என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சுற்றுலா இடங்களை காண வசதியாக ராமேசுவரத்தில் மினி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்க ளில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர்

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 21 வார்டுகள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளனர். மேலும் நாள் தோறும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் அரசு பஸ்களின் மூலம் 5 ஆயிரம் பயணிகள் வருகின்றனர். ராமேசுவரத்தில் அரசு பஸ்சை தவிர தனியார் பஸ் வசதிகள் இல்லை.

    பஸ் நிலையம் முதல் கோவில் வரை,கோவில் முதல் தனுஷ்கோடி வரை பஸ்கள் சென்று வருகிறது. இதில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் பஸ்சில் செல்ல அதிக ஆர்வம் காட்டுவது இல்லை.

    மேலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆட்டோ, வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் பணம் செலுத்தி செல்கின்றனர். வெளியூர் நபர்களை மட்டுமே குறிவைத்து ஆட்டோக்கள் இயக்கப்படு கிறது. இதனால் உள்ளுர் பொதுமக்கள் ஆட்டோக்களில் ஏற்றுவதை அதிகளில் தவிர்த்து வருகின்றனர். இதனால் உள்ளூர் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் மினி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக கோவில், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, கோதண்டராமர் கோவில், கெந்தமான பர்வதம், ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து சுற்றுலா பேருந்து இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கமுதி அடுத்துள்ள பேரை யூரில் சேதமடைந்த அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.
    • சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பேரை யூரில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி வளாகத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்காக சுற்றி திரிந்ததாலும், சமூக விரோதிகள் பயன்படுத்த தொடங்கியதாலும் பாதுகாப்பு கருதி 10 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டது.இந்த நிலையில் தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதையொட்டி பேரையூர் வழியாக செல்லும் குண்டாறு கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சாலையோர கால்வாய்கள் மூலம் பள்ளி வளாகத் திற்குள் மழை நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேலும் மழைக்காலங்க ளில் வரத்துக்கால்வாய்க ளில் தேங்கும் மழைநீர் மூலம் விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் நுழையும் ஆபத்து உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுற்றுச்சுவர் இடிந்து உள்ள தால் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை பயன் படுத்த தொடங்கலாம்.

    எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்க அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தொழிற்துறை ஆணையர் அர்ச்சனா பட்னாயக் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டபப்பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்னாயக் பேசுகையில், முதல்-அமைச்சர் பொதுமக்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் சிரமமின்றி கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தங்கள் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களை செயல் படுத்திட வேண்டுமென அலுவலர்களிடம் கேட்டு கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, உதவி கலெக்டர் (பயிற்சி) சிவானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காதல் திருமண முன்பகையால் உறவினருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத் துள்ள பாம்பன் பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வர்யா. இவர் அதே பகுதி யைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்தார். இவர்களது காதலுக்கு கடு மை யான எதிர்ப்பு கிளம்பி யது. இருந்தபோதிலும் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளனர்.

    இதனால் இரண்டு குடும் பத்தில் உள்ள இளைஞர்கள் முன்பகையுடன் இருந்து வந்துள்ளனர். இதில் ஒரு தரப்பை சேர்ந்த உறவின ரான ராஜ்கண்ணன் நேற்று மாலையில் வீட்டின் அருகில் வரும்பொழுது மற்றொரு தரப்பினர் வழிமறித்து அசிங்கமாக பேசி அரிவா ளால் கையில் வெட்டி காயப்படுத்தி மோதிக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து, பாம்பன் காவல் நிலையத்தில் நவீன்கு மார் அளித்த புகாரையடுத்து ராஜ்கண்ணன் (26), ராஜபாண்டி (23) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதேபோன்று ராஜ்கண்ணன் அளித்த புகாரையடுத்து அஸ்வீன் குமார் (23), நவின்குமார் (18), ஜெகதீஷ் (21) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மோதல் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
    • கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டு றவு சங்கம் கைத்தறி ரகங்க ளின் விற்பனையை அதிக ரிக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுப டியை வழங்கி வருகிறது.

    அந்த வகையில் ராமநாத புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையின் சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணுசந்தி ரன் இன்று காலை குத்து விளக்கேற்றி முதல் விற்ப னையை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.21.59 லட்சம் ஆகும். இந்த ஆண்டு (2023) தீபாவளி பண்டிகை விற்பனை இலக்கு ரூ.40 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக வலைதளமான www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம். இந்த விழா வில் வர்த்தக மேலாளர் கே.சங்கர், மேலாளர் ஆர்.மோகன்குமார், விற்பனையாளர் ஆர்.பாண்டியம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்காக ஆர்கானிக் புடவை ரகங்கள், காஞ்சீபுரம் பட்டு, சேலம் பட்டு, திருப்பு வனம் பட்டு, கோவை மென்பட்டு, கண்டாங்கி சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், திண்டுக்கல், அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், சுடிதார் ரகங் கள், நைட்டிகள், குர்த்தீஸ்கள் கண்ணை கவரும் வண்ணங் களில் வாடிக்கையாளர்க ளுக்கான கொண்டு வரப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    சாயல்குடி

    சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமே கலை பாக்கியராஜ், மனித நேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி,

    தி.மு.க. மாவட்ட பிரதிநி திகள் முருகன், நரிப்பையூர் லாரன்ஸ், சாயல்குடி நீர்ப் பாசன சங்க தலைவர் ராஜா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில பிரதிநிதி வழக்கறிஞர் சம்சுதீன் சேட் வரவேற்றார். பெரியாரின் திரு உருவப்ப டத்திற்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.

    மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச் சாமி, காங்கிரஸ் கட்சி சேவா தள தலைவர் கணேசன், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    ஒன்றிய கவுன்சிலர் பெரோஸ் பானு ஜலில், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் பிரதிநிதிகள் சகாயராஜ், மைக்கேல்ராஜ், சாயல்குடி வார்டு உறுப்பி னர் அமுதா, தி.மு.க. கிளைச் செயலாளர் பாண்டி, மாரி யர் தி.மு.க. கிளைச் செய லாளர் ஆறுமுகம், வாலி நோக்கம் கிளை செயலாளர் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    • மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
    • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள புல்லக்கடம்பன் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் வருவாய்த்துறையின் மூலம் 41 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூ தியம், முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், இயற்கை மரண உதவித்தொகை என ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டிலும், 80 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு, பட்டா மாறுதல் முழுப்புலம் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.53 ஆயிரத்து170 மதிப்பீட்டிலும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக் கலைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு பழமரத் தொகுப்பு ரூ.22 ஆயிரத்து 700 மதிப்பீட்டிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு தார்பாய், தெளிப்பான் ரூ.9 ஆயிரத்து 640 மதிப்பீட்டி லும், தமிழ்நாடு ஆதிதிரா விடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் 2 பயனாளிகளுக்கு பயணியர் ஆட்டோ, துணிக்கடை ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 326 மதிப்பீட்டிலும் என மொத்தம் 146 பயனாளி களுக்கு ரூ.18 லட்சத்து 62 ஆயிரத்து 836 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் வழங்கி னார்.

    பின்னர் அவர் பேசிய தாவது:-

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக் களுக்கு அரசின் நலத் திட்டங்கள் இன்று வழங்கப் படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்துத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம்.

    இப்பகுதியை பொருத்த வரை விவசாயம் நிறைந்த பகுதி என்பதால் விவசாயம் பணிகளுக்கு தேவையான திட்டங்கள் வேளாண்மைத் துறையின் மூலம் செயல் படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு உரிய கடனுதவி திட்டங்களை சரியான நேரத்தில் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ராமநாத புரம் வருவாய் கோட்டாட் சியர் கோபு, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முகம்மது முக்தார், திருவாடனை வட்டாட்சியர் கார்த்திகேயன் , புல்லக் கடம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் மாதவி கண்ணன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள்.

    ராமேசுவரம்:

    கடலுக்கு செல்லும் மீனவர்கள் அதிகப்படியான மீன்பாடுகளுடன் கரை திரும்ப வேண்டும் என்று வேண்டிய காலம் போய், இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் பத்திரமாக கரை திரும்ப வேண்டும் என்று வேண்டும் காலம் வந்து விட்டது. அந்த அளவுக்கு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் மொத்தம் 650 விசைப்படகுகள் உள்ளன. இதில் நேற்று காலை மீன்வளத்துறை அனுமதியுடன் 352 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களின் 10-க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அவர்களை மிரட்டும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்தனர். இதனால் மீனவர்கள் குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

    அதேபோல் இன்று அதிகாலை மீண்டும் சிங்கள கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். நமது மீனவர்கள் கடலில் வலைகளை வீசி எதிர்திசையில் இழுத்துச் சென்று மீன் பிடிப்பார்கள். ஆனால் இலங்கை மீனவர்கள் கடலில் நீரோட்டம் பார்த்து கூண்டு அமைத்து மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் முறையால் இலங்கை பகுதியில் மீன்வளம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீது எல்லை தாண்டி வந்ததாக கூறி வழக்குப்பதிவு செய்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்கிறார்கள். இன்று காலையும் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த சிங்கள கடற்படையினர் ராட்சத விளக்குகள் மூலம் ஒளியை ஏற்படுத்தி, மீனவர்கள் மீது தங்களது ரோந்து படகில் குவித்து வைத்திருந்த கற்களை எடுத்து சரமாரியாக வீசியுள்ளனர்.

    இதனை சற்றும் எதிர்பாராத ராமேசுவரம் மீனவர்கள் வலைகளை சுருட்டிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர். இருந்தபோதிலும் சில கி.மீ. தூரம் வரை இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து படகில் மீனவர்களை துரத்தி வந்து விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து காயங்களுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.

    இதுபற்றிய தகவலின் பேரில் ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உடனடியாக கடலுக்குள் சென்று சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலை நிறுத்த போராட்டம், இயற்கை சீற்றம், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு, விசைப்படகுகள் பறிமுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் திட்டப்பணிக்காக பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியானது.

    இதனைதொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேசுவரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்ட குடி கார்னர் பகுதியில் சேதமடைந்த காவேரி குழாய் சீரமைப்பு பணிக் காக குழி தோண்டப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. சிமெண்ட் மூலம் சீரமைக் கப்பட்டதால் குறைந்த பட்சம் 12 மணிநேரம் ஆகும்.

    குழி தோண்டப்பட்ட இடம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, ராமநாதபுரம், கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கினர். மேலும் அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    • ஓட்டல்களில் அதிரடி ஆய்வு நடத்தி கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    • ஏழு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 6ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப் பட்டது.

    ராமநாதபுரம்

    நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள பிரபல அசைவ ஓட்டலில் கடந்த 16-ந்தேதி இரவு அசைவ உணவு சவர்மா சாப்பிட்டோ ருக்கு வாந்தி, வயிற்று போக்கு, வயிற்று வலி ஏற்பட்டது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள அசைவ உணவு கடைகள், ஓட்டல்களில் சோதனை நடத்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கு ஆணையர் லால்வேனா உத்தரவிட்டார்.

    இதனடிப்படையில் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல் படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் ஆலோசனை யின்பேரில் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    கீழக்கரை கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பொறித்த சிக்கன் 4½ கிலோ, நிறுவன பெயர், தயாரிப்பு, காலாவதி தேதி வில்லை ஒட்டப்படாத உணவு 2 கிலோ, அதிக நிறமி சேர்க்கப்பட்டு தயாரான சட்னி வகைகளை பறிமுதல் செய்து அழித்தனர். இது தொடர்பாக 3 கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் சவர்மா கடைகள் ஆய்வு செய்யப் பட்டது. ஆய்வின் போது கருகிப் போன சிக்கன், சரியாக வேகாத சிக்கன்கள் சுமார் 6.5 கிலோ, பிளாஸ்டிக் 42 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. ஏழு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ரூ. 6ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப் பட்டது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் பஸ் நிலையம் மேல வீதி, வர்த்தகன் தெரு, நடுத்தெரு போன்ற பகுதிகளில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் லிங்கவேல் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு தயாரிக்கும் சமையலறையில் விற்ப னைக்கு வைக்கப்பட்டிருந்த பழைய பொறித்த சிக்கன் வகைகள் சுமார் 10 கிலோ கைப்பற்றி அழித்தனர்.

    மேலும் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்கள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தத குற்றத்திற்காக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு சுகாதாரமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி னர். மேலும் புகார்கள் வந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். உணவு தயாரிக்கும் பொருட்களை பாதுகாப்புடன் வைத்து கொள்ள வேண்டும். கோழிக்கறிகளை அன்றைய தினம் வாங்கி உணவுக்கு பயன்படுத்த வேண்டும் நோட்டீஸ் வழங்கினர்.

    • அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    • சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மின்னொளி அலங்கார தேரில் விநாயகர் சிலை வைத்து ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் முன்பு ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். அபிராமம் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான ஜாகிர் உசேன் விழாவிற்கு தலைமை தாங்கி முளைப் பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் மருது பாண்டியர்கள் உருவ படத்தை திறந்து வைத்தார். விழாவில் நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் போத்தி, வார்டு கவுன்சிலர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பகுதியினர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, கோவில் நிர்வாகி நாகராஜன், மற்றும் அகமுடையார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×