என் மலர்tooltip icon

    சேலம்

    • மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பவளத்தனூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 17 வயது மகள் பிளஸ்-1 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜல்ஜீவன் திட்டத்தில் பைப்லைன் அமைக்கும் பணிக்காக ஓமலூர் அருகே குதிரை குத்திபள்ளம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மோகன், பெருமாள் ஆகியோர் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர்.

    அப்போது அவர்கள் அருகில் இருந்த மளிகை கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கியபோது சிறுமியிடம் பேச்சு கொடுத்து பழகி வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பந்தபட்ட சிறுமி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து மாயமானார்.

    இதுகுறிதது சிறுமியின் பெற்றோர் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களது மகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக பெருமாள் (25) என்பவர் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
    • தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் 15 நாட்களுக்கு திறந்து விட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த 23-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று 24-ந் தேதி வினாடிக்கு 6 ஆயிரத்து 338 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று காலை வினாடிக்கு 6 ஆயிரத்து 605 கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 4105 கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5993 கனஅடியாகவும், கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2126 கன அடியாகவும் உள்ளது.

    இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாகவும், கர்நாடகாவில் திறக்கப்பட்ட தண்ணீரும் வரத்தொடங்கியதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.

      சேலம்:

      தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84-ன் படி 2023-2024-ம் ஆண்டின் 2-ம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

      அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

      எனவே சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5 ஆயிரம் வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.

      • கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
      • புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது.

      சேலம்:

      சேலம் வ.உ.சி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடியில் இருந்து கடன் மீன்களும், மேட்டூர், ஒகேனக்கல்லில் இருந்து ஆற்று மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

      இங்கு தற்போது மீன் வரத்து அதிகரித்துள்ள நிலையில், புரட்டாசி மாதம் என்பதால் விற்பனை சரிந்துள்ளது. அதேவேளையில், கடல் மீன்களின் விலை ரூ.80முதல் ரூ.100 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் கடல் மீன்கள் விற்கப்பட்ட விலையில் இருந்து ரூ.80 வரை சரிந்திருக்கிறது.

      இதன்படி இன்றைய தினம் சங்கரா ஒரு கிலோ ரூ.300ம், கண்ணாடி பாறை ரூ.380, வளை மீன் ரூ.380, வஞ்சரம் ரூ.600, அயிலை ரூ.200, விற்பனையானது. இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், கடல் மீன்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், புரட்டாசி மாதம் என்பதால், விற்பனை மந்தமாக உள்ளது.

      இதனால், விலை கிலோவுக்கு ரூ.80 வரை குறைந்துள்ளது அணை மீன்கள் விலை அப்படியே உள்ளது ஆனால் வரத்து குறைந்துள்ளது என்றனர்.

      • உடனடியாக இதுகுறித்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.
      • மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

      சேலம்:

      சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது.

      நேற்று காலை 11 மணியளவில் இந்த வங்கியின் பின்பக்க சுவரை உடைத்து மர்ம நபர்கள் சிலர் துளையிட்டு கொண்டிருந்தனர்.

      இதனை அந்த வழியாக வந்த வங்கியின் மேலாளர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறத்து கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

      தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருப்பூர் போலீசார் வங்கியின் சுவரை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

      இதில் மர்ம நபர்கள் சுவரில் துளையிட முயன்ற பகுதி நேரடியாக வங்கியின் லாக்கர் அறைக்கு செல்கிறது.

      எனவே மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் சுவரை துளையிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம்நபர்களை தேடி வருகின்றனர்.

      • ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
      • கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

      சேலம்:

      சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.

      இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.

      அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

      • அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
      • அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

      சேலம்:

      மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

      மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 37.92 அடியாக இருந்த நிலையில் இன்று 37.57 அடியாக குறைந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 639 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

      மேட்டூர் அணை பகுதியில் நேற்று 32.40 மி.மீட்டர் மழை பெய்தது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நாளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் மழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

      • கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
      • கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

      சேலம்:

      மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த நிலையில் டெல்டா மாவட்டத்தில் உள்ள குறுவை பயிர்களை காப்பாற்ற உடனடியாக வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி தமிழக அரசு சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.

      அதன்படி காவிரி ஒழுங்காற்று குழு, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் கர்நாடகா தண்ணீர் திறந்து விட மறுத்து விட்டது.

      இதைதொடர்ந்து நடந்த காவிரி மேலாண்மை அவசர கூட்டத்திலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கர்நாடகா தண்ணீர் திறக்காமல் இருந்து வந்தது.

      கடந்த 21-ந்தேதி இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.

      இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று முதல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து 5473 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

      கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கனஅடியும், கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 3838 கனஅடியும் என மொத்தம் 6 ஆயிரத்து 338 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3061 கனஅடியாகவும், கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6156 கனஅடியாகவும் உள்ளது.

      • கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
      • முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      காடையாம்பட்டி:

      சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ஜோடுகுளி பஸ் நிறுத்தம் அருகே புளி சாத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் இன்று காலை 11 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணை மர்மநபர்கள் யாரோ அடித்து கொன்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

      இதில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தீப்பிடித்து எரிந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு ரெயில்வே ஊழியர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீவட்டிப்பட்டி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

      பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பெண்ணின் உடலில் எரிந்து கொண்டு இருந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

      மேலும் பாதி எரிந்த நிலையில் இளம்பெண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பெண்ணை வேறு எங்காவது இருந்து கடத்தி வந்து கொலை செய்து பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். முதலில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தால் தான் கொலையாளிகள் பற்றி தெரியவரும் என்பதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

      இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      • புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பெரும்பாலோனார் கறி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.
      • கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114

      சேலம்

      நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வழக்கமாக புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் பெரும்பாலோனார் கறி சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். இதனால் கறிக்கோழி விலை வழக்கமாக குறையும். அதன்படி தற்போது கறிக்கோழி விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை உயிருடன் 114 ஆக இருந்தது. பின்னர் அதன் விலை படிப்படியாக குறைந்து தற்போது 106 ரூபாயாக உள்ளது. இதனால் ஒரே வாரத்தில் 8 ரூபாய் குறைந்துள்ளது.

      சேலம் மாவட்டத்தில்சி ல்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ உரித்த கோழி 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இனி வரும்நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது. முட்டை கோழிவிலை கடந்த சில நாட்களாக 92 ரூபாயாக நீடிக்கிறது. முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்த 19-ந் தேதி முதல் 490 காசுகளாக நீடிப்பது குறிப்பிடதக்கது.

      • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
      • புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

      சேலம்:

      சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

      இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.

      இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.

      இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.

      கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.

      அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

      • சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
      • தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிப்பு

      சேலம்

      விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் ச ார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

      1860 சிலைகள்

      சேலம் புறநகர் மாவட்டத்தில் 1000 சிலைகள் மாநகரில் 860 சிலைகளும் கடந்த 20-ந் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலை களில் கரைக்கப்பட்டது.இதில் சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மட்டும் 23-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு தொடர்ந்து சிறப்பு பூைஜகள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது.இந்தநிலையில் தம்மம்பட்டியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 36 விநாயகர் சிலைகளும் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை உடையார் பாளையம் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஜங்கமசமுத்திரம் ஏரியில் விஜர்சனம் செய்யப்படுகிறது.

      450 போலீசார்

      இதில் இந்து முன்னணி மாநில செயலாளர் சண்முகம் உள்பட அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்கிறார்கள்.இதையொட்டி சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அருண்கபிலன் ஆகியோர் தலைமையில் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

      ×