search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
    X

    பொதுகுழு கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    பா.ம.க. பொதுக்குழு கூட்டம்

    • பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கீம் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் முனைவர் ஷேக் மொகைதீன் கலந்து கொண்டார். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார்.மாவட்ட தலைவர் சந்தன தாஸ், மாவட்ட அமைப்பு செய லாளர் சதாம் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் ராமநாதபுரம்-கீழக்கரை தொடர்வண்டி மேம்பா லத்தை உடனடியாக நிறைவு செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    இல்லையென்றால் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரெயில் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெறும். தி.மு.க. அரசு அடுத்த தேர்தல் வாக்குறுதியின்படி சிறையில் உள்ள அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். இதனை நிறைவேற்றா விட்டால் பா.ம.க. சிறுபான்மை பிரிவு சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் பசுமை தாயத்தின் மாநில துணைச் செயலாளர் பொறியாளர் கர்ண மகாராஜன், மாவட்ட துணைச் செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன்,மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், இளைஞர் சங்கத் தலைவர் ஸ்டாலின், மாணவர் சங்கத் தலைவர் சந்தோஷ், மாணவர் சங்க அமைப்பாளர் கார்த்திக், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறியாளர் கட்டிட பொறியாளர் சரீஃப், மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும் கான், கீழக்கரை நகர செயலாளர் லோக நாதன்,மற்றும் திரளாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் நன்றி கூறினார்.

    Next Story
    ×