என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிச்சிப்பாளையத்தில்2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
- சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
- இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர்.
சேலம்:
சேலம் கோரிமேடு சீனிவாசன் அவென்யூ பகுதிையை சேர்ந்தவர் சங்கர் குரு (22), இவரது நண்பர் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27).
சரமாரி வெட்டு
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் சன்னியாசி குண்டு பகுதியில் இருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி இருந்த வாகனங்களை சங்கர் குரு, பிரகாஷ் ஆகிய 2 பேரும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (22), வெங்கடேஷ், சுரேஷ் உள்பட 5 பேர் 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் 2 பேருக்கும் தலை உள்பட பல இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கிச்சிப்பாளையம் போலீசார் 5 பேரையும் தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இதில் ஸ்ரீகாந்த் நேற்றிரவு போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி இன்று சிறையில் அடைக்கிறார்கள். மேலும் தலைமறைவான 4 பேரையும் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்