என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வைகுந்தம் அருகே மொபெட் மீது தனியார் பஸ் மோதி பூசாரி பலி
- நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது.
சேலம்:
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு மருத்துவமனை பின்புறம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (42). திருமணமாக தவரான இவர் கோவில் பூசாரி இருந்தார். நேற்றுமுன்தினம் மாலை 5.25 மணிக்கு பவானி கூடுதுறையிலிருந்து மகுடஞ்சாவடி நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். சங்ககிரியை அடுத்து வைகுந்தம் டோல்கேட் அருகே சென்றபோது பின்னால் வந்த தனியார் பஸ் மோதி குமரேசனின் மொபட் மீது மோதியது. இதில், குமரேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி போலீசார் குமரேசனின் உடலை மீட்டு சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பஸ் டிரைவரான சங்ககிரி அக்கமாபேட்டையைச் சேர்ந்த சுதாகர் (47) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே விபத்து நடந்தவுடன் பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் தப்பியோடிய சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்