என் மலர்
சேலம்
- மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
- ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது.
வாழப்பாடி:
வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி சிலை கும்பா பிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை யொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியை சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள், பொது மக்கள் ஆயிரம் பேருக்கு அன்ன தானம் வழங்கப் பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வா கிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
- சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
- மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
மேட்டூர்:
ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடையில் பெருமாள் கோவில் உள்ளது.
உண்டியல் உடைப்பு
சம்பவத்தன்று கோவில் அச்சகர் குணசேகரன் என்பவர் பூஜைகள் செய்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மாலை கோவிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கபட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி யடைந்த குணசேகரன் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமை யிலான போலீசார் கோவி லில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.
ரகசிய தகவல்
இந்த நிலையில் உண்டி யல் பணத்தை திருடிய சுரேஷ் என்கிற ஆறுசாமி (36) என்பவர் வனவாசி பஸ் நிலையத்தில் இருப்ப தாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் வனவாசி பஸ் நிலையம் விரைந்து சென்றனர்.
கைது
அங்கு சேலம் செல்லும் தனியார் பஸ்சில் இருந்த சூரப்பள்ளி கிராமம் நறியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் சுரேஷ் என்கிற ஆறுசாமியை கைது செய்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவில் உண்டியலை உடைத்து ரூ.1500 திருடியதை ஒப்பு கொண்டார். மேலும் இந்த வாலிபர் பல்வேறு இடங்க ளில் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
- வாழப்பாடி அடுத்துள்ள சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள சிங்கபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறஇருப்பதால் நாளை (13-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கபுரம். வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம் பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்ம நாயக்கன் பட்டி, மேற்கு ராஜபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், சந்திரபிள்ளை வலசு, நடுப்பட்டி, மத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று வாழப்பாடி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்து உள்ளார்.
- காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.
சேலம்:
கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
இந்நிலையில் கர்நாடக மாநில அரசு நேற்று கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 2,787 கன அடி உபரி நீர் திறந்துவிட்டது.
தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதே அளவு நீர் திறந்து விட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,502 கன அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.
அதேபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,223 கன அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் இருந்து 75.92 அடியாக சரிந்துள்ளது.
இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,550 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,266 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 670 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.90 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 45.01 அடியானது.
- சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
- தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை வானத்தில் திடீரென கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து 4 மணியளவில் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது.
சேலம் அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, ஜங்சன் உள்பட அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக சேலம் கிச்சிப்பாளையம் நாராயணநகர், பச்சப்பட்டி அம்மாப்பேட்டை ஜெயாதியேட்டர், நெத்திமேடு, தாதகாப்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் உள்பட பல பகுதிகளிலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்த படியே சென்றனர்.
மாலை 4 மணியளவில் பெய்த மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று விட்டு வீடுகளுக்கு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்த படியே வீடுகளுக்கு திரும்பினர். சில மாணவர்களை பெற்றோர் குடை பிடித்த படி வீடுகளுக்கு அழைத்து சென்றனர்.
மழையை தொடர்ந்து ஆங்காங்கே ஒதுங்கி நின்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மழை நின்றதும் வாகனங்களில் புறப்பட்டனர். இதனால் சேலம் மாநகரில் 5 ரோடு உள்பட சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதே போல சேலம் சீலநாயக்கன்பட்டியில் இருந்து ஆத்தூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. 2 கி.மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்த படியே சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
சேலம் புறநகர் பகுதிகளான எடப்பாடி, சித்தூர், வெள்ளரி வெள்ளி, பக்கநாடு, ஆடையூர் பகுதிகளில் கன மழை கொட்டியது. இந்த பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலை பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 13 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 11.3, தம்மம்பட்டி 10, ஏற்காடு 1.6, ஓமலூர் 1.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வாகனம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், மங்களபுரம் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ராசிபுரத்தில் 19 மி.மீ. மழை பெய்துள்ளது. மங்களபுரத்தில் 14.4 , சேந்தமங்கலம் 12, கொல்லிமலை 8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
- இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பூலாம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவரது மனைவி செல்வி (38) இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார்.
கட்டிடத் தொழிலாளியான செல்வராஜ் தற்போது திருப்பூர் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி செல்வி தனது மகளுடன் எடப்பாடி- பூலாம்பட்டி ரோடு பகுதியில் வசித்து வருகிறார். செல்வியும் கட்டிட கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி செல்வி தனது மகளுடன் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து எடப்பாடி போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன செல்வி மற்றும் அவரது 17 வயது மகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.
சேலம்:
தமிழகம் முழுவதும் ரேசன் கார்டுகள் மூலம் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது .
சிறப்பு முகாம்கள்
அதன்படி சேலம் மாவட்டத்தில் 2 கட்டங்களாக வருவாய் துறை மற்றும் கூட்டுறவு துறை மூலம் 1000-த்திற்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 60 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தகுதியுள்ள பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். 15-ந் தேதி காலை இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான ஆணைகளை வழங்குகிறார்.
எடப்பாடியில் தொடக்கம்
இதைதொடர்ந்து சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட தொடக்க விழா 15-ந் தேதி எடப்பாடியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்குகிறார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கு வதற்கான ஆைணைகளை வழங்குகிறார்.
மேலும் ஏ.டி.எம்.மில் இந்த பணத்தை எடுக்க குடும்ப தலைவிகளுக்கு தனியாக ஒரு ஏ.டி.எம்.கார்டுகளும் வழங்கப்படுகிறது. எடப்பாடியி ல்நடைபெறும் விழாவில் 5 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை ஆணை மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்படுகிறது.
இதை தொடர்ந்து தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை அவரவர் கணக்கில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.
- ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி. இவர் ஓய்வுபெற்ற தாசில்தார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி அற்புதம்மாள் (வயது 88)
இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் தமிழரசன் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள் செல்வி சேலத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அற்புதம்மாள் கணவர் இறந்த பிறகு நரசிங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு 9 மணி அளவில் அற்புதம்மாள் அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் பேசிவிட்டு வீட்டில் தூங்க சென்றார்.
இன்று அதிகாலையில் வீட்டின் கதவு திறந்திருந்தது. ஆனால் அற்புதம்மாள் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. காலையில் பால்காரர் வந்து வீட்டில் பார்த்தபோது அற்புதம்மாள் கொலையுண்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பால்காரர் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.
உடனடியாக இது தொடர்பாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அற்புதம்மாள் உடலை பார்வையிட்டனர். அற்புதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகை காணவில்லை. மர்மநபர்கள் அவரை கொன்று நகைகயை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
சேலம் மாவட்ட துப்பறியும் பிரிவில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் மோப்பம் பிடிக்க ஏவி விடப்பட்டது. அது வீட்டை சுற்றிலும் ஓடியது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகைகள், கால் தடங்கள் உள்ளிட்டவைகள் பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் போலீஸ் உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து அற்புதம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அக்கம், பக்கத்தினரிடம் கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஓய்வுபெற்ற தாசில்தாரின் மனைவியை கொன்று மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
வசதியான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவம் தற்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ந்தேதி சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஏழுபரணைகாடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி ராமசாமி மனைவி அத்தாயம்மாள் ( 65) என்பவரை கல்லால் தாக்கியும், கழுத்தை அறுத்தும் மர்மநபர்கள் கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடும், வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்து சென்றனர்.
ராமசாமிக்கு அப்பகுதியில் பல ஏக்கர் சொத்து உள்ளது. வசதியான கணவன்-மனைவி இருவரும் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய தங்களின் தோட்டத்தில் வீடு கட்டி தனியே வசித்து வருவதை நோட்டமிட்டு அத்தாயம்மாளை தீர்த்துக்கட்டியுள்ளனர். இந்த கொலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரையும் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதேபோல் கடந்த 8-ந்தேதி ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த முருங்கதொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டன்குட்டை அருகே கரியங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி (85). இவரது மனைவி சாமியாத்தாள் (80). சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக இருந்ததை நோட்டமிட்டு இந்த தம்பதியை மர்மநபர்கள் கொலை செய்தனர்.
அடுத்தடுத்து நடைபெற்ற இந்த தொடர் கொலைகளை செய்தது ஒரே கும்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் வயதான பெண்களை நோட்டமிட்டு இந்த கொலைகள் நடைபெறுவதால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.
- காமாட்சி வயது (70).இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்ட நிலையில் குழந்தைகளும் இல்லை. இதனால் காமாட்சி தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார்.
- அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் திடீரென காமாட்சி வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கருக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி வயது (70).இவரது கணவர் முத்துசாமி இறந்து விட்ட நிலையில் குழந்தைகளும் இல்லை. இதனால் காமாட்சி தனியாக அந்த பகுதியில் வசித்து வந்தார்.
வீட்டிற்குள் புகுந்த தொழிலாளி
இந்தநிலையில் நேற்று கதவை திறந்து போட்டு விட்டு வீட்டிற்கு முன்பகுதியில் இருந்து காமாட்சி பாத்திரங்களை கழுவி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் திடீரென காமாட்சி வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி கதவை தட்டிய படி கத்தினார். இதனால் அந்த பகுதியினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். ஆனால் நீண்ட நேராமாகியும் அவர் கதவை திறக்க வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கூரையை பிரித்து உள்ளே எட்டிப்பார்த்தனர். அப்போது அந்த நபர் அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கும், கிராம நிர்வாக அதிகாரி மோகனுக்கும் தகவல் தெரிவித்தனர்.
தற்கொலை
உடனே அங்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பிரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பின்னர் அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளது. இதனால் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரிய விலலை. மேலும் அவர் ஏன் அடுத்தவர் வீட்டிற்குள் புகுந்து தற்கொலை செய்தார் என்ற விவரமும் தெரிய வில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏற்காட்டிற்கு வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மாலை பக்கோடா பாயின்ட் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது சுற்றுலா வேன் மோதியது.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு வார விடுமுறையை முன்னிட்டு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா வேன்
இந்த நிலையில் நேற்று காலை சென்னையை சேர்ந்த 10 பேர் சுற்றுலா வேனில் ஏற்காட்டிற்கு சுற்றி பார்க்க வந்தனர். வேனை சேலம் கோரிமேடு பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவர் (45) ஓட்டி வந்துள்ளார்.
இவர்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களை சுற்றி பார்த்துவிட்டு மாலை பக்கோடா பாயின்ட் சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர்.
ஆட்டோ மீது மோதல்
அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது சுற்றுலா வேன் மோதியது.
இதில் ஆட்டோ டிரைவரான ஏற்காடு லாங்கில் பேட்டையைச் சேர்ந்த ரவி மகன் நித்திஷ் (18) என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துகளை தடுக்க கோரிக்கை
பிரதான சாலையான பக்கோடா பாயிண்ட் சாலையில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்க வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலை இருப்புறங்களிலும் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க தங்கும் விடுதிகளில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த அப்பகுதியினர் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- ஆத்தூர் காட்டு கொட்டாய் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 65 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
- இதனை பார்த்த அந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சேலம்:
சேலம்-சென்னை மெயின்ரோட்டில் ஆத்தூர் காட்டு கொட்டாய் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 65 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார், இதனை பார்த்த அந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து விச ாரணை நடத்தி வருகிறார்கள்.
- சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
- இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு சீனிவாசன் அவென்யூ பகுதிையை சேர்ந்தவர் சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
சரமாரி வெட்டு
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த வாகனங்களை சங்கர் குரு, பிரகாஷ் ஆகிய 2 பேரும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), வெங்கடேஷ், சுரேஷ் உள்பட 5 பேர் 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் 2 பேருக்கும் தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இதில் ஸ்ரீகாந்த் நேற்றிரவு போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைக்கிறார்கள். மேலும் தலைமறைவான 4 பேரையும் தேடி வருகிறார்கள்.






