என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்மநபர்கள்- போலீசார் விசாரணை
    X

    வீட்டின் முன் நின்ற காரின் டயர்களை கழற்றி சென்ற மர்மநபர்கள்- போலீசார் விசாரணை

    • நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.
    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காந்தி பூங்கா எதிரில் வசிக்கும் முத்துராமன் என்பவர், சொகுசு கார் ஒன்றை வாங்கி, தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், காரின் 4 டயர்களையும் திருடிச் சென்றனர்.

    கார் டயர்கள் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த முத்துராமன், அதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, காரில் வந்து டயர்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    Next Story
    ×