search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meat confiscation"

    • தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.
    • இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உள்ளிட்ட உணவு சாப்பிட்ட சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். இதில் 14 வயது பள்ளி மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள 15 உணவகங்களில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி திடீர் சோதனை மேற்கொண்டார். இதில் 5 உணவகங்களில் இருந்து காலாவதியான 16 கிலோ கோழி இறைச்சி, உணவு பொருட்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. 5 உணவக உரிமையாளர்களுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

    • 100 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுபோன்ற அதிரடி சோதனை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்தவகையில், தேவ கோட்டை நகரில் உணவு பாதுகாப்பு அதிகாரி வேல் முருகன் தலைமையில் உத வியாளர் மாணிக்கம் மற்றும் நகராட்சி பணியாளர் கள் நகரில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைக ளில் திடீர் சோதனை நடத்தி னார்கள்.

    இதில் கெட்டுப்போன 100 கிலோ கோழி இறைச்சி, பலமுறை பயன்படுத்தப் பட்ட 30 லிட்டர் சமையல் எண்ணெய் அதிகளவு ரசா யன பொடி கலந்த உணவு கள் பறிமுதல் செய்தனர் மேலும் இரண்டு கடைக ளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதித்தனர். சிறிய பெட்டிக்கடை முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், உணவகங்கள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட சுமார் 50 கிலோவுக்கு மேற் பட்ட பாலித்தீன் பைகளை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோன்ற அதிரடி சோதனை தொட ரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்
    • ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நக ராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று நகரப்பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 13 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில் 3 கடைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக் காமலும், ஒரு கடை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த 4 கடைகளுக்கும் உணவு பாது காப்பு சட்டத்தின்படி உடன டியாக நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    மேலும் ஒரு கடையில் 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரு கடையில் தடை செய்யப்பட் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
    • புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் வள்ளிபுரத்தில் தாபா உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது .இங்கு ஆடு, மாடு, கோழி ,மீன் உள்ளிட்ட இறைச்சிகளை பயன்படுத்தி உணவு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது .

    புத்தாண்டையொட்டி இந்த உணவகத்துக்கு இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். அப்போது இறைச்சியிலும், உணவிலும் புழுக்கள் நெளிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மற்றும் உரிமையாளரிடம் புகார் செய்தனர். இது போல் பணத்துக்காக சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை தயார் செய்து, பொதுமக்களுக்கு வழங்காதீர்கள் எனவும் தெரிவித்தனர்.

    அதன் பிறகு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அருணிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பெயரில் வட்ட பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உணவகத்தில் நேரடியாக ஆய்வு செய்து கெட்டுப்போன 3 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தார்.

    இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கக்கோரி உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக உரிமையாளர் செந்தில் குமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .மேலும் இது தொடர்பாக இன்று விசாரணை நடைபெறுகிறது.விசாரணை முடிவில் ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

    ×