search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Thanks"

    • உரிமைத்தொகை ரூ.1,000 பெற்றதால் மகளிர்கள் தமிழக முதல்-அமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.
    • 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு முதலமைச்சர் பெண்களின் முன்னேற்றத் திற்காக பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதன் மூலம் பெண்கள் முன்னேற்றம் காணும் வகை யில் திட்டங்களை செயல்ப டுத்தி வருகிறார்.

    அந்த வரிசையில் குடும் பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை யாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த திட்டம் கலை ஞரின் நூற்றாண்டான இந்த ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதில் இணைத்துக் கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வரப்பெற்றதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான 15.09.2023 அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததைத்தொ டர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத்தொழில்கள் வாரி யத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் குடும்பத்தலை விகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பற்று அட்டைகளை வழங்கினார்.

    கலைஞர் மகளிர் உரி மைத்திட்டத்தில் பயன் பெற்ற பயனாளி கூறியதா வது:-

    எனது பெயர் நாகவள்ளி (வயது 58). நான் கூலி வேலை செய்து வருகின் றேன். தினசரி கூலி வேலை செய்தால்தான் எனக்கு அன்றாட தேவைகளை பார்த்துக்கொள்ள முடியும். வயதான காலத்தில் எனது நிலைமையை கண்டு அக் கம்பக்கத்தினர் உதவி புரி வார்கள். அவர்களிடம் அடிக்கடி தொந்தரவு செய்ய முடியாது. எனக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இந்நி லையில் தான் முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரி மைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப் படும் என அறிவித்திருந்தார்.

    இந்த திட்டத்தில் நான் பயன்பெறமுடியுமா என சந்தேகத்தில் இருந்து வந் தேன். அந்த நிலையில் என்னுடைய விண்ணப்பத் தினை அருகில் நடைபெற்ற முகாமில் அளித்தேன். எனது விண்ண ப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு எனக்கு ரூ.1000 என்னு டைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட் டதை கண்டு எண்ணிலடங்கா மகிழ்ச்சி அடைந்தேன். என்னைப் போன்ற மகளிர் நிலையை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டி செயல்ப டுத்திவரும் தமிழ்நாடு முத லமைச்சருக்கு என் சார்பாகவும், என் னைப்போன்ற மகளிர்கள் சார்பாகவும் என் நெஞ் சார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் நா.விஜயகுமார் ஆகியோர் தொகுத்து அளித்துள்ளனர்.

    ×