்சில் கூட விழுங்க முடி யாமல், தொண்டை மற்றும் நெஞ்சு பகுதியில் அதிக வலி ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது பற்றி உறவினர்களிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து கலா சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் நெஞ்சு பகுதி உணவு குழாயின் மேல் பகு தியில் அந்த ஊக்கு சிக்கி யிருப்பது கண்டறியப்பட்டது.

    டாக்டர்கள் உடனடியாக அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்து ஊக்கை அகற்றுவதற்கு ஏற்பாடு செய்தனர். இதையடுத்து அறுவை சிகிச்சையில்லாம லேயே எண்டோஸ்கோபி கருவியை உணவுக்குழாயில் செலுத்தி அங்கு சிக்கி இருந்த ஊக்கை நோயாளிக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அகற்றப்பட்டது. இதனால் கலா மகிழ்ச்சி அடைந்தார்.

    இந்த சிக்கலான எண் டோஸ்கோபி சிகிச்சையை மருத்துவமனையில் நோயா ளியை அனுமதித்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே குடல் அறுவை சிகிச்சை துறைத்தலை வர் டாக்டர். சிவசங்கர், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். சிவசுப்ர மணியம் ஆகியோர் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக செய்தனர். இந்த குழுவினரை மருத்துவமனை டீன் டாக்டர். மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர். தனபால் ஆகியோர் பாராட்டினர்.

    மேலும் அவரும், அவரது குடும்பத்தி னரும் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.
    • வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சின்ன வீராணம் பகுதியை சேர்ந்த வர் சின்னப்பொண்ணு(50), இவரது மகன் லோகேஷ் (18) ஆகியோர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    பின்னர் சின்ன பொண்ணு மறைத்து வைத்து கொண்டு வந்த மண் எண்ணை கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

    இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து சின்ன பொண்ணு கூறுகையில், எனது கணவர் ராஜேந்திரன் பெயரில் 2 3/4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 7 ஆண்டு களுக்கு முன்பு எனது கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட நிலையில் அந்த 2 3/4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம்.

    பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் ஓருவர் 2 3/4 ஏக்கர் நிலத்தில் 1 3/4 சென்ட் நிலத்தை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தார்.எங்கு சென்று புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும் மிரட்டுகிறார்.

    இது குறித்து வீராணம் போலீசார் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை யினர் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் வேறு வழியின்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.

    எனவே மாவட்ட நிர்வா கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களிடமிருந்து ஏமாற்றி ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரி வித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
    • மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24) இவரது நண்பர் பாஸ்கர் (24) இருவரும் நேற்றிரவு சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது காரிப்பட்டி கருமாபுரம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தியபோது லாரி மோதி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலே அஜித்குமார் இறந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய பாஸ்கர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராசிபுரம் மங்களபுரத்தை சேர்ந்த சுந்தரம் (52) என்பவரை கைது செய்தனர்.

    • கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர்.
    • தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலம்:

    சேலம் லாரி மார்க்கெட் அருகே உள்ள மெயின் ரோட்டில் ஏராளமான கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.

    சேலம் மாநகரில் கனமழை பெய்யும் போது அரிசிபாளையம் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த பகுதியில் அதிகளவில் தேங்குகிறது.

    இதனால் அங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் அந்த கடைகளில் ஓட்டல் மற்றும் டீ கடைகள் வைத்து இருந்தவர்கள் கடையை காலி செய்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் கடை உரிமையாளர்கள் பரிதவிப்பில் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் பங்கஜ் என்பவர் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் அரிசிபாளையம் பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் எங்களது கடைக்குள் புகுந்து விடுகிறது.

    இதனால் கடையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வீணாகி சேதமாகிறது. தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த மழையிலும் கடைக்குள் சாக்கடை நீர் புகுந்து கழிவுகள் தேங்கியுள்ளது. இதனால் கடையில் துர்நாற்றம் வீசுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதே நிலை தொடர்ந்தால் விரைவில் மாநகராட்சி அலுவல கம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு இந்த பகுதியில் தண்ணீர் தேங்கா தவாறு சாக்கடை கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் சாலையோரம் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் மாரமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சத்யராஜூக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் அவர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து சென்ற ஓமலூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். பின்னர் இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    • குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டம் முழுவதும் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது.

    சேலம் மாநகரில் நேற்று மதியம் 3 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. மேலும் நள்ளிரவில் தொடங்கிய மழை இன்று அதிகாலை வரையும் சாரல் மழையாக நீடித்தது.

    நேற்று மதியம் சேலம் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரும்பாலான பகுதிகளில் 2-வது நாளாக சாக்கடை நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் ஆறாக ஓடியது.

    வழக்கம் போல கிச்சிப்பாளையம் நாராயணன் நகர், கருவாட்டுபாலம், பச்சப்பட்டி, தாதாகாப்பட்டி, நெத்திமேடு, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர் பகுதி, அத்வைத ஆசிரம ரோடு, பெரமனூர் நாராயணபிள்ளை தெரு, 4 ரோடு, 5 ரோடு, உள்பட பல பகுதிகளில் சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஆறாக ஓடியது. இதனால் மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு சென்று வீட்டிற்கு திரும்பியவர்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீருடன் கலந்து ஓடிய சாக்கடை நீர் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பாத்திரங்கள் மூலம் எடுத்து அப்புறப்படுத்தினர். மேலும் வீடுகளுக்குள் சாக்கடை நீர் கலந்த தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து சேலம் மாநகரில் பல பகுதிகளில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக 5 ரோட்டில் இருந்து அண்ணா பூங்கா வரையும், 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலையில் அஸ்தம்பட்டி வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றன. இந்த சாலைகளை கடக்க மணிக்கணக்கில் ஆனதால் வாகன ஓட்டிகள் தவியாய் தவித்தனர்.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளில் தம்மம்பட்டி, ஆனைமடுவு, சங்ககிரி, கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 1 மணி நேரம் கனமழை பெய்தது. மழையை தொடர்ந்து அரை மணிநேரம் பனிமூட்டமாக காட்சி அளித்தது. இன்று காலை வெயில் அடித்த படி இருந்தாலும் கடும் குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் வராததால் அஙகுள்ள முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக தம்மம்பட்டியில் 92 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 85.6, ஆனைமடுவு 49, சங்ககிரி 45.20, கெங்கவல்லி 20, ஏற்காடு 17.8, வீரகனூர் 9, ஓமலூர் 7, மேட்டூர் 6.80, எடப்பாடி 5.23, தலைவாசல் 5, கரியகோவில் 3, காடையாம்பட்டி 2.5, ஆத்தூர் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 351.13 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×