search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது
    X

    மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியது

    • மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு அரசு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்திடும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதற்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ளது. முதற்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் இம்மாதம் 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். 2-ம்கட்ட முகாம் ஆக.5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறும்.

    காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடைபெறும்.

    நாமக்கல் மாவட்டத்தில் விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    முதற்கட்டமாக 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக 303 முகாம்களுக்கும் என மொத்தம் 914 முகாம்களுக்கு பொறுப்பு அலுவலர்களும், 5 முகாமிற்கு 1 மண்டல அலுவலர் என 126 மண்டல அலுவலர்களும், 15 முகாமிற்கு 1 மேற்பார்வை அலுவலர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

    முகாமில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது.

    இந்த பணிகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×