search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளின் வரப்பிரசாதமாக அமைந்த பண்ணை குட்டை
    X

    விவசாயிகளின் வரப்பிரசாதமாக அமைந்த பண்ணை குட்டை

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக பண்ணை குட்டை அமைந்துள்ளது.
    • புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி. கருவேல மரங்கள் நிறைந்த பகுதி. வானம் பார்த்த பூமி என்ற அடைமொழிகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் விவசாய நிலங்களில் பண்ணை குட்டை வெட்டுவதால் மழை காலங்களில் பெய்த மழைநீரை தேக்கி வைத்து மழை பெய்யாத வறட்சியான காலங்களில் விவசாயத்திற்க்கு விவசாயிகள் பயன்படுத்துவதால் ராமநாதபும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் மண் அரிப்பை தடுக்கவும் பயிர் விளைச்சலில் மகசூல் கிடைத்திடவும் கால்நடைகள் நீர் குடிக்கவும் பழக்கன்றுகள் மரக்கன்றுகள் அமைத்து கூடுதல் பணம் சம்பாதிக்கவும் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கவும் பண்ணை குட்டைகள் உதவுகின்றன.

    மானாவாரி விவசாயகள் தங்களின் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் வருடம் முழுவதும். தண்ணீர் பெறமுடியும் பருவமழையை மட்டுமே நம்பி வாழும் மானாவாரி விவசாயிகளுக்கு இயற்கை தரும் கொடையான மழைநீரை விவசாயிகளின் சொந்த நிலத்தில் சேகரிப்பது பண்ணை குட்டைகள்தான் வறட்சி காலங்களில் பயிர்க ளுக்கு தேவையான தண்ணீரை கொடுப்பது பண்ணை குட்டை கள் தான்.

    மழைகாலங்களில் பெய்யும் மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் தேவையான தண்ணீரை பெறமுடியும்.

    இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-

    புவியியல் அமைப்புப்படி தமிழகம் குறைந்த மழைப்பொழி வையே கொண்டது. தமிழ கத்துக்கு சுமார் 40 சதவீத மழை தென்மேற்கு பருவமழை காலத்திலும், சுமார் 56 சதவீதம் வடகிழக்கு பருவமழை காலத்திலும், 8 சதவீதம் குளிர்காலத்திலும், 19 சதவீதம் கோடை காலத்திலும் மழை பெய்கிறது. இந்த மழைநீரை தேக்கினாலே ஆண்டு முழுவதும் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்க முடியும்.

    பண்ணை குட்டைகளை விவசாய நிலங்களில் அமைக்க லாம். இதற்காக தேர்வு செய்யப்படும் இடம் வயல்களில் மொத்த வடி கால்களையும் ஒருங்கி ணைப்பதாக இருக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது 1 சென்ட் பரப்பள வுக்கு குறையாமல் பண்ணை குட்டைகளை வெட்ட வேண்டும்.

    சமமான நிலங்களில் சாலை வசதி இருப்பின் சாலை ஒரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம். லேசான சரிவு நிலங்களில் தாழ்வான பகுதியை அறிந்து குழி வெட்ட வேண்டும். வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயலில் வரப்பினை பலப் படுத்தவும் குழிப் பகுதியை சுற்றி அணைக்கவும் பயன் படுத்தலாம். ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் குழியின் கொள்ளவு 40 கன மீட்டர் அதாவது 40 ஆயிரம் லிட்டர் தேக்கி வைக்கும் அளவாக இருக்கும். மழை பெய்யும் போது ஒரு ஏக்கர் பரப்பளவில் மண் நனைந்த பிறகு வழிந்தோடும் மழைநீர் தானாக பண்ணைக்குட்டை குழிக்குள் வந்து சேரும்.

    பண்ணைக்குட்டையில் இருக்கும் நீரை மோட்டார் அல்லது இறவை மூலம் இறைத்து பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் பயிர் செய்யப்படும் கம்பு சோளம் பருத்தி பயறு வகை சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு இந்த பண்ணை குட்டை நீரால் பாசனம் செய்து பலன் பெறமுடியும்.

    பண்ணை குட்டைகளை ஆண்டுதோறும் தூர்வாருதல் அவசியம் அதில் வளர்ந்து காணப்படும் பாசி தாவரங்களை அகற்ற வேண்டும் குட்டைகளை சுற்றி மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் பேண வேண்டும்.

    பண்ணை குட்டைகளில் நீர்தேக்குவதால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது. இதுபோல் மழைநீரை ஒரு இடத்தில் தேக்கும்போது சுற்றி உள்ள இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். உபரி நீரின் அளவை பொறுத்து பண்ணை குட்டையில் மீன்வளர்க்கலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கவும், நாற்றுக்கள் பராமரிக்கவும் கால்நடைகளை பராமரிக்கவும் பண்ணை குட்டை நீரை பயன் படுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×