search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை
    X

    கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

    • 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல்
    • ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் திருப்பத்தூர் நக ராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பழனிச்சாமி நேற்று நகரப்பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 13 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

    அதில் 3 கடைகள் தங்களது உரிமத்தை புதுப்பிக் காமலும், ஒரு கடை எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த 4 கடைகளுக்கும் உணவு பாது காப்பு சட்டத்தின்படி உடன டியாக நோட்டீஸ் வழங்கப் பட்டது.

    மேலும் ஒரு கடையில் 4 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. ஒரு கடையில் தடை செய்யப்பட் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×