search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்லியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
    X

    செல்லியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.

    செல்லியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

    • செல்லியம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    வேளாங்கண்ணி அருகே உள்ள தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் கோவிலின் 6-ம் ஆண்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக செல்லிஅம்மனுக்கு பால், பன்னீர் , சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் குத்து விளக்கை அம்பாளாக பாவித்து குங்கும அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×