search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general assembly meeting"

    • பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செய லாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ராமநாதபுரம்-கீழக்கரை தொடர்வண்டி மேம்பா லத்தை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும். தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி சிறையில் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றா விட்டால் பா.ம.க. சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பசுமை தாயத்தின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மகாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கட்டிட பொறியாளர் சரீஃப், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன்,மற்றும் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.

    • வருகின்ற நவம்பர் மாதம் நடக்கிறது
    • நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்

    வேங்கிக்கால்

    திருவண்ணாமலையில் மாவட்ட சீனியர் தடகள சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கார்த்தி வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது. வருகின்ற நவம்பர் மாதம் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில சீனியர் தடகள போட்டிகள் நடைபெற உள்ளன.

    இதில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் வீரர்கள் வர உள்ள நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்திற்கு செயலாளர் சுரேஷ்குமார் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய பொதுக்குழு கூட்டம் இணைய தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    இதில் செயலாளர் செந்தில், பொருளாளர் தென்னரசு, உப்பு உற்பத்தியாளர்கள் கேடிலியப்பன், சுப்பிரமணியன், அம்பிகாதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டு வரவு, செலவு தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    மேலும், பொது நிதி கணக்கில் வருவாய் குறைந்த காரணத்தினாலும், விலைவாசி ஏற்றத்தினாலும் உப்பள பகுதிகளில் உப்பு ஏற்றும் லாரி ஒன்றுக்கு கட்டணமாக வசூல் தொகை ரூ.40-ல் இருந்து ரூ.70ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர்
    • அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழு கூட்டம் அரக்கோ ணம் அடுத்த சாலை கிரா மத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மின்ன லான், மாநில பொதுக்குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி, மாநில வக்கீல் சங்க சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி, அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கோட்ட பொறு ப்பாளர் தீனதயாளன், ரவி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ், நந்தனம் பொறியியல் கல்லூரி தாளாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நந்திபெண்டா நந்திராயன் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.

    அதனை சீர் செய்ய வேண்டும். ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசே கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள கோவில் குளம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் கடந்த மாசி மாதம் நடைபெற்ற அய்யா அவதார தின விழா வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.

    அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுத்துரை முன்னிலை வகித்தார்.

    கடந்த மாசி மாதம் நடைபெற்ற அய்யா அவதார தின விழா வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. கூட்டத்தில், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகர், துணைத் தலைவர் அய்யாபழம், இணைத்தலைவர் ராஜதுரை, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், செல்வின், துணைச் செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் இணைத் தலைவர் சிங்கபாண்டி, முன்னாள் துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • உறுப்பினர்கள் பங்கேற்றனர்

    போளூர்:

    போளூர் காமராஜர் கூட்டுறவு நகர வங்கியில் பொது பேரவை கூட்டம் நேற்று மாலை வங்கி வளாகத்தில் நடைபெற்றது. வங்கி செயலாளர் சார் பதிவாளர் சித்திக் அலி தலைமை வகித்தார். பொது மேலாளர் பி. ராமு முன்னிலை வகித்தார். காசாளர் மோகன் வரவேற்றார். உதவி பொது மேலாளர் பி.கேசவன் தணிக்கை அறிக்கை வாசித்தார்.

    இதைத்தொடர்ந்து துணை விதி திருத்தம், பணியாளர்கள் ஓய்வு வயது 58 இல் இருந்து 60ஆக உயர்த்துவது வங்கியின் உத்தேச வரவு செலவு திட்டம் புதிய அங்கத்தினர் சேர்ந்துள்ளதை அங்கீகரித்தல், என பல தீர்மானங்களை நிறைவேற்றினார்.

    அங்கத்தினர் எழுப்பிய கேள்விகளுக்கு பொது மேலாளர் ராமு தகுந்த பதில் அளித்தார். முடிவில் அங்கத்தினருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் அரக்கோணம் அடுத்த சாலை கிராமம் தனியார் திருமண மண்டபத்தில் அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்றது. சோளிங்கர் வடக்கு ஒன்றிய செயலாளர் சிவாஜி முன்னிலையில் வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் க.சரவணன், மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

    அரக்கோணம் மற்றும் சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் மக்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், மணி, ஜெயசங்கர், கிருஷ்ணன், குணசேகரன், மாதவன், முத்து, மாவட்ட துணைச் செயலாளர் ராமசாமி, சித்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், மாணவர் சங்க செயலாளர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட பொது குழு உறுப்பினர் கோ.ஏழுமலை மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொருளாளரும் கைணூர் ஊராட்சி மன்ற தலைவருமான கோ.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.

    • 2022-2023 ஆண்டுக்கான வரவு செலவு குறித்து பேச்சு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28-வது பொது பேரவை கூட்டம் திருவண்ணாமலை வேங்கிகால் குமரன் மஹாலில் நடைபெற்றது.

    வங்கியின் இணைப்ப திவாளர் மேலாண் இயக்குனர் ஜெயம் வரவேற்றார். வங்கியின் நிர்வாக குழு தலைவர் பெருமாள் நகர் ராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கியின் நிர்வாக குழு இயக்குனர்கள் பேரவை உறுப்பினர்கள், இணைப்பு சங்கங்களின் செயலா ளர்கள் பங்கேற்றனர்.

    பொது மேலாளர் (பொறுப்பு). விஜயகுமார் வங்கியின் 2021-2022 நிதி நிலை ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைப்படி வரவு, செலவு, லாப நட்ட கணக்கு ஆஸ்தி பொறுப்பு பட்டியல். வாசித்தார்.

    மேலும் 2022-2023 ஆண்டுக்கான உத்தேச வரவு செலவு மற்றும் ஈட்டக்கூடிய லாபம் குறித்து பேசப்பட்டது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு சரக துணை பதிவாளர்கள் ராஜசேகரன், கமல கண்ணன், துணைப் பதிவாளர் பொது விநியோகத் திட்டம், ஆரோக்கியராஜ் மற்றும் நிர்வாக குழு தலைவர் அவர்களால் பேரவை வாழ்த்தப்பட்டது நிறைவாக இளங்கோவன் உதவி பொதுமேலாளர் (கடன்) நன்றி தெரிவித்தார்.

    நெல்லை மண்டலத்தில் நடைபெறவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவேண்டும்.

    கயத்தாறு:

    கயத்தாறில் அ.ம.மு.க. சார்பில் கழக தலைமை நிலைய செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், தென் மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

    தீர்மானங்கள்

    நிகழ்ச்சிக்கு தலைமை நிலைய செயலாளரும், தென் மண்டல பொறுப் பாளருமான எஸ். வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமை தாங்கினார். கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கணபதி பாண்டியன் வரவேற்புரையாற்றினார்.கூட்டத்தில் சென்னையில் வருகின்ற ஆகஸ்ட்- 15 ந் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்திற்கு தென் மண்டலத்தின் சார்பில் 20 ஆயிரம் பேர் வாகனங்களில் செல்ல வேண்டும் என்றும், தென்மாவட்டங்களில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடி ஏற்றவேண்டும். நெல்லை மண்டலத்தில் நடைபெறவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவேண்டும். மேலும் வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கலந்து கொண்டவர்கள்

    இந்த கூட்டத்திற்கு 12 மாவட்ட செயலாளர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி பாண்டியன், தெற்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகரன், மத்திய மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர், நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். கே.முத்து, வடக்கு மாநகர் மாவட்ட கழக செயலாளர் பரமசிவம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராகவன், மேற்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன், தென்காசி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முருகையா பாண்டியன், வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்டம் கழகச் செயலாளர் காளிமுத்து, மத்திய மாவட்ட கழக செயலாளர் பயில்வான் கே, எஸ், சந்தோஷ்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசாமி, மற்றும் கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், மாநில சிறுபாண்மை குழுத் தலைவர் மீரான் மைதீன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் உடையார்பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஆனந்தன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், மாவட்டப் பொருளாளா் பிரகாஷ் மற்றும் சங்க செயலாளா் விஜயகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கோரிக்கை

    இதில் வருவாய்த் துறையில் அனைத்து அலுவலா் நிலையிலும், ஒரே அலுவலக நிா்வாகத்தின் கீழ் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு அலுவலா்களாக பணியமா்த்த வேண்டும், பணி மாறுதல்களை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும், ஊழியா் விரோத போக்கை கைவிட வேண்டும். கைவிடவில்லையென்றால் ஆா்ப்பாட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

    ×