தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?

மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்கிறது. மின்வெட்டு ஏற்படுவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களின் நலன் கருதி குத்தாலத்தில் அமைந்துள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அகரக்கொந்தகையில் இருந்து வாழ்மங்கலம் செல்லும் மின் கம்பிகள் சேதமடைந்து மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் வயல் பகுதியில் காற்று வேகமாக வீசும் போது மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு அறுந்து விழுந்து மின் வெட்டு ஏற்படுகிறது.

மேலும் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்வதால் அடிக்கடி மின்மாற்றில் உள்ள வயர்கள் அறுந்து விடுகிறது.இதனால் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்படுகிறது.அவ்வாறு ஏற்படும் மின்தட்டுப்பாடு பல மணி நேரம் நீடிப்பதால் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும் வாழ்மங்கலம் பகுதி பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு போதிய குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com