search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.01 அடியாக சரிந்தது
    X

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 45.01 அடியாக சரிந்தது

    • காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    சேலம்:

    கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு மற்றும் இரு மாநில எல்லை பகுதியில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    இந்நிலையில் கர்நாடக மாநில அரசு நேற்று கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளில் இருந்து மொத்தம் 2,787 கன அடி உபரி நீர் திறந்துவிட்டது.

    தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதே அளவு நீர் திறந்து விட்டுள்ளது. அதாவது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1,678 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த அணைக்கு நீர்வரத்து 3,502 கன அடியாக உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியில் இருந்து நீர்மட்டம் 97.96 அடியாக சரிந்துள்ளது.

    அதேபோல் கபினி அணையில் இருந்து 1,100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 4,223 கன அடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவு 84 அடியில் இருந்து 75.92 அடியாக சரிந்துள்ளது.

    இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் முழுவதும் முறையாக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதிக்கு வந்து சேருகிறதா? என மத்திய நீர்வளத்துதுறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 6,550 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 2,266 கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 670 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 46.54 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 45.90 அடியாக சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் மேலும் குறைந்து 45.01 அடியானது.

    Next Story
    ×