என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு வணிக வளாகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் உறுதியளித்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வேளாண்மைத்துறை யின் மூலம் தென்னை விவ சாயிகளுக்கான குறைதீர்க் கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி, தென்னை விவசாயிகளுக்கு வேளாண் மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், மேலும் தென்னை விவசாயிகளிடம் அதிக மகசூல் பெறுவதற்கான மேற்கொள்ளப்படும் பணி கள் குறித்து கேட்டறிந்தார்.
இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் செய் யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் மழை குறைவு ஏற்படும் பகுதிகளில் மகசூல் குறைந்துள்ளன. மேலும் பிரதான தொழிலாக இருந்து வரும் தென்னை விவசாயிகளாகிய எங்க ளுக்கு ராமநாதபுரத்தில் வணிக வளாகம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவிக் கையில், தென்னை விவசா யிகளின் முக்கிய கோரிக் கையான வணிக வளாகம் அமைத்திட உரிய நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். சோலார் திட்டத்தில் உலர் கலவை அமைத்திட வேளாண் பொறியியல் துறையின் மூலம் 40 சதவீதம் அரசு மானிய திட்டத்தில் அமைத்துக் கொடுக்கப்படு கிறது. தேவையான தென்னை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தேங்காய் பருப்பு களை நல்ல முறையில் பதப்படுத்தி மதிப்பூட்டப் பட்ட பொருளாக விற்பனை செய்ய விவசாயிகள் முன் வரவேண்டும். நமது மாவட் டத்தில் 2 இடங்களில் தென்னை நாற்றங்கால் பண்ணை வேளாண்மை துறையின் மூலம் பராமரிக் கப்பட்டு வருகிறது. பொது வாக மண்டபம், திருப்புல் லாணி போன்ற பகுதிகளில் விலையும் தேங்காய்க்கு மக்களிடையே நல்ல வர வேற்பு உள்ளது.
விவசாயிகள் வேளாண் மைத்துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக மகசூல் பெற்றிடும் வகையில் நன் றாக பராமரித்து பயன் பெற்றிட வேண்டும். தென்னை விவசாயிகளின் தேவைகளை சரிசெய்திட மாவட்ட நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குநர் (பொ) தனுஷ்கோடி, வேளாண் ஒழுங்குமுறை விற்பனை மையச்செயலா ளர் ராஜா மற்றும் தென்னை விவசாயிகள், அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உரிமைத்தொகை ரூ.1,000 பெற்றதால் மகளிர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
- 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத் திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகை யில் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்.
அந்த வரிசையில் குடும் பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை யாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் கலை ஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத்தொ டர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத்தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குடும்பத்தலை விகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பற்று அட்டைகளை வழங்கினார்.
கலைஞர் மகளிர் உரி மைத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளி கூறியதா வது:-
எனது பெயர் நாகவள்ளி (வயது 58). நான் கூலி வேலை செய்து வருகின் றேன். தினசரி கூலி வேலை செய்தால்தான் எனக்கு அன்றாட தேவைகளை பார்த்துக்கொள்ள முடியும். வயதான காலத்தில் எனது நிலைமையை கண்டு அக் கம்பக்கத்தினர் உதவி புரி வார்கள். அவர்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்ய முடியாது. எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்நி லையில் தான் முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப் படும் என அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தில் நான் பயன்பெறமுடியுமா என சந்தேகத்தில் இருந்து வந் தேன். அந்த நிலையில் என்னுடைய விண்ணப்பத் தினை அருகில் நடைபெற்ற முகாமில் அளித்தேன். எனது விண்ண ப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ரூ.1000 என்னு டைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட் டதை கண்டு எண்ணிலடங்கா மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போன்ற மகளிர் நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி செயல்ப டுத்திவரும் தமிழ்நாடு முத லமைச்சருக்கு என் சார்பாகவும், என் னைப்போன்ற மகளிர்கள் சார்பாகவும் என் நெஞ் சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் தொகுத்து அளித்துள்ளனர்.
- வலையை இழுத்த மீனவர் கடலில் தவறி விழுந்து இறந்தார்.
- தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு மீனவ கிரா மத்தை சேர்ந்தவர் ஜான் பிரிட்டோ (வயது 47). இவர் நேற்று சக மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். கடலில் வலையை விரித்தி ருந்த நிலையில் மீன்கள் சிக்கியதும் அதனை பட குக்கு இழுத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜான் பிரிட்டோ நிலை தடுமாறு கடலுக்குள் விழுந்தார். இதைப்பார்த்த படகில் இருந்த மற்ற மீன வர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் அவர் கடலில் மூழ்கினார்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் உயிருக்கு ஆபத் தான நிலையில் அவரை மீட்டவர்கள் கரை திரும்பி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அற் குற்குள் ஜான் பிரிட்டோ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தொண்டி கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
- குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
ராமேசுவரம்
ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டு வெளி யேறும் தண்ணீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வரும் நிலையில் நகராட்சி சார்பில் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி நீருற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது.
இந்தநிலையில், காவேரி கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் நாள் தோறும் வழங்கப்படும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது 80 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை மட்டும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் ராமேசு வரத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு எற்பட் டுள்ளது.
மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைந்துள் ளனர்.
சேதமடைந்துள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கனவம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் ராமேசுவரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விஸ்வகர்மா திட்டத்தில் மீனவர்கள் பயனடைந்தனர்.
- பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.
ராமநாதபுரம்
மீன்பிடி, மண்பாண்டம் தயாரித்தல், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் விஷ்வ கர்மா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க 5 சதவீத வட்டியில் முதற்கட்டமாக ரூ 1 லட்சம் வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது. தவணை தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.2 லட்சம் திரும்ப வழங்கப் படும்.
இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் பரிந்துரை படி காந்திஜி மீனவர் சங்க தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதர பட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு வலை பின்னும் தொழிலாளி பழனிவேல்,ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் கருப்பசாமி ஆகியோருக்கு கடந்த 17-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடையாள அட்டை வழங்கினார். பிரதமரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய பழனி வேல்,கருப்பசாமி ஆகி யோரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் வர வேற்று வாழ்த்து தெரி வித்தார்.
பழனிவேல் கூறுகையில், பாரம்பரிய தொழில்கள், அதனை சார்ந்த துணை தொழில்கள் அழிவின் விளிம்பில் சென்று விடாமல் இருக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நாடு முழுவதும் பராம்பரிய தொழில்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றார்.
பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.
- மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
- பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் இரண்டு நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். திங்கட்கிழமை மீன்பிடிக்க செல்ல 412 படகுகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையிடம் அனுமதி பெற்றனர். ஆனால் 250-க்கும் குறைவான படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றது.
காற்றின் வேகம் அதிகளவில் இருந்த நிலையில் மீன்பாடு மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளதாக இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொரு படகுக்கும் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன் வரத்து குறைந்துள்ளதால் பல ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
மேலும் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தந்தால் மட்டுமே மீனவர்கள் நஷ்டம் இன்றி மீன்பிடிக்க முடியும். மீன்பிடித்து விட்டு கரைக்கு வரும் நாட்களில் பரபரப்பாக காணப்படும் மீன்பிடி துறைமுகம் இன்று காலை வெறிச்சோடியே காணப்பட்டது.
- அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர்.
- மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.
ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் மீன்பிடிக்க செல்கிறார்கள். ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருந்து தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் அச்சத்தில் தவித்து வருகிறார்கள்.
இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை படகுகளுடன் சிறைப்பிடித்து செல்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்து கடலில் வீசுவதும் காலங்காலமாய தொடர்கிறது. இதனை தடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகளை மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயற்கை சீற்றம் காரணமாகவும், மீன்பாடு அதிகமாக கிடைக்காததாலும் செலவுகளை மிச்சப்படுத்த குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் சுமார் 70 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
இதில் கச்சத்தீவு-நெடுந்தீவு பகுதியில் வலைகளை விரித்திருந்த ராமேசுவரம் மீனவர்களின் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான மீனவர்களை மிரட்டும் வகையில், சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் அதிர்ந்து போன ராமேசுவரம் மீனவர்கள் செய்வதறியாது உயிர் பயத்தில் திகைத்து நின்றனர். இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது என்று பலமுறை எச்சரித்தும் ஏன் வருகிறீர்கள்? என்று கூறிய கடற்படை வீரர்கள் கடலில் விரித்திருந்த மீன் பிடி வலைகளை அறுத்து கடலில் வீசி எறிந்தனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டனர்.
பின்னர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதையடுத்து பிழைத்தால் போதும் என்ற அச்சத்தில் அந்த பகுதியில் இருந்து புறப்பட்டு இன்று கரை சேர்ந்தனர். ஏற்கனவே மீன்பாடு மிகவும் குறைந்த நிலையில் ஒரு படகுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கடலுக்கு சென்றால், சிங்கள கடற்படையினர் அட்டூழியத்தால் தினம் தினம் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று மீனவர்கள் கண்ணீருடன் கூறினர்.
ஆனால் இதுபற்றி ராமேசுவரம் மீனவர்கள் போலீஸ் நிலையத்திலோ, மீன்துறை அதிகாரிகளிடமோ புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக பண்ணை குட்டை அமைந்துள்ளது.
- புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி. கருவேல மரங்கள் நிறைந்த பகுதி. வானம் பார்த்த பூமி என்ற அடைமொழிகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை வெட்டுவதால் மழை காலங்களில் பெய்த மழைநீரை தேக்கி வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் விவசாயத்திற்க்கு விவசாயிகள் பயன்படுத்துவதால் ராமநாதபும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் மண் அரிப்பை தடுக்கவும் பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும் கால்நடைகள் நீர் குடிக்கவும் பழக்கன்றுகள் மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.
மானாவாரி விவசாயகள் தங்களின் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் வருடம் முழுவதும். தண்ணீர் பெறமுடியும் பருவமழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிகளுக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை விவசாயிகளின் சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான் வறட்சி காலங்களில் பயிர்க ளுக்கு தேவையான தண்ணீரை கொடுப்பது பண்ணை குட்டை கள் தான்.
மழைகாலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் தேவையான தண்ணீரை பெறமுடியும்.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது. தமிழ கத்துக்கு சுமார் 40 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், சுமார் 56 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்திலும், 8 சதவீதம் குளிர்காலத்திலும், 19 சதவீதம் கோடை காலத்திலும் மழை பெய்கிறது. இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்க முடியும்.
பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்க லாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம் வயல்களில் மொத்த வடி கால்களையும் ஒருங்கி ணைப்பதாக இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பள வுக்கு குறையாமல் பண்ணை குட்டைகளை வெட்ட வேண்டும்.
சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழி வெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயலில் வரப்பினை பலப் படுத்தவும் குழிப் பகுதியை சுற்றி அணைக்கவும் பயன் படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளவு 40 கன மீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.
பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது இறவை மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு சோளம் பருத்தி பயறு வகை சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெறமுடியும்.
பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம் அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும் குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.
பண்ணை குட்டைகளில் நீர்தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுபோல் மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும்போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். உபரி நீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன்வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், நாற்றுக்கள் பராமரிக்கவும் கால்நடைகளை பராமரிக்கவும் பண்ணை குட்டை நீரை பயன் படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
- பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செய லாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் ராமநாதபுரம்-கீழக்கரை தொடர்வண்டி மேம்பா லத்தை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும். தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி சிறையில் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றா விட்டால் பா.ம.க. சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பசுமை தாயத்தின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மகாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கட்டிட பொறியாளர் சரீஃப், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன்,மற்றும் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.
- ராமநாதபுரத்தில் 21 தியாகிகளுக்கு பா.ம.க.வினர் மரியாதை செலுத்தினர்.
- மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
கடந்த 1987-ம் ஆண்டு செப்.17 அன்று மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் தேனிசை அக்கீம் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார்.
மாவட்ட தலைவர் சந்தன தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், நகரச் செயலாளர் ராமநாதபுரம் பாலா, மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன்.
ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் சரிப், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், நகர அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம் நன்றி கூறினார்.
- பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதுரை ஆதீனம் தரிசனம் செய்தார்.
- இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது என்றார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மதுரை ஆதீன மடத் தின் 293-வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம் பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து தரிசனம் செய்தார்.
பிறகு தேவரின் இல்லம், பழமையான பாராட்டு பட்டயங்கள், புகைப்பட கண்காட்சி, தேவர் பூஜை அறை ஆகியவற்றை பார் வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஒவ் வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும் பொன் வருவது வழக்கம். கே.வேப்பங்குளம் கிரா மத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தேன். அதோடு பசும்பொன் தேவர் வாழ்ந்த வீடு, அனைத்தையும் பார்க்க வேண்டும் என நினைத்து வந்துள்ளேன்.
இங்கு வந்தால் மனம் அமைதியாக உள்ளது. தியானம் செய்ய சிறந்த இடமாக இருக்கிறது. பசும் பொன் தேவருக்கும், மதுரை ஆதீ னத்துக்கும் நீண்ட நெடிய தொடர்புண்டு. தேவர் ஒரு தெய்வப்பிறவி. சித்தராக வாழ்ந்தவர். உலகில் இன்று நடக்கும் பல்வேறு நிகழ்வு களை அவர் வாழ்ந்த காலத் திலே நடந்துள்ளது.
அப்படிப்பட்ட மாபெரும் மகான் அவதரித்த இந்த புண்ணிய பூமி பசும்பொன் கிராமத்திற்கு நாம் அனைவ ரும் வரவேண்டும், வழிபாடு செய்ய வேண்டும். இன்றைய இளைஞர்கள் தேவருடைய கொள்கையையும், அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை யும், அரசியலையும் அனை வரும் பின்பற்ற வேண்டும். இந்த வருடமும் தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரு வேன் என்றார்.
அவருடன் மாமன்னர் பூலித்தேவர் மக்கள் கழகத்தின் தலைவர் பெருமாள்சாமி, பசும்பொன் ரத்ததான அறக்கட்டளை சமூக சேவகர் கண்ணன், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாணவர் அணி மத்தியக் குழு உறுப்பினர் மு.வெள்ளைப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 312 இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
- இந்து முன்னணி மாவட்ட தலைவர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 312 சிலைகளை வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். இன்று காலை கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனைத்து விநாயகர் கோவில்களும் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கோவில், மண்டபம், தேவிபட்டினம், கீழக்கரை சக்தி விநாயகர் கோவில், ஏர்வாடி வெட்டமனை, தொத்தன் மகன்வாடி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
உலக நன்மை வேண்டியும் கல்வி, குடும்பம், திருமண தடை ஆகியவைகள் நீங்கி சிறப்படைய கூட்டுப்பிராத்தனையும் கோவில்களில் நடந்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
ராமநாதபுரம் போலீஸ் சப் டிவிசனில்-65, பரமக் குடி-67, கமுதி-17, ராமேசு வரம்-103, கீழக்கரை 35, திருவாடானை-14, முது குளத்தூர் போலீஸ் சப் டிவிசனில் 11 என மாவட் டத்தில் மொத்தம் 312 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலைகள் 3 அடி முதல் 9 அடி உயரம் வரையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை அதிகாலை யிலேயே வாங்கி வந்து வீடுகளில் வைத்து வழிபட்டனர். பின்னர் விநாய கருக்கு உகந்த சுண்டல், கொழுக்கட்டை, கடலை, பொங்கல் அவல், பொரி போன்ற பொருட்களை வைத்து படைய லிட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்க துரை உத்தரவின்படி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நேற்று மாலை முதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீசார் விடிய விடிய பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராம மூர்த்தி விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கான முன்ஏற்பாடு பணிகளை செய்து வருகிறார்.
பின்னர் அவர் கூறுகையில், நாளை 19-ந்தேதி ராமேசுவரம், தங்கச்சி மடம், பாம்பன், மண்டபம், பரமக்குடியில் ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் 20-ந்தேதி தேவிபட்டினம், திருப்புல்லாணி, ஏர்வாடி, சாயல்குடி, திருப்பாலைக் குடி ஆகிய பகுதிகளில் ஊர்வலம் நடைபெறும் என்றார்.






