search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணி மாறுதல்களை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும்
    X

    பணி மாறுதல்களை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும்

    • வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.
    • இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட மையத்தின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் ஆனந்தன் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் அா்த்தநாரி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் தாமோதரன், மாவட்டப் பொருளாளா் பிரகாஷ் மற்றும் சங்க செயலாளா் விஜயகாந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கோரிக்கை

    இதில் வருவாய்த் துறையில் அனைத்து அலுவலா் நிலையிலும், ஒரே அலுவலக நிா்வாகத்தின் கீழ் தொடா்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோருக்கு பதவி உயர்வு அலுவலா்களாக பணியமா்த்த வேண்டும், பணி மாறுதல்களை கலந்தாய்வு முறையில் நடத்த வேண்டும், ஊழியா் விரோத போக்கை கைவிட வேண்டும். கைவிடவில்லையென்றால் ஆா்ப்பாட்டத்தை நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×