என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்- மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி
- அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஜெயலலிதா உருவாக்கித்தந்த திட்டங்கள் வருகிற தேர்தலில் வாக்குகளாக மாறும்.
- மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் ஏற்பாட் டில் கழக பூத் கமிட்டி, மகளிர் குழு அமைத்தல், இளை ஞர் மற்றும் இளம்பெண்கள் பாச றைக்கூட்டம் அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சுதா.கே.பரமசிவன் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி பேசியதா வது:-
புரட்சித்தலைவி அம்மா தேசியம் கடந்து உலக மக்கள் அனைவரும் நேசிக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கியவர். ஏழை, எளிய மக்களை நேசித்து அவர்களின் வாழ்வு வளம் பெற செய்தவர். சாதி, மதம் மொழி கடந்து மக்கள் அனை வராலும் நேசிக்கப்படக்கூடிய திறம்பட ஆட்சியை நடத்தியவர்.
அவரது வழியில் வந்த கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் கழகத்தின் கடைநிலை ஊழியராய் வந்து கழகத்தின் பொதுச்செயலா ளராக உருவாகிக்கிறார் என் றால் அவர் கொண்ட விசுவா சமும், உறுதிமிக்க கொள்கையும் தான் காரணம். கழக பொதுச் செயலாளர் எடப்படாடியார் அனைத்தையும் அறிந்தவர். அவரை யாரும் ஏமாற்றவோ, அச்சுறுத்தவோ முடியாது.
ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக விளங்க கூடியவர் எடப்பாடியார் மட்டும் தான். எடப்பாடியார் தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். காவிரி, முல்லை பெரி யாறு அணைகள் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையே நிலைநாட்டியது அம்மா தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது.
ஏழை, எளிய மக்களுக்கும், அன்றாடம் பசியில் வாடுவோ ருக்கும் அம்மா ஏற்படுத்திய நல்ல பல திட்டங்கள் அனைத் தும் வரும் தேர்தலில் நமக்கு வாக்குகளாக மாறும். மேலும் இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள் ஆகியோர்களின் தேவைகளுக்கேற்ப நமது பொதுச் செயலாளர் பார்த்து பார்த்து பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
வரும் தலைமுறையினரின் நோக்கங்களையும், எதிர்பார்ப் புகளையும் நமது கழக பொதுச்செயலாளர் எடப்பாடி யார் நிச்சயம் செய்து தருவார். நாம் பூத் கமிட்டி தெளிவாக அமைப்பதன் மூலம் அதிக உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கழக ஆட்சி மலர நாம் வழி வகுக்கலாம்.
இனி மேலும் தி.மு.க. தலை வர் ஸ்டாலினை நம்புவதை விட்டுவிட்டு நாம் சந்திக்கும் நாளைய நாடாளுமன்ற, சட்ட மன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாய் சிந்தித்து இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண் டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் கவிதா சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்