என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்மநபர்கள்- போலீசார் விசாரணை
- நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.
கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
Next Story






