search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலி
    X

    மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலி

    • கீழக்கரை அருகே மின்சாரம் தாக்கி வட மாநில தொழிலாளி பலியானார்.
    • இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கீழக்கரை

    கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட செங்கல் நீரோடை பகுதியில் கட்டிட பணிகள் நடை பெற்று வருகிறது. அங்கு கொல்கத்தா கன்குறியா பகுதியைச் சேர்ந்த இஜாபுல் மகன் ரூபல் (22) என்பவர் கண்ணன் (எ) முத்து கிருஷ்ணன் ஒப்பந்தக்காரரிடம் பணிபுரிந்து வந்துள்ளார்.

    அப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கட்டிடத்திலிருந்து கம்பி மூலம் மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில கட்டிட தொழிலாளி ரூபல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இது குறித்து ஏற்கனவே கட்டிட ஒப்பந்ததாரிடம் கட்டிட ஊழியர்கள் புகார் அளித்திருந்தும் அலட்சியம் காட்டியதால் உயிர் பலி ஏற்பட்டுள்ளது என்று வெளி மாநில தொழி லாளர்கள் கூறினர்.

    மேலும் இதே போல் சென்ற மாதம் 17-ந்தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார் (23) என்ற தொழிலாளர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பலியானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×