என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்.
    • மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட் டில் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாச றைக்கூட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுதா.கே.பரமசிவன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதா வது:-

    புரட்சித்தலைவி அம்மா தேசியம் கடந்து உலக மக்கள் அனைவரும் நேசிக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கியவர். ஏழை, எளிய மக்களை நேசித்து அவர்களின் வாழ்வு வளம் பெற செய்தவர். சாதி, மதம் மொழி கடந்து மக்கள் அனை வராலும் நேசிக்கப்படக்கூடிய திறம்பட ஆட்சியை நடத்தியவர்.

    அவரது வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கழகத்தின் கடைநிலை ஊழியராய் வந்து கழகத்தின் பொதுச்செயலா ளராக உருவாகிக்கிறார் என் றால் அவர் கொண்ட விசுவா சமும், உறுதிமிக்க கொள்கையும் தான் காரணம். கழக பொதுச் செயலாளர் எடப்படாடியார் அனைத்தையும் அறிந்தவர். அவரை யாரும் ஏமாற்றவோ, அச்சுறுத்தவோ முடியாது.

    ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க கூடியவர் எடப்பாடியார் மட்டும் தான். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். காவிரி, முல்லை பெரி யாறு அணைகள் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையே நிலைநாட்டியது அம்மா தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.

    ஏழை, எளிய மக்களுக்கும், அன்றாடம் பசியில் வாடுவோ ருக்கும் அம்மா ஏற்படுத்திய நல்ல பல திட்டங்கள் அனைத் தும் வரும் தேர்தலில் நமக்கு வாக்குகளாக மாறும். மேலும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள் ஆகியோர்களின் தேவைகளுக்கேற்ப நமது பொதுச் செயலாளர் பார்த்து பார்த்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.

    வரும் தலைமுறையினரின் நோக்கங்களையும், எதிர்பார்ப் புகளையும் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நிச்சயம் செய்து தருவார். நாம் பூத் கமிட்டி தெளிவாக அமைப்பதன் மூலம் அதிக உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கழக ஆட்சி மலர நாம் வழி வகுக்கலாம்.

    இனி மேலும் தி.மு.க. தலை வர் ஸ்டாலினை நம்புவதை விட்டுவிட்டு நாம் சந்திக்கும் நாளைய நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை அளித்தனர்.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். அப்போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை கிராம பொதுமக்கள் சார்பில் கிராம தலைவர் தங்கவேல் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருந்ததாவது:-

    லாந்தை, கண்ணணை, பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை என ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 600 குடும்பங்களைக் கொண்ட 2,500-க்கும் மேற் பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வழிச் சாலையில் தான் தற்போது ெரயில்வே சுரங்கப்பாதை அமைய பெற்றி ருக்கிறது. இந்த கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேறு எந்த பாதையும் இல்லை.

    மேலும் மேற்கில் 6 கி.மீ. தூரத்திலும், வடமேற்கில் 10 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் தெற்கில் 7 கி.மீ. அளவில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தென்கலுங்குக்கு சென்று கடலில் கலக்கும் ஆற்று வழித்தடக் கால்வாயை மறைத்து தான் தடுப்பணை போல தான் இந்த சுரங்கப் பாதை அமைந்திருக்கிறது.

    ெரயில்வே தண்டவாளத் தின் இருபுறமும் வரும் உபரிநீர் நேராக சென்று கடலில் கலப் பதை தடுக்கும் விதமாக தடுப் பணை போல் இந்த பாலம் அமைந்துள்ளது. பாலத் தின் இரு முகப்புகளும் இரு வாக னங்கன் ஒன்றாக ஒரே நேரத் தில் கடந்து செல்ல இயலாத வகையில் குறுகலாக அதாவது வெறும் 15 அடியிலிருந்து 20 அடி தான் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. தேசிய நெடுஞ்சா லைக்கும், ெரயில்வே தண்டவா ளத்திற்கும் இடையே மிக குறைந்த 30 மீட்டருக்குள் தூரம் இருப்பதால் மேற்கில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இருந்து 100 மீ. தூரத்திற்கு மற்றும் இருக்கும் மெக்கா நகர் 60 வீடுகளும், செய்யது அம் மாள் பொறியியல் கல்லூரியும் நீரில் மிதக்கிறது.

    மேற்கண்ட ஐந்து கிராமங் களை சுற்றிலும் கிழக்கில் பெரிய கண்மாய் கலுங்கும், தெற்கில் திருப்பனை கண்மாய், மேற்கில் லாந்தை கண்மாய் கலுங்கின் ஆற்று கால்வாயும் மற்றொரு தெற்குப் பகுதியில், பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி கண்மாயிகளும், வடக்கில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அமைந்திருப்பதால் மாற்று வழித்தடமோ, சாலையோ இல்லை. எனவே இந்த சுரங் கப்பாதையில் தான் பள்ளி வாகனங்கள், டெம்போக்கள், ஆட்டோ, விவசாய பொருட் களை எடுத்துச் செல்லும் லாரி கள், இருசக்கர வாகனங் கள், அவசரத் தேவைக்கு ஆம்பு லன்ஸ், நகரப்பேருந்து என இந்த வழியில் தான் செல்கிறது.

    சிறிய மழை பெய்தால்கூட சுற்றியுள்ள அனைத்து வழித–டங்களில் இருந்தும் தண்ணீர் வந்து சுரங்கப்பாதைக்குள் தேங்குவதால் மழைநீரை வெளியேற்ற 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை இருசக்கர வாகனம் உட்பட எந்தவித போக்குவரத்து இல்லாமல் ஊருக்குள்ளேயே அந்த பகுதி மக்கள் முடங்கும் நிலை உள்ளது. மேலும் 7 கீ.மீ தொலைவில் உள்ள ராமநாத புரம் நகரத்திற்கும் பிற ஊர்க ளுக்கும் செல்ல முடியாமல் எவ்வித தொடர்பின்றி தீவு போல ஆகிவிடுகிறது.

    பிற மாவட்டங்களை போல இல்லாமல் பூலோக ரீதியாக கடற்கரை பகுதி என்பதாலும் அனைத்து கண்மாய்களின் உபரிநீர் வந்து சேரும் கடைநிலைப் பகுதியாக இருப்பதாலும் பாலம் அமைந்து இருப்பது தாழ்வாகவும் அதன் தண்ணீர் வெளியேரும் பகுதி உயர்வாக இருப்பதாலும் பெரிய கண்மாய் கலுங்கு திறந்தால் பாலத்தை முழ்கடிக் கும் அளவுக்கு தண்ணீர் வரும் பகுதி என்பதாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தண் ணீரை வெளியேற்ற இயல வில்லை.தொடர்ந்து மேற்கண்ட கிராம மக்கள் பெரும் துயரங்க ளையும், துன்பங்களை யும் சந்தித்து வருவதால் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறது.

    மேலும் நெடுஞ்சாலைத் துறை நான்குவழி சாலை அமைக்க இந்த பாலம் அமைந்து இருக்கும் பகுதியை யும் கையகபடுத்தி உள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்த பாலத்திற்கு நேரே உள்ள லாந்தை காலணி பகுதியில் உள்ள 30 வீடுகளையும் கைய கப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் நான்குவழி சாலை வந்தால் இந்த பாலத்திலிருந்து கிராம மக்கள் வெளியேரும் பொழுது விபத்து ஏற்படும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது.எனவே சமூகம் தயவு கூர்ந்து இப்பி ரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி சுரங்கபா தைக்கு மாற்றாக ஆள் உள்ள கேட்டா கவோ அல்லது மேம்பாலமா கவோ தரம் உயர்த்தி கொடுத்து பெரும்பான்மையாக விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா துணைத்தலைவர் பிரபாவதி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முகவை சிவா (எ) சிவசாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • ராமாநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் விஷ்ணு சந்திரன் பரிசோதனை செய்து கொண்டார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமை கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் முன் னிலை வகித்தார்.

    இந்த மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவை சிகிச்சை மருத்து வம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர் பான அனைத்து வகையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் மேல் சிகிச்சை தேவைப்படு பவர்களுக்கு ஆலோசனை களும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நகர் நல அலுவலர் டாக்டர் ரத்தின குமார், ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சிக்குள்ளாக்கும் காட்டுக்கருவேல மரங்கள்.
    • காட்டுக்கருவேல செடிகளை முற்றிலும் அழிக்க இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டிணம் என்று அழைக்கப்படும் சுந்தரபாண்டியபட்டி ணத்திலி ருந்து ராமநாதபுர மாவட்டத்தின் எல்லை தொடங்குகிறது. இதிலி ருந்து கடலோர கிராமமான திருப்பாலைக்குடி வரை கடற்கரையோரத்தில் வளரும் அரிய வகை மரங்களான மாங்குரோவ் வனம் கடலுடன் இணைந்து இயற்கை அன்னை தாலாட்டும் வகையில் ரம்மி யமாக காட்சியளிக்கிறது.

    மலையிலும் நன்னீர் நிலத்திலும்தான் காடுகள் உருவாகும் என்ற நிலைக்கு மாற்றாக இப்பகுதியில் உப்புத்தண்ணீரில் வளர்வதுதான் அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள். முதலில் வளர்வதற்கு மழை நீரான நன்னீர் தேவைப்பட்டாலும் வளர்ந்த பின் கடலின் உப்பு நீரிலே தழைத்திருப்பது இயற்கை யின் அதிசயம். மேலும் மற்ற தாவரங்களைப்போல் இல்லாமல் இதன் வேர்கள் மேல் நோக்கியும் காணப்ப டுவது இயற்கையின் படைப்பில் மேலும் அதிசயமாக உள்ளது.கடலோர முகத்துவார பகுதிகள், உப்பங்கழிகள் ஆகியவை மாங்குரோவ் காடுகள் வளர்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.இயற்கை பேரழி வான சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களி லிருந்து கடலோரங்களில் உள்ள மீனவ மக்களை காப்பாற்றுவதோடு, மீன்களின், பல்வேறு பறவை களின் இனப்பெ ருக்க மறைவு பகுதியாகவும் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்குரோவ் காடுகளை பாதுகாப்பதில் அரசு மெத்தனப்போக்கை காட்டுவது வேதனை யளிப்பதாக உள்ளது.

    இத்தகைய மாங்குரோவ் காடுகளின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சி வறண்ட நிலமாக மாற்றும் வகையில் காட்டுக் கருவேல செடிகள் களைகளாக மாங்குரோவ் காடுகளுக்குள் வளர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் காட்டுக் கருவேல செடிகள் படர்ந்து வளரத் தொடங்கியுள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையை ஆக்கிரமித்து வளர்ந்து வரும் இந்த காட்டுக் கருவேல செடிகளினால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் எதிரே வரும் நான்கு சக்கர வாகனங்களை கவனித்து செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் பகலில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது அடர்ந்து வளர்ந்துள்ள காட்டுக் கருருவேல மரங்களின் மறைவிலிருந்து திடீரென வெளியே வரும் கால்நடைகளாலும் விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மாவட்ட வனத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து கடலோர பகுதிகளை ஆய்வு செய்து அரிய வகை மாங்குரோவ் காடு களை பாதுகாக்கவும், நிலத்தடி நீரை உறிஞ்சும் காட்டுக்கருவேல செடி களை முற்றிலும் அழிக்க வும் இப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், சின்ன ஏர்வாடி சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார்.

    மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ கிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதேபோல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்று இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமம், பி.எம்.வலசை பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏர்வாடி மனநல காப்பகத்தின் செயல்பாடு கள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்பின் போது கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த், ஏர்வாடி ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் உள்பட பலர் இருந்தனர்.

    • ராமநாதபுரம் நகராட்சி 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்யும் பணிகளை நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம் பார்வையிட்டார்.
    • பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நகராட்சிக் குட்பட்ட 22-வது வார்டு பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொண்டு சரி செய்யும் பணிகளை நகர சபை தலைவர் ஆர்.கே கார்மேகம் பார்வையிட்டார். அப்போது அவர் மாலைமலர் நிரு பருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின் படி ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதில் குறிப்பாக ராமநாத புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை பிரச்சனை தொடர்ந்து வருகிறது.இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகாரின் பேரில் அவ்வப்போது நானே நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். வார்டு கவுன் சிலர்களின் கோரிக்கை களை ஏற்றும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.

    குறிப்பாக கடந்த கால ஆட்சியில் ஏற்பட்ட ஒரு சில குளறுபடிகளால் நகரின் பிரதான பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ மூலம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண ஆவண செய்து வருகிறோம்.இதற்கிடையில் பொது மக்கள் நலன் கருதி அவர்கள் அளிக்கும் புகாரின் பேரில் நேரில் சென்று ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகிறோம்.பொதுமக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை பிரச்சனை படிப்படியாக சரி செய்யப்பட்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1001 தீப்பந்தங்களுடன் முத்தாலம்மன் ஊர்வலம் நடந்தது.
    • களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நாராயணபுரம் மற்றும் கல்லுபட்டி கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக இருந்து வரும் முத்தாலம்மனுக்கு பாரம்ப ரிய முறைப்படி முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

    முன்னதாக திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுடன் தொடங்கி யது. இக் கிராமத்து மக்கள் பிடிமண் எடுத்து ஊர்வலமாக சென்று, சிலை செய்யும் இடத்தில் அம்மன் சிலை செய்வதற்கு பிடிமண்ணை கொ டுத்தனர். பின்னர் சிலை செய்யபட்டு நேற்று முன்தினம் இரவு முத்தா லம்மன் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட இளை ஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் முத்தா லம்மன் சிலை எடுப்பு திருவிழாவில், 2கிராமத்து இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் 1001 தீ பந்தங்கள் ஏந்தி, முத்தா லம்மன் சிலை செய்யப்பட்ட கண்ணார்பட்டியில் இருந்து அம்மன் கண்ணை கட்டி ஊர்வலமாக, கமுதி பஸ் நிலையம் வழியாக மேள தாளம் வான வேடிக்கை யுடன், நாராயணபுரம் கொண்டு சென்றனர்.

    பின்னர் மாலை களி மண்ணால் செய்யப்பட்ட முத்தாலம்மன் சிலையை கிராமத்தின் எல்லையில் வைத்து உடைத்தனர்.

    நாகரீக காலத்தில் மின் சீரியல் விளக்குகள், அதிக வெளிச்சம் தரக்கூடிய மின் விளக்குகள் இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் நாராயணபுரம், கல்லுபட்டி கிராமமக்கள் இன்னும் பழைய பழக்கத்தை மாற்றாமல் முத்தாலம்மன் திருவிழாவை தீ பந்தம், மேளம், வானவேடிக்கை களோடு கொண்டாடி வருகின்றனர்.

    • கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் மிதிலி புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து ராமேசுவரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 13-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில் தற்போது மிதிலி புயல் சின்னம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 2-வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் ராமேசுவரம் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், பாம்பன், தொண்டி, ஏர்வாடி, சோழியங்குடி, வாலிநோக்கம், மூக்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகள், 15 ஆயிரம் நாட்டு படகுகள், பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் மட்டும் 1,050-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வருமானமின்றி சிரமப்பட்டனர். இதனால் மீனவர்கள் மாற்று தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு தொழில்களுக்கு செல்லாத மீனவர்கள் வருமானமின்றி தவித்து வந்தனர்.

    நேற்று வரை பாம்பன், மண்டபம், ராமேசுவரம் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் கடல் சற்று அமைதியாக காணப்பட்டது. இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியளித்தனர். 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்ததால் இறால், கணவாய், நண்டுகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.

    5 நாட்களாக மீன்பிடி தொழில் நடைபெறாததால் தினசரி பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் 5 நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு சென்றுள்ளது மீனவர் குடும்பங்களில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    • கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இயங்கி வரும் தினசரி மீன் மார்க்கெட்டில் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படு வதாக உணவு பாது காப்புத்துறை அதிகாரி களுக்கு புகார் வந்தது.

    இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மீன்வள சார் ஆய்வாளர் அய்யனார் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதனால் மீன் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அதிகாரிகள் நடத்திய சோதனையில் பார்மலின் எனும் ரசாயனம் மீன்களில் கலக்கப்பட வில்லை என உறுதி செய்தனர். மேலும் கெட்டுப்போ ன 12 கிலோ மீன்களை கண்டறிந்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். இது போன்ற கெட்டுப்போன மீன்களை வாங்கி விற்க வேண்டாம் என மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் இதுபோல ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்து சென்றனர்.இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சபரிமலை யாத்திரை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
    • சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரி மலை யாத்திரை செல்வதற்கு மாலை அணிந்து கொண்ட னர். குருவடியார் மோகன் சுவாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

    கோவில் சன்னதி இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், அய்யப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இன்று முதல் 48 நாட்க ளும் இரவு பஜனை, கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும். முன்னதாக கோவிலில் மக்கள் நலமுடன் வாழ, மக்களுக்கு தேவை யான அளவு தண்ணீர் கிடைக்க மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

    இது குறித்து வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருக்கள் மோகன் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரி மலையில் உள்ள அய்யப்பன் ஆலயம் போல இந்த ஆலயமும் அமைந் துள்ளது. ஆகவே இன்று கார்த்திகை முதல்நாளில் தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து கொள்வ தற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்ல முடியாத சாமிமார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்களின் இருமுடியை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்பு ணர்விற்காக இருமுடிப்பை யில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ள வர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்ப வர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை.

    சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புளியங்குடி கிராமத்தில் ராமநாதபுரம் கலெக்டர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின்போது அந்தப்பகு தியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சீராக கிடைக் கப்பெறுகிறதா என கலெக் டர் கேட்டறிந்தார்.

    அப்போது அவர் தெரி வித்ததாவது:-

    தமிழக அரசின் மூலம் நலத்திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறிப்பாக மகளிர் பொருளாதார ரீதியாக பயன் பெறும் வகையில் மானி யத்துடன் கடனுதவி கள் வழங்கப்பட்டு சுயதொழில் புரிந்திடும் வகையில் திட்டங் கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் மழைக்காலம் தொடங்கியதையொட்டி, கூட்டுறவுத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு தேவை யான பயிர் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் போதியளவு விதைகள், உரங்கள் விவ சாயிகளுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாய பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். வேளாண்மைத்து றையின் மூலம் தேவையான உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி களப்ப ணியில் வேளாண் உதவி திட்ட அலுவலர்கள் ஈடு பட்டு வருவார்கள். விவசா யிகள் தக்க ஆலோசனை களை பெற்று விவசாயப்ப ணிகளை மேற் கொள்ள வேண்டும். மேலும் மழைக் காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடி தண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்து வர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதே போல் மருத்துவக்குழு அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப் பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்றின்றி உடல் ஆரோக் கியத்துடன் இருந்திட வேண் டும் என்றார்.

    முன்னதாக புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுடன் கல்வித்திறன் குறித்து ஆய்வு செய்தவுடன் காலை உணவு மற்றும் மதிய உணவு குழந் தைகளுக்கு வழங்கப்பட்டு வருவதன் விவரம் குறித்து பணியாளர்களிடம் கேட்ட றிந்தவுடன், மழைக்காலத்தை கருத்தில் கொண்டு குழந்தை களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந் தால் அரசு மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்து தேவை யான சிகிச்சை வழங்கி உதவிட வேண்டுமாறு அறி வுறுத்தினார்.

    இதில் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சடையாண்டி, முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜானகி, அன்பு கண்ணன், புளியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் கடற்கரைகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    100 கி.மீட்டருக்கு மேல் கடற்பரப்பை கொண்ட இந்த மாவட்டத்தில் லட்சக்கணக்கானோர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீனவ சமுதாயம் வசித்து வருகிறது. இவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலையே நம்பியுள்ளனர். ராமேசுவரத்தில் இருந்து சில மைல் கடல் தொலைவில் அண்டை நாடான இலங்கை அமைந்துள்ளது. இதனால் சர்வதேச கடல் பகுதியாக விளங்கி வருகிறது.

    இந்திய கடலோர காவல் படையினரும், இலங்கை கடற்படையினரும் 24 மணி நேர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், சில நேரங்களில் சிறை பிடித்துச் செல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    கடந்த மாதத்தில் மட்டும் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளை சேர்ந்த 64 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்ததோடு 10 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமேசுவரம் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    2 வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதன் காரணமாக ராமேசுவரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்த 50 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

    இந்நிலையில் மத்திய-மாநில அரசுகளின் நடவடிக்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு கடலுக்கு புறப்பட்டனர். ஆனால் கடலுக்கு சென்ற 2 நாட்களிலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் முழுவதும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    வேலை நிறுத்தம், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் நவம்பர் மாதத்தில் மட்டும் ராமேசுவரம் மீனவர்கள் சில நாட்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர். இதனால் அவர்கள் போதிய வருமானமின்றி தவித்தனர். குடும்பத்தை நடத்த கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். நிலையில்லாத மீன்பிடி தொழிலை நம்பி இருக்க முடியாது என எண்ணிய ராமேசுவரம் மீனவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. வழக்கமாக ராமேசுவரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டிட வேலைக்கு செல்ல குறிப்பிட்ட இடத்தில் தொழிலாளர்கள் குவிவார்கள். அங்கு வந்து வேலைக்கு ஏஜெண்டுகள் ஆட்களை ஏற்றிச்செல்வார்கள்.

    தற்போது கட்டிட வேலைக்கு மீனவர்களும் செல்வதாக தெரிகிறது. இதனால் காலையிலேயே தொழிலாளர்கள் நிற்கும் இடத்தில் மீனவர்களையும் பார்க்க முடிகிறது. அவர்கள் ஏஜெண்டுகளிடம் ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று சென்று வருகின்றனர்.

    இதேபோல் பல மீனவர்கள் மாற்று தொழிலுக்கு வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் நிலை ஏற்பட்டு ள்ளது. இதனால் ராமேசுவரத்தில் வரும் காலங்களில் மீன்பிடி தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×