என் மலர்
நாகப்பட்டினம்
- ஒரு ஆண்டாக அங்கு பள்ளம் அப்படியே உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
- பலமுறை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதி கம்புகள் சாய்ந்து உள்ளன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு அருகே மருதூர் மாடிக்கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் நெடுஞ்சாலையின் நடுவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவானது.
இந்த பள்ளத்தை சுற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கம்புகளை நட்டு வேலி போன்று அமைத்து வைத்துள்ளனர்.
ஆனால் பள்ளத்தை சீரமைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அங்கு பள்ளம் அப்படியே உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.
பலமுறை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதி கம்புகள் சாய்ந்து உள்ளன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கிய பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை பொதுமக்களும், வர்த்தக சங்கத்தினரும் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
- குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும்.
- சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம் :
நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரபோஜி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புத்தூரில் தெய பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.
10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக அவுரிதிடலில் சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும், என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
பேரணி அவுரி திடலில் முடிவடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்.
- காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளி களுக்கு ரூ.90,89,347/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட வளர்ச்சி முகமை, சிறப்பாக சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற பணியாளர்களுக்கு ஊரக துறைகளில் நற்சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் செல்வராஜ் எம்பிஅதிகாரிகள் பிரிதிவிராஜ் பானோத் ம்ருகேந்தர்லால்மாவட்ட வருவாய் அலுவலர் சஷிலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
- கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்திலிருந்து அண்ணாட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக வேதாரண்யத்திற்கு கூட்டு குடிநீர் திட்ட குழாய் சென்றடைகிறது.
இந்நிலையில், மருதூர் கடைத்தெருவில் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள செல்லக்கோன் வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.
இதேபோல், பல இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது 3 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது.
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு ஒன்றியத்தில் பல ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு காவல் நிலையம், வட்டார மருத்துவமனை, வட்டார வளர்ச்சி அலுவலகம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட பல அலுவலகங்கள் உள்ளன.
இந்நிலையில், மணக்குடி, ஓரடியம்புலம், நீர்முளை போன்ற கிராமங்கள் இருந்து ஊழியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த ஊரில் இதுவரை ஒரு பஸ் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தலைஞாயிறுக்கு வரும் பஸ்கள் கடைவீதியிலேயே நிறுத்தப்படுகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நேரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தலைஞாயிறில் பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினரும், விவசாய பிரிவு மாநில பொதுச்செயலாளருமான சுர்ஜித் சங்கர் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரம் விநியோகம்.
- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நாகப்பட்டினம்:
இன்று ஜனவரி 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப் படுகிறது.
இதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் துறை முகத்தில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாகை மாவட்ட மீன்வளத்துறை மற்றும் கடற்படை சார்பில் மீனவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாகை கடற்படை முகாமில் இருந்து உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் தலைமையில் விசைப்படையில் கடற்–படையினர், மீன்வளத் துறையினர் சென்று மீனவர்–களிடம் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்த மீன் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை உடனடியாக சேர்க்கவும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதில் நாகை கடற்படை முகாம் கமாண்டர், மீன்வளத்துறை இணை இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
- இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.
இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது.
இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக வெளிமாநில மது விற்பனை நடந்து வந்தது.இதனை கண்காணித்து மது குற்றங்களை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் 9 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை மாவட்டம், கீழையூர் பகுதியில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் வாசுதேவன், உதவி மேலாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஆனந்தம் நகரில் ஆரோக்கிய மேரி என்பவரது வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வீட்டுக்கு வந்த டாஸ்மார்க் அதிகாரிகளை கண்டதும், ஆரோக்கியமேரி தப்பி ஓடினார்.
தொடர்ந்து காலணி வீட்டில் 36 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதுவை மாநில 1824 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சரக்கு வாகனம் மூலம் கொண்டுவரப்பட்ட மதுபாட்டில்களை நாகை மதுவிலக்கு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்துள்ள நிலையில் தப்பியோடிய சாராய வியாபாரி ஆரோக்கியமேரியை தேடி வருகின்றனர்.
- இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
- சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா, மருதூர்தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வட்டார அளவிலான சுகாதார விழா மற்றும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு நாகை செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார்.
சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார், இணை இயக்குனர் அமுதா, கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஒன்றிய குழு உறுப்பினர் மாலதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை, சிவகுரு பாண்டியன், பழனிச்சாமி மற்றும் வருவாய் துறை, சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, முகாம் அரங்கில் காய்கறி பழங்கள் மற்றும் முதல்-அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தொடர்பானவைகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
முகாமில், சுமார் 1000 பேருக்கு மேல் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், மேல் சிகிச்சைக்கான அறிவுரையும் வழங்கப்பட்டது. முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.
- 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள்.
- ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம், வடமழை மணக்காடு, கரியாபட்டினம், பிராந்தியங்கரை உள்ளிட்ட பகுதியில் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் எந்திரம் மூலம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அறுவடை எந்திரம் போதுமானதமாக வராததால் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 100 கூலி கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது.
ஆனால், இந்த ஆண்டு அறுவடை எந்திரம் கூடுதலாக வந்துள்ளதால் தற்போது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1,800 மட்டும் கூலியாக பெறுகின்றனர்.
இந்த ஆண்டு நெல் விளைச்சல நன்றாக இருப்பதாகவும், ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டைகள் வரை நெல் மகசூல் கிடைக்ககிறது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும், அரசு நெல் மூட்டைகளை காலதாமதம் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள்.
- அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் நாகூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அரசியல் சட்ட வரம்பை மீறி சட்டத்தை அவமதித்து தமிழக கவர்னர் செயல்பட கூடாது. கவர்னர் ரவி மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் போன்று செயல்படும் அனைத்து கவர்னர்கள் மீதும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசுகளுக்கு போட்டியாக கவர்னர்கள் தனி அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்களுடைய குறிக்கோள் மாநில அரசுகளுடன் போட்டி போடுவது மட்டும் தான்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். பா.ஜனதாவுக்கு மாநில கட்சிகள் அகில இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் பா.ஜனதாவுக்கு எதிராக மாற்று திட்டத்தை எதிர்க்கட்சியினர் முன்மொழிய வேண்டும்.
ஆனால் எதிர் அணியை அமைக்க நினைக்கும் யாரும் பா.ஜனதாவை எதிர்க்கக்கூடிய மாற்று திட்டத்தை உருவாக்க முன்வரவில்லை.
ஒரே நாடு பாரதம், ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே மதம் இந்து மதம் என்று சொல்லி வரும் பா.ஜனதா, இந்தியாவை இந்து நாடாக மாற்ற துடிக்கிறது. பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் மாற்று திட்டத்தை கையாளாவிட்டால் எதிர்காலத்தில் பா.ஜனதாவை முறியடிக்க முடியாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






