என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
    • பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    தலைஞாயிறு பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சை யின் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலை வர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்.கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினர். பின்னர், அதற்கு பதிலளித்து பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையின் பேசுகையில்:- குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    • மின் அலங்கார ஓலை சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.
    • நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான நாகநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இராகு கேது பரிகார ஸ்தலமான இவ்வாலயத்தின் 27ம் ஆண்டு பிர்மோத்சசவ பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை அடுத்து தியாகேசப் பெருமாள் வசந்த மண்டபம் எழுந்தருளி குதிரை வாகனத்தில் வீதி உலாவும், மின் அலங்கார ஓலச் சப்பரத்தில் ரிஷபம் வாகன காசி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான் திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேரில் திருநாகவள்ளிஅம்மாள் சமேத நாகநாதசுவாமிகள் எழுந்தருளியதும், மாநில மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து மற்றும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். சிவ வாத்தியம், கேரளா மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலும், திருத்தேரோட்டத்தை யொட்டி நாகையில் இருந்து நாகூர் வழியாக காரைக்கால் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள் மாற்று பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

    • கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தகட்டூர் ராமகோவி ந்தன்காட்டில் கருணாநிதி நூற்றாண்டு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் உதயம் முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில விவசாய அணி துணை தலைவருமான வேதரத்தினம், நகர்மன்ற தலைவர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலா ளர் அணி கோவிந்தசாமி அனைவ ரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொடர்ந்து, தி.மு.க. கிளை செயலாளர் ராஜதுரை தி.மு.க. கொடியேற்றினார். இதில் அவை தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராசு உள்ளிட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர், மாவட்ட செயலாளர் கவுதமன் பொது மக்களுக்கு மரக்கன்றுகளும், புடவை, வேஷ்டிகள் வழங்கி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். முடிவில் தி.மு.க. பிரமுகர் பலராமன நன்றி கூறினார்.

    • மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்கிறது.
    • மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

    மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் மின்தட்டுப்பாடு பல மணி நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிக்கல் சிங்காரவேலவர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
    • வருகிற 8-ந் தேதி பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்டுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோவிலில், ஜூலை 5-ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

    இதனால், நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜூலை 5-ம் தேதி ஒருாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஜூலை 8-ம் தேதி சனிக்கி ழமை அன்று பள்ளிகளுக்கு வேலைநாளாக அறிவிக்கப்டுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கரியாப்பட்டினம் அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    பின்னர், மாலை அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், உபயதாரா்கள், திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.

    • காத்திருப்போர் கூடம் அமைக்கும் பணியை முழுமைப்படுத்த வேண்டும்.
    • அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கி முடிவ டைந்து திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது.

    இந்நிலையில் அங்கு சுற்றுச்சுவர், பேவர்பிளாக் நடைபாதை மற்றும் காத்திருப்போர் கூடம் அமைத்து பணியை முழுமை ப்படுத்த வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அங்கு நேரில் ஆய்வு செய்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அப்பணிகள் நடைபெறும் என்றும், விரைவில் அனைத்துப் பணிகளும் முடிந்து ஆரம்ப சுகாதார நிலையம் திறக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    ஆய்வின் போது, திட்டச்சேரி பேரூராட்சி தலைவர் ஆயிஷா சித்தீக்கா, பேரூராட்சி உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், சுல்தான் ரிதாவுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது.
    • சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு சொந்த மான மீன்பிடி விசைப்படகில், கடந்த 27-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ரத்தினவேலு, அறிவரசன், சுரேஷ், விஜய் உள்ளிட்ட 7 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை, கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களது விசைப்படகு, திடீரென பழுதாகி கடலில் மூழ்கத் தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள் அருகில் இருந்த காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வரும் வரை படகில் இருந்த கேன்களை பிடித்துக்கொண்டு நடுக்கடலில் 7 மீனவர்களும் தத்தளித்தனர்.

    பின்னர் படகுகளில் விரைந்து வந்த, காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், கேன்கள் உதவியோடு நடுக்கடலில் தத்தரித்த 7 மீனவர்களையும் 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அவர்களை காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். ஆனால் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான மீன்பிடி விசைப்படகு மற்றும் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் கடலில் மூழ்கியது.

    காரைக்கால் அழைத்து வரப்பட்ட கீச்சாங்குப்பம் மீனவர்களை நாகை மீன்வளத்துறை அதிகாரிகள், கீச்சாங்குப்பம் மீனவ பஞ்சாயத்தார்கள், த.மு.க. மாநில மீனவர் அணி துணை செயலாளர் மனோகரன் ஆகியோர் வரவேற்று நாகப்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக 7 மீனவர்களையும் மீட்ட காரைக்கால் கிளிஞ்சல் மேடு மீனவர்களை அவர்கள் பாராட்டினர்.

    • வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.
    • மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோரப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர்கவஜ் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை துவங்கி இன்று மாலைவரை நடைபெறுகிறது.

    ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி.சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உள்ளிட்ட கடலோர பாதுகாப்பு போலீசார் படகு மூலம் சென்று ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர் .

    வேதாரண்யம் கடலோர மீனவ கிராமங்களான வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு போன்ற மீனவ கிராமங்களில் 40க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர்.

    நேற்று காலை துவங்கிய இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

    கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் சாகர்கவஜ்ஆபரேஷன் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

    • நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்திற்கு மதுகடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மது பானங்களை கடத்தி சென்ற காரைக்காலை சேர்ந்த சரவணன் (37), நாகை அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த தாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராய கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,, சாராய வியாபாரிகளுக்கு மது விற்பனையில்ஈடுபடும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.
    • முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி நடுநிலைப்பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தியது.

    போட்டியில் சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து பதிவு செய்த மாணவர்கள் கலந்து கொண்டனர். முதலாவதாக எழுத்து த்தேர்வு நடைபெற்றது.

    அதில் வெற்றிபெற்ற 10 மாணவர்கள் முதன்மை வினாடி-வினா போட்டியில் கலந்து கொண்டனர்.

    போட்டியில் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி, பன்னாள், மருதூர் தெற்கு, ராஜன்கட்ட ளை ஆகிய அரசினர் உயர்நிலைப்பள்ளிகள், தேத்தாக்குடி-தெற்கு அல்நூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிலிருந்து தலா ஒருவர் வீதம் 5 மாணவர்கள் அடுத்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகப்பட்டினம் மாவட்ட துணைத்தலைவரும், குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான சந்தோஷ் காட்சன் மற்றும் வடமழை கந்தவிலாஸ் அரசு உதவி நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார துணைத்தலைவர் மற்றும் பொறுப்பு செயலாளருமான அறிவொளி ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.

    இதில் வட்டார ஆசிரியர்கள் நந்தினி, செல்வராணி, வீரபாண்டியன், அனிதா மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்படுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க வேதாரண்யம் வட்டார தலைவர் கருப்பம்புலம் சித்திரவேலு செய்திருந்தார்.

    • மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் சீராகுளம் அருகில் வசித்து வரும் மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் அதன் மாநில தலைவர் என்.விஜயராகவன் வழங்கினார்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சீராகுளம் அருகே மக்கள் முன்னேற்ற பொது நல சங்கத்தின் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை எளிய மற்றும் தாய் தந்தையை இழந்த பள்ளி மாணவிகள் கிருஷ்ணவேணி, ஸ்வேதா ஆகியோருக்கு புத்தகப்பை, எழுதுகோல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை சங்கத்தின் மாநில தலைவர் என்.விஜயராகவன் தலைமையில் வழங்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் மற்றும் நிர்வாகிகள் பழனிவேல் தினேஷ்குமார், ராஜீவ் காந்தி கார்த்திக் வாணி கோகிலா அபிராமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    அதேபோல் பண்டா ரவடை, சியாத்தமங்கை எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    ×