search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
    X

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

    • பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர்
    • அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக பொதுக் குழு கூட்டம் அரக்கோ ணம் அடுத்த சாலை கிரா மத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன், மாநில வன்னியர் சங்க துணை தலைவர் மின்ன லான், மாநில பொதுக்குழு உறுப்பினர் பஞ்சாட்சரம், மாவட்ட பொருளாளர் உமா மகேஸ்வரி, மாநில வக்கீல் சங்க சமூக நீதிப் பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத் தலைவர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கி.லோகநாதன் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறி, அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.

    Next Story
    ×