என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • சிறப்பு கைத்தறி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
    • கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    ராமநாதபுரம்

    கைத்தறி வளர்ச்சி ஆணையர், புதுடில்லி மற்றும் கைத்தறி ஆணையர் சென்னை ஆகியோர் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் நகரில் இன்று (3-ந் தேதி) முதல் 9-ந் தேதி வரை மாவட்ட அளவிலான 6-வது சிறப்பு கைத்தறி கண்காட்சி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பின்புறம் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.

    கைத்தறி கண்காட்சியை இன்று மாலை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைக்கிறார்.

    இந்த கண்காட்சியில் சுமார் 25 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், சேலம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கும்பகோணம், திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தங்களது அரங்குகளை அமைத்து, ஜவுளிகளை விற்பனைக்கு வைத்துள்ளன.

    கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பெட்ஷீட்கள், பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கோரா சேலைகள், பருத்தி சேலைகள், துண்டுகள், சின்னாளப்பட்டி சேலைகள், பம்பர் சேலைகள், உயர்தர காட்டன் வேட்டிகள், அசல்பட்டு, காட்டன் சேலைகள், லுங்கிகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த விற்பனைக்கு தமிழக அரசின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பருத்தி ரகங்களுக்கு உருப்படி ஒன்றுக்கு 30 சதவீதம் (அதிக பட்சமாக ரூ.150 வரை), பட்டு ரகங்களுக்கு ரூ.300-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. பட்டு ரகங்களுக்கு சங்க கமிஷனாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படுகின்றது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு துணிகள் வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கேட்டு கொண்டுள்ளது.

    • நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைக்கிறார்.
    • காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    சட்டசபையில் அறிவித்த படி "நடப்போம் நலம் பெறுவோம்" எனும் திட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரால் அறி விக்கப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபா தைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவதற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரால் நாளை 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும் நடைபயிற்சி முடிவில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நடத்தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்திற்காக 8 கி.மீட்டர் தூர சாலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவமனை, அம்மா பூங்கா, வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்காணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக்கரை காவல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் நடைபயிற்சியில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    மேலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக குடிநீர், ஓய்வு நாற்காலிகள், வழிகாட்டி பலகைகள், நடைபயிற்சி நன்மைகள் குறித்த பதா கைகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தின் தொடக்க விழா நாளை (4-ந்தேதி) சனிக்கிழமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்குகிறார். நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

    • எட்டிவயல் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எட்டி வயல் கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.

    அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கிறதா? என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் நேரம், பொருட்கள் தரமாக உள்ளதா? சீராக கிடைக்கப் பெறுகிறதா? எனவும் கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், குறிப்பாக மகளிர் பொரு ளாதார ரீதியாக பயன்பெ றும் வகையில் மானி யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு வேளாண் உபகரணங்கள் வழங்கப் பட்டு வருகின்றன. தங்களுக்குத் தேவையான திட்டங்களை சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர் களை அணுகி பயன்பெற வேண்டும்.

    மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ளவும், சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி, எட்டிவயல் ஊராட்சி மன்ற தலைவர் கனகவள்ளி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது 2 கட்டமாக 10 விசைப்படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (சனிக்கிழமை) மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் போதும் பொன்னு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசுல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் வரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த சார் ஆட்சியர் விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    • மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் புத்தேந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற்றுக் கொண்டார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இதுபோன்ற கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் பொழுது பொதுமக்கள் முழுமையாக கலந்து கொண்டு வளர்ச்சிக்கும், தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு வழங்கும் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.

    பொதுமக்கள் முக்கிய கோரிக்கையான மருச்சுக்கட்டி தடுப்பணை நடப்பாண்டில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும். அதேபோல் காவேரி கூட்டு குடிநீர் இணைப்பு வரும்வரை ஆழ்துளை கிணறு மூலம் தேவையான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் கூரியூர் கிராமத்திற்கு பஸ் நிறுத்தம், புதிய நியாய விலைக்கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கிராம சாலைகள் சீரமைக்கவும், தெருக்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை மூலம் பொதுமக்களுக்கு தேவை யான திட்டங்களை கால தாமதமின்றி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியுடைய பயனாளிகளுக்கு மேல்முறையீட்டில் உரிமைத் தொகை பெற்று தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபா கரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தோசம், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தாமரை செல்வி, சேவுகப்பெருமாள், செயல் அலுவலர் முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
    • அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாராவதி கடல் பகுதியில் 1914 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மீட்டர் கேஜ் ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இரு பகுதியிலிருந்து திறந்து மூடும் வகையில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ள இந்த பாதையில் ரெயிலில் செல்வதை வாழ்நாள் கனவாகவும் கொண்டுள்ளனர்.

    இதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் பாதை அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பாலம் 106 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட பழுது மற்றும் சேதம் காரணமாக தொடர்ந்து அந்த பாதையில் ரெயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டு ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரெயில் பாலம் கட்டுமான பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர் பணிகள் தொடங்கியது. தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இதேபோன்று பாம்பனில் இருந்து மையப்பகுதி வரை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் மையப்பகுதியில் பொருத்தப்பட உள்ள தூக்கி இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாலம் 500 டன் எடையை கொண்டுள்ளது.

    இந்த பாலம் முழுமையாக பொருத்தப்பட்டு மையப்பகுதிக்கு கொண்டு செல்லுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.

    அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    • ஆதிரா’ஸ் பேக்கரிஸ் புதிய கிளையை நகர சபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் திறந்து வைத்தார்.
    • அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் புதிய கிளை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க வடக்கு நகர செயலா ளரும், நகரசபை தலைவருமான ஆர்.கே.கார்மேகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.முன்னதாக திறப்பு விழா விற்கு வருகை தந்த நகரசபை தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமு கர்களை பேக்கரி உரிமை யாளர்கள் பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர் சிவசண்மு கம், சசிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் 'மாலைமலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் எங்களது ஆதி'ராஸ் குழு மங்களின் கிளை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதர வுடன் நன்மதிப்பை பெற்று செயல்பட்டு வருகிறது.தொடர்ந்து புதிய கிளையை ராமநாதபுரத்தில் தொடங்கி உள்ளோம். வீட்டு விஷே சங்களுக்கு தேவையான அனைத்து வகையான இனிப்பு, காரவகைகள் மற்றும் பாதாம் பால், பருத்திப்பால் உள்ளிட்ட பானங்களும் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் தயாரித்து வழங்க உள்ளோம்.

    ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவை வேண்டு கிறோம் என்றார். திறப்பு விழா நிகழ்ச்சியில் ஆதிரா'ஸ் பேக்கரிஸ் உரிமையாளர்கள் சிவ சண்முகம், சசிக்குமார்,நகர் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், ஐஸ்வர்யா குழுமங்களின் உரிமையாளர் தொழிலதிபர் சுப்பு, பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கேணிக்கரை பாலன் ஹோட்டல் உரிமையாளர் சோமு, தி.மு.க அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் பழ. பிரதீப் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    • நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தில் ராமநாதபுரத்தில் 8 கி.மீ. தூர வழிப்பாைதகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்படவுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்தி ரன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 சட்டசபை அறிவிப்பு எண்: 105-ன் படி 'நடப்போம் நலம் பெறு வோம்' எனும் திட்டம் மருத் துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட் டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. தூரம் கொண்ட நடைபாதை கள் கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பெறுவ தற்கான நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்-அமைச்ச ரால் வருகிற 04.11.2023 அன்று காலை 6 மணிய ளவில் துவக்கி வைக்கப்பட வுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்புடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்த டுப்பு மருந்துத்துறை நடத் தும் சுகாதார நடை பயிற்சி நடப்போம் நலம் பெறு வோம் திட்டம் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்தில் தொடங்கி, ஆஷி பன்னோக்கு மருத்துவ மனை, அம்மா பூங்கா, வேலு மாணிக்கம் ஹாக்கி மைதா னம், புதிய மாவட்ட ஆட்சி யர் அலுவலக பின்புறம், காவல் கண்காணிப்பாளர் முகாம், மகாத்மா காந்தி நகர், கிழக்கு கடற்கரை சாலை, புதிய சோதனை சாவடி, காவல் கண்கா ணிப்பாளர் முகாம், விருந்தினர் மாளிகை வழியாக கேணிக் கரை கா வல் நிலையம் வரை மொத்தம் 8 கி.மீ. உள்ள வழிப்பாதைகள் அனைத்தும் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரை

    கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கல் நீரோடை பகுதியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருகிறது. அங்கு கொல்கத்தா கன்குறியா பகுதியைச் சேர்ந்த இஜாபுல் மகன் ரூபல் (22) என்பவர் கண்ணன் (எ) முத்து கிருஷ்ணன் ஒப்பந்தக்காரரிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

    அப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கட்டிடத்திலிருந்து கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில கட்டிட தொழிலாளி ரூபல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இது குறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரிடம் கட்டிட ஊழியர்கள் புகார் அளித்திருந்தும் அலட்சியம் காட்டியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது என்று வெளி மாநில தொழி லாளர்கள் கூறினர்.

    மேலும் இதே போல் சென்ற மாதம் 17-ந்தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார் (23) என்ற தொழிலாளர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் அருகே நடந்த மாவட்ட கலை திருவிழாவில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணை தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் கே.டி.பிரபாகரன், மண்டபம் ஒன்றிய தலைவர் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன்,

    ஊராட்சி மன்றத் தலைவர்கள் முத்தமிழ் செல்வி பூரணவேல் (வாலாந்த ரவை), சந்திரசேகர் (வெள் ளிடை), தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 27 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி சிறைபிடித்து சென்றனர். இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு இரண்டு முறை காவல் நீட்டிக்கப்பட்டது.

    இதேபோன்று கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற போது 5 விசைப்படகுகளுடன் 37 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 64 மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று 10 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இலங்கை அரசின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள 64 மீனவர்கள் 10 படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடிக்கிறது.

    இதனால் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

    அத்துடன் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டு, மீன்பிடி தொழில் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. மற்றும் மீனவ சங்க பிரநிதிகள் வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளிதரனை சந்தித்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதற்கிடையே மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வருகிற 3-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டமும், 6-ந்தேதி முதல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

    ×