என் மலர்
நாமக்கல்
- தலைகவசம் அணியாமல் ஹெட்போன் பேசியபடி செல்கின்றன. இதனால் தொடர்ந்து பின்வரும் வாகனம் தெரியாமல் சந்திப்பு சாலையில் கவனிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது.
- நகர்புறங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
நாமக்கல் நகரில் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விதிமுகளை பின்பற்றாமல் செல்வது தொடர்கதையாகி விட்டது. தலைகவசம் அணியாமல் ஹெட்போன் பேசியபடி செல்கின்றன. இதனால் தொடர்ந்து பின்வரும் வாகனம் தெரியாமல் சந்திப்பு சாலையில் கவனிக்காமல் சாலையை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது.போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிப்பதை அறிந்தால் வாகனங்கள் வேகமாக இயக்கி செல்கின்றன. அல்லது மாற்று வழியில் சென்று விடுகின்றன. விபத்துக்களை தவிர்க்க இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நகர்புறங்களில் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர்.
- மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பயன்படுத்துவதால் பொது மக்களுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக வட்டார போக்குவரத்து அதிகாரி முருகேசன், ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, பறக்கும் படையைச் சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் சோதனையிட்டனர். அப்போது பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை அகற்றினர். மேலும் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தினால் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் ராசிபுரத்தில் உள்ள 28 சொகுசு பஸ்களில் 18 பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டு அந்த வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர்ஹாரன்கள், எல்இடி பல்புகள் போன்றவற்றை அதிகாரிகள் அகற்றினர். மேலும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
- சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர்.
- இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டு றவு விற்பனை சங்கத்தில் ஏலம் நடந்து வருவது வழக் கம். நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு முத்துக்காளிப் பட்டி, புதுச்சத்திரம், மசக் காளிப்பட்டி, குட்டலாடம் பட்டி, சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கவுண்டம் பாளையம், அனைப்பாளை யம், வடுகம், குள்ளப்ப நாயக்கனூர், சிங்களாந்த புரம், தேங்கல்பாளையம், கரடியானூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.அதேபோல் ராசிபுரம், ஆத்தூர்,ஈரோடு, சேலம், பெருந்துறை, திருப்பூர், திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்து பருத்தியை ஏலம் எடுத்தனர். ஏலத்திற்கு ஆர்.சி. எச் ரக பருத்தி 960 மூட் டைகளும், சுரபி ரக பருத்தி 67 மூட்டை களும், கொட்டு ரக பருத்தி 2 மூட்டைகளும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் ஆர்.சி.எச். பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரத்து 689 முதல் அதிகப்பட்சமாக 1 குவிண் டால் ரூ. 6 ஆயிரத்து 789-க்கும், சுரபி ரக பருத்தி 1 குவிண்டால் குறைந்த பட்சம் ரூ. 6 ஆயிரத்து 500-க்கும் அதிகப்பட்சமாக 1 குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 100-க்கும், கொட்டு ரக பருத்தி1குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயி ரத்து 200 முதல் அதிக பட்ச மாக 1 குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 800-க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் மொத்தம் 1029 பருத்தி மூட்டைகள் ரூ.22 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
- கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மெயின் கேட் முன்பு தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசு கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ 5 ஆயிரம்உயர்த்தி தரக் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பள்ளி பெருமாள் தலைமை வைத்தார். முன்னாள் மாநில விவசா யிகள் சங்கத் தலைவர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட செய லாளர் பெருமாள், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக குழு இயக்குனர் தனலட்சுமி பாலசுப்ர மணியம் ,தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் ராமநாதன், பாலு, சேகர், நாமக்கல் மாவட்ட கரும்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஜோதி ,சதாசிவம், ராஜேந்திரன், தங்க ரத்தினம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜேடர்பாளையம் கரும்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசா யிகள் கலந்து கொண்டனர்.
- நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
- வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாயகி (வயது 43).
துணை வட்டார
வளர்ச்சி அதிகாரி
இவர் நாமகிரிப்பேட்டை யில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி யாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் ஜோதி செல்வன் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட் பகுதியில் இருசக்கர வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை யில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விட்டனர். வீட்டில் வேறு யாரும் இல்லை.
பீரோ திறந்து கிடந்தது
இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணிக்கு மேல் ஜோதிசெல்வன் சாப்பிடு வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். வழக்கம்போல் வீட்டின் முன்புற கதவை திறந்து உள்ளே சென்றபோது, வீட்டி லிருந்த பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த துணி மணிகள் கலைந்து கிடந்தது. அதை பார்த்த ஜோதி செல் வன்அதிர்ச்சி அடைந்தார். முன்பக்க கதவு திறக்கப்படா மல் இருந்த நிலையில் சுவர் ஏறி குதித்த மர்மநபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். வீட்டின் அறை கதவுகள் திறந்து கிடந்ததால் மர்ம நபர்கள் உள்ளே எளிதாக புகுந்து துணிகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து உள்ளனர்.
28 பவுன் நகை
அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரங்கள், தங்கச் செயின் உள்பட ரூ.12 லட்சம் மதிப்புள்ள 28 பவுன் நகை களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது பற்றி ஜோதிசெல்வன் மனைவிக்கு தகவல் அளித்தார். அவரும் வீட்டுக்கு விரைந்து வந்தார். கொள்ளை சம்பவம் குறித்து லோகநாயகி ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
2 தனிப்படைகள்
நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக் கப்பட்டு தடயங்களை சேகரித்த னர். இதனிடையே கொள்ளை சம்பவத்தை ஈடுபட்ட மர்ம நபர்களை கைது செய்ய ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் ஆகியோர் தலைமையில் 2 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
- குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 5.13 1/2 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.
- தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தர். இவரது மனைவி நித்யா (28 )இவர் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற போது கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மே 13-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஜேடர்பாளையம், அருகே சரள மேட்டில் முத்துச்சாமி என்பவரின் கரும்பாலையில் பணிபுரித்து வந்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் சிமெண்ட் அட்டையால் தடுக்கப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிமெண்ட் அட்டையை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ராஜேஷ்( 19,) சுகிராம்( 29,) எஸ்வந்த்( 18, )கோகுல் (28 )ஆகிய 4 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கரூர் மாவட்டம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்கிற வாலிபர் கடந்த மே 17-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் முக்கிய நபரான கருக்கம்பாளையத்தை சேர்ந்த தீபக், ராகுல் மற்றும் பாகம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரையும் வட மாநிலத்த தொழிலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் உள்ள தீபக், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் குண்டர் சட்டத்தில் கைதான நகல் போலீசாரல் வழங்கப்பட்டது.
- கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது.
- படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.
நாமக்கல்:
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.
இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி) தினசரி பண்ணையில் ரொக்க விற்பனைக்கு மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது.
கடந்த ஜூன் 30-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.5.50 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக முட்டை விலை சரிவடைந்து கடந்த 10-ந் தேதி ஒரு முட்டை விலை ரூ.4.40 ஆனது.
பின்னர் நாள்தோறும் 5 பைசா வீதம் உயர்வடைந்து கடந்த 17-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.65 ஆனது. நேற்று நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை 20 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.45 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
அகில இந்திய என்.இ.சி.சி அறிவிப்பின்படி, இன்னும் 3 நாட்களுக்கு முட்டை விலை இதே நிலையில் நீடிக்கும் என்றும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை விறுவிறுப்பாக இருப்பதால், பண்ணையாளர்கள் யாரும் என்.இ.சி.சி விலையைவிட குறைத்து விற்பனை செய்ய வேண்டாம் என்றும், மண்டல என்.இ.சி.சி. துணைத்தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-520, பர்வாலா-375, பெங்களூரு-505, டெல்லி-418, ஐதராபாத்-455, மும்பை-515, மைசூரு-512, விஜயவாடா-440, ஹொஸ்பேட்-465, கொல்கத்தா-460.
பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.93 ஆக பி.சி.சி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.77 ஆக சிகா நிர்ணயித்து உள்ளது.
- சரோஜா (51) மரூர்ப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
- அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை.
நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள மரூர்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி சரோஜா (51). இவர் கடந்த 15-ந் தேதி மாலை மரூர்ப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க முயற்சி செய்தார். ஆனால் பணம் வரவில்லை.
உதவி
அப்போது, ஏ.டி.எம். மையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம், தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் கூறி பணம் எடுத்துக் கொடுக்குமாறு உதவி கேட்டார். அந்த நபரும் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் போட்டுப் பார்த்து விட்டு, பணம் வரவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரது கையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை, சரோஜாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
மோசடி
சரோஜா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவரிடம் இருந்தது தனது ஏ.டி.எம். கார்டு இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா, வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 500 பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து சரோஜா நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜாவிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து விட்டு பணத்தை எடுத்து மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.
கைது
ஏ.டி.எம் மையத்தில் இருந்த காமிரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணையில் ஈடுபட்ட பேலீசார், மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது நாமக்கல் கொசவம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சிவசண்முகம் (30) என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து மேலும் இதுபோன்று யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.
நாமக்கல்:
தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம்கட்ட முகாம் ஆக.5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.
காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.
நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக 303 முகாம்களுக்கும் என மொத்தம் 914 முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
முகாமில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.
இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் பார்வையிட்டனர்.
- பிரகாஷ் (29) இவர் தனது தந்தையுடன் லாரி தொழில் செய்து வந்தார்.
- கந்தம்பாளையம் அருகே சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் அருகே உள்ள பச்சாக்கவுண்டர் வலசு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரகாஷ் (29). இவர் தனது தந்தை யுடன் லாரி தொழில் செய்து வந்தார்.இவர் புதன் கிழமை இரவு நண்பர்களை பார்த்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கந்தம்பாளையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரத்தில் போலீசார் வைத்து இருந்த தடுப்பில் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே பிரகாஷ் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
- ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட கோரியும் உள்ளாட்சித் துறை நிர்வாகத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நாமக்கல் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.தூய்மை பணி யாளர்களின் ஊதியத்தை குறைப்பதையும், நிரந்தர பணியாளர்களின் எண்ணிக் கையை குறைப்ப தையும், ஒப்பந்த தொழி லாளர் முறையை கைவிட கோரியும் உள்ளாட்சித் துறை நிர்வா கத்தை கண்டித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ஜெயராமன். தலைமை வகித்தார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் .அன்புமணி தொடங்கி வைத்தார். ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் தன சேகரன் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட வெளியீட்டு செயலாளர் ராமகிருஷ்ணன் ஏஐடியுசி மாவட்ட பரப்புரை செய லாளர் ஜெயராமன் ஏஐடி யுசி ஆட்டோ சங்கத் தலை வர் சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்டு நகர செயலா ளர் சுகுமார்.சிபிஐ ஒன்றிய செயலாளர் முனுசாமி வாழ்த்துரை வழங்கினர்.
நன்றியுரை கோபிராஜ் ஏஐடியுசி கட்டட சங்க துணை செயலாளர் கோபி ராஜ் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






