search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம்
    X

    அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம்

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைப்பு கூட்டம் நடந்தது.
    • அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு, செங்கப்படை ஆகிய கிராமங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைம யில் பூத் கமிட்டி அமைக்கப் பட்டன. வளநாடு கிரா மத்தில் நடந்த பூத் கமிட்டி அமைக்க நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவாட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றதலைவரும், முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளருமான செந்தில்குமார் வரவேற்றார். பூத்கமிட்டி உறுப்பி னர்களுக்கு நோட்டுகளை வழங்கி மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசிய தாவது:

    தி.மு.க.ஆட்சியில் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு என வரிகளை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கிறது. நகர் பகுதிகளில் 20 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் கூட குடும்பம் நடத்த முடியாமல் அல்லல்பட்டு வருகின்றனர். கனிமொழி எம்.பி.தேர்தலின்போது மதுவை ஒழிப்போம் என்றார். ஆனால் அதிகளவில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முது குளத்தூர் நகர் செயலாளர் ஷங்கரபாண்டியன், அபிராமம் கர்ணன், கண்ணன், பூசேரி சதிஸ் மிக்கேல், முத்துமணி, கருப்பசாமி, கவுன்சிலர் அர்ச்சுனன் , சித்திரைவேலு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×